Skip to main content

கடவுளை பார்த்துள்ளீர்களா..? அதை போலத்தான் மோடிஜி அவர்களும்..! - ராதாரவி பேச்சு!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
kl;

 

 

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை அவருக்கே உரிய பாணியில் கிண்டலடித்து பேசினார். அவரின் பேச்சு வருமாறு, "தமிழகத்திற்கு பல்வேறு நல்ல திட்டங்களை வகுத்து கொடுத்தவர் ஐயா மோடிஜி அவர்கள். அவருடைய பிறந்தநாள் இந்த 17ம் தேதி கொண்டாடப்பட்டது. அதே தினத்தில் பெரியார் பிறந்ததினம். என்ன செய்வது, ஒரு நல்லது பிறந்தால் ஒரு கெட்டதும் பிறக்கும். இதை சொன்னவுடன் பெரியாரை கெட்டது என்று சொல்கிறார் ராதாரவி என்பார்கள். அப்படி சொன்னால் தவறில்லை. மோடிஜி ஐயா தமிழகத்திற்கு செய்யும் நன்மைகளை பார்த்துத்து தான் நான் பாஜகவில் வந்து சேர்ந்தேன். எனக்கு தெரியும் அவர் மட்டும் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்று. புதிய கல்விக்கொள்கையிலும் மூன்று மொழிகளை கொண்டுவந்தார். அதெல்லாம் மிக நல்லதொரு திட்டங்கள். தொடர்ந்து தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இந்த திட்டங்களை எல்லாம் சிலர் தவறாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் படிக்காதவர்கள். அதனால்தான் அவர்கள் தொடர்ந்து எதிராக பேசி வருகிறார்கள். அதன் நன்மைகளை சொல்ல இங்கே யாரும் தயாராக இல்லை.

 

எனவே வரும் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சாப்பாடு போட்டுவிட்டு வாக்கு கேட்கிறேன் என்று யாரும் தவறாக நினைக்க தேவையில்லை. நான் தமிழகத்தின் கள எதார்த்தத்தை கூறினேன். எனவே பாஜகவை தவிர மற்றொரு கட்சிக்கு வாய்ப்பில்லை. மக்களின் ஏகோபித்த ஆதரவு வரும் தேர்தலில் பாஜகவுக்கு கிடைக்கும். மாணவர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைவரும் நம்பிக்கொண்டிருக்கும் ஒரே நபர் மோடிஜி ஆவர்கள்தான். இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக அவர் இருந்து கொண்டிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் கூட நல்லவர்கள் வர வேண்டும் என்று கூறி இருக்கிறார். அவர் மோடிஜியை நினைத்து கூறியிருப்பதாக கூட நான் நினைத்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் திமுக ஆட்சி வருவதற்கு நடிகர் ரஜினிகாந்த் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார். 

 

பல நல்லவர்கள் பாஜகவில் வந்து சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். சகோதரர் அண்ணாமலை அவர்கள் எல்லாம் பாஜகவில் வந்து சேர்ந்துள்ளார். அவரெல்லாம் ஐபிஎஸ் படித்தவர். சினிமாவில் இருந்து கூட நிறைய பேர் பாஜகவில் வந்து சேர்கிறார்கள். என்னை ஒருவர் மோடிஜியை பார்த்துள்ளீர்களா என்று கேட்டார், நான் அவரிடம் கடவுளை பார்த்துள்ளீர்களா என்று கேட்டேன். அதை போலத்தான் மோடிஜி என்றேன். நான் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாம் இயக்கத்தை மட்டும்தான் படித்துக்கொள்ள வேண்டும். இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். நான் கிறிஸ்துவர்களையோ, முஸ்ஸிம்களையோ பிரித்து சொல்லவில்லை. இந்தியர்களாக இருக்க கூடிய அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றுதான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். சிலர் பிரிவினையை பற்றி எல்லாம் பேசுகிறார்கள். தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று, மூன்று மாநிலங்களிலிருந்து நமக்கு தண்ணீர் வருகின்றது, எனவே விவரம் தெரியாமல் பேசக்கூடாது, பிறகு கழுவ கூட நமக்கு தண்ணீர் இருக்காது. எனவே பாஜக செல்லும் பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.