Skip to main content

பாஜகவின் பாகிஸ்தான் எதிர்ப்பு குறித்து விடை கிடைக்காத 12 கேள்விகள்!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

2017 ஆம் ஆண்டு குஜராத் தேர்தல் சமயத்தில் பாஜகவை தோற்கடிக்க மன்மோகன் சிங் பாகிஸ்தானோடு சேர்ந்து சதி செய்கிறார் என்று பாஜக தலைவர் அமித் ஷாவும் நரேந்திர மோடியும் குற்றம்சாட்டினர்.

 

modi

 

இதையடுத்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா பாஜகவுக்கு 12 கேள்விகளை விடுத்தார். அந்த 12 கேள்விகளுக்கும் இதுவரை பாஜக பதில் அளிக்கவில்லை. பாகிஸ்தானை வைத்து அரசியல் செய்யும் மோடியின் பாஜகவுக்கு பாகிஸ்தானோடு இருக்கும் தொடர்புகளையும் அந்த கேள்விகள் அம்பலப்படுத்தின.

 

குறிப்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் சவ்ரியா தோவல் பாகிஸ்தானில் உள்ள சையது அலி அப்பாஸுடன் இணைந்து வியாபாரம் செய்வது எப்படி என்று காங்கிரஸ் கட்சி வினா எழுப்பியிருந்தது.

 

randeep
ரந்தீப் சுர்ஜிவாலா

 

 

2017-ல் சுர்ஜிவாலா விடுத்த அறிக்கையில் மோடியையும் அமித் ஷாவையும் கடுமையாக சாடியிருந்தார். அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் வியாபார மோசடிகளையும் அவர் விட்டுவைக்கவில்லை. குஜராத்தில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் வெடிவெடித்து கொண்டாடுவார்கள் என்று அமித் ஷா கதறும் அதே வேளையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் சவ்ரியா தோவல் பாகிஸ்தானில் உள்ள சையது அலி அப்பாஸுடனும், சவுதி அரேபியாவில் உள்ள இன்னொருவருடனும் வியாபாரக் கூட்டாளியாக இருப்பதை அமித் ஷா ஏன் விமர்சனம் செய்யவில்லை அல்லது தடுக்கக்கூட இல்லை என்று சுர்ஜிவாலா கேட்டிருந்தார்.

 

அமைதியான, நாகரிகமான சுபாவம் கொண்ட மன்மோகன் சிங் குறித்து இந்தியாவுக்கே நன்றாகத் தெரியும். ஆனால், அவரை மோடியும் அமித் ஷாவும் அநாகரிமாக விமர்சனம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாஜகவின் கடந்த கால பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் பாஜகவை எப்போதும் நம்பமாட்டார்கள் என்ற சுர்ஜிவாலா, மோடிக்கு 12 கேள்விகளை அடுக்கியிருந்தார். அந்தக் கேள்விகளுக்கு இதுவரை பதிலே அளிக்கவில்லை என்பதுதான் இதில் ஹைலைட். அந்தக் கேள்விகள் இதோ…

 

1. சர்வதேச பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிமின் மனைவி 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து மும்பைக்கு எப்படி வந்தார். அவரை கைதுசெய்ய மாநில அரசோ, மத்திய அரசோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

 

2.  தாவூத் இப்ராஹிமுடன் பேசியதற்காக மகாராஸ்டிரா மாநில பாஜக தலைவராகவும் மாநில அமைச்சராகவும் இருந்த ஏக்நாத் கட்ஸேவை பதவியிலிருந்து நீக்கியது உண்மையா பொய்யா?

 

3.   2017 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி நாசிக்கில் நடைபெற்ற தாவூத் இப்ராஹிமின் உறவினர் திருமணத்தில் பாஜகவின் அமைச்சர் கிரிஷ் மகாஜன், தேவ்யானி பரான்டே உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டது எப்படி?

 

4. பதான்கோட் விமானப் படைத்தளத்தில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரிகளை மோடி அரசு எப்படி அனுமதித்தது?

 

5. உதாம்பூரிலும், குர்தாஸ்பூரிலும் பாகிஸ்தான் ஆதரவுபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் அழைப்பே இல்லாமல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீபின் உறவினர் திருமணத்தில் பங்கேற்க மோடி பாகிஸ்தான் சென்றது எப்படி?

 

6.   பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு ரகசியங்களை விற்றதாக பாஜகவின் தொழில்நுட்ப அணியின் தலைவர் துருவ் சக்ஸேனா தலைமையில் 11 பேர் பிடிபட்டது உண்மையா இல்லையா?

 

7. முந்தைய வாஜ்பாய் அரசாங்கத்தில், காந்தகாருக்கு கடத்தப்பட்ட இந்திய விமானத்தை மீட்க ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸார், காஷ்மீர் பயங்கரவாதி முஸ்தாக் ஸர்கார், அவருடைய கூட்டாளி உமர் சையது ஷேக் உள்ளிட்டோரை விமானத்தி்ல் ஆப்கான் கொண்டு போய் ஒப்படைத்தது உண்மைதானே?

 

8.  தீவிரவாதி புர்ஹான் வானி தற்செயலான என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், புர்ஹான் வானி அங்கே இருந்தது பாதுகாப்புப் படையினருக்கு தெரியாது என்று பாஜகவைச் சேர்ந்த காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல்சிங் கூறினாரா இல்லையா?

 

9. புர்ஹான் வானியை கொன்ற பிறகு, அவருடைய குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும், தேவையான உதவியும் செய்வதாக காஷ்மீரில் இருந்த பாஜக கூட்டணி அரசு பேச்சு நடத்தியது உண்மையா இல்லையா?

 

10. காஷ்மீர் மாநிலத்தின் பெண் பிரிவினைவாதி அஷியா அந்த்ராபியை மாநில அரசின் திட்டம் ஒன்றுக்கு தூதராக நியமித்து அவருடைய படத்தை போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்தியது உண்மையா இல்லையா?

 

11.   2017 ஆம் ஆண்டு மே மாதம் காஷ்மீரில் பாஜக தலைவரான நிரஞ்சன் ஹோஜாய் உள்ளிட்ட 15 பேர் மீது தேசிய புலன்விசாரணை ஆணையத்தின் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டது உண்மையா இல்லையா?

 

12.   தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் சவ்ரியா தோவல் பாகிஸ்தானில் உள்ள சையது அலி அப்பாஸுடன் இணைந்து வியாபாரம் செய்வது எப்படி? 

 

 

 

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.