style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
ஜம்மு, சன்னை ராம ட்ரான்சிஸ்ட் கேம்ப்பிலிருந்து (channi rama transit camp) 78 பேருந்துகளில், சுமார் 2500 ஜவான்கள் ஸ்ரீநகர், பக்ஷி ஸ்டேடியம் ட்ரான்சிஸ்ட் கேம்பிற்கு (bakshi stadium transit camp) செல்வதுதான் பயணத்தின் நோக்கம். பிப்ரவரி 14 காலை 3.30 மணிக்கு தொடங்கியது இந்த பயணம்... ஒரே நேரத்தில் எப்படி இத்தனை வீரர்களை அனுப்பினார்கள் என்ற கேள்வி எழலாம். முந்தைய நாட்களிலேயே ஒவ்வொரு பிரிவாக பயணத்தை தொடங்கியிருக்க வேண்டும். அந்த பகுதிகளில் பாதுகாப்பு உறுதிசெய்யப்படாததால் முன்னர் கிளம்ப வேண்டிய பிரிவுகளும் அப்படியே தங்கின. பின்னர் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்பு அனைவரும் புறப்பட்டுள்ளனர்.
கிட்டதட்ட இலக்கை நெருங்கிவிட்டனர், இன்னும் 30 கிலோமீட்டர்களே இருந்தநிலையில், காக்காபோரா, லேல்கர் இணைப்பு சாலையிலிருந்து ஒரு எஸ்.யு.வி. வாகனம், சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் வந்துகொண்டிருந்த சாலைக்கு அருகிலுள்ள சாலையில் வந்தது... சி.ஆர்.பி.எஃப். படை வாகனங்களுக்கு என ஒரு பாதையும், பொதுமக்கள் செல்வதற்கென ஒரு பாதையும் தனித்தனியாக இருந்தது. இரண்டிற்கும் இடையில் செண்டர் மீடியன் (centre median) எனப்படும் இடைவெளி மட்டுமே இருந்தது. மாலை 3.30 மணிக்கு திடீரென அந்த எஸ்.யு.வி. வாகனம் அந்த செண்டர் மீடியனை தாண்டி, ராணுவ வீரர்கள் வந்த 5வது பேருந்தின் இடப்பக்கத்தில் இடித்தது. அப்போது காருக்குள் அதற்குள் இருந்த வெடிபொருட்கள் வெடித்தன. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 45 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அந்த வாகனத்தில் கிட்டதட்ட 150 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
தீவிரவாதிகள் எந்தநேரத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் எங்களுக்குக் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், எந்த இடத்தில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை குறிப்பிட்டுக் கூறவில்லை". என மூத்த அதிகாரி ஒருவர் தி இந்துவிற்கு (ஆங்கிலம்)
பேட்டியளித்துள்ளார்.
மேலும், கடந்த 13 ஆம் தேதி அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு வெளியிட்ட பயண எச்சரிக்கை குறிப்பில், காஷ்மீர் பகுதிக்கு செல்லாதீர்கள், அங்கு ஆயுத சண்டைக்கான வாய்ப்பிருக்கிறது என கூறியுள்ளது. யாரோ சிலரின் கவனக்குறைவு, விலைமதிப்பற்ற உயிர்களை விலையாக பெற்றுள்ளது...
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">