Skip to main content

"பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஜேஎன்யூவில் ஏபிவிபி செய்யும் அட்டூழியத்திற்கு முடிவே இல்லை..." - புதுமடம் ஹலீம் 

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

pudhumadam haleem talks  about jawaharlal nehru university periyar karl markx incident 

 

மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளரும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டி ஒன்றில், "தமிழக மாணவர்கள் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜேஎன்யூ எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் பெரியார் பிறந்த தினம், சட்ட எரிப்பு மாவீரர் தினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சி நடத்தினார்கள். பொதுவாக ஜேஎன்யூ மாணவர் விடுதியில் மாணவர்கள் யார் வேண்டுமானாலும் அவர்களுடைய சித்தாந்தத்தின் அடிப்படையில் விழா நடத்தலாம். அதன்படி தமிழக மாணவர்கள் விழா நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் வேறு ஒரு நிகழ்வாக ஹிந்தி பேசக் கூடிய இடதுசாரி மாணவர்கள் ஹிந்தி சினிமாவை திரையிட இருந்தனர். இதை நடக்க விடக்கூடாது என்று ஏபிவிபி என்ற பாஜகவின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் ஹிந்தி படம் திரையிட இருந்த மாணவர்களோடு தான் முதலில் பிரச்சனை செய்தனர்.  அப்போது தமிழக மாணவர்கள் உடன் பிரச்சனை இல்லை. விழா நடைபெறும் அரங்கத்தில் பெரியார் படம் மாட்டப்பட்டு இருக்கிறது. கார்ல் மார்க்ஸ் படம் மாட்டப்பட்டு இருந்தது. அப்போது இரு தலைவர்களின் படத்தையும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் உடைத்து விட்டார்கள்.

 

இதனைக் கேள்விப்பட்டு தமிழக மாணவர் நாசர் உள்ளிட்டவர்கள் பெரியார் படத்தை உடைத்தது யார் என்று கேட்ட பிறகு ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாசரை அடித்திருக்கிறார்கள். இதனைக் கேட்டு வந்த மற்ற தமிழக மாணவர்களின் மண்டையையும் உடைத்திருக்கிறார்கள். மேலும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரியாரும் எங்களுக்கு எதிரி தான் எனக் கூறி உள்ளனர். அங்குள்ள மாணவர்களில் முப்பது பேர் தான் தமிழக மாணவர்கள். பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மருத்துவ மையம் உள்ளது. சிகிச்சைக்காக  நாசரை அங்கு கூட அழைத்து செல்ல விடவில்லை. மேலும் இங்கே உங்க விழாவை நடத்தக் கூடாது என்று கூறி பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் படங்களை சுக்கு நூறாக உடைத்திருக்கிறார்கள். இதுதான் நடந்த நிகழ்வு. இதனை கேள்விப்பட்டு தான் முதல்வர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

 

ஒவ்வொரு நாளும் இடதுசாரி சிந்தனை உள்ள மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். மார்க்ஸ் சிந்தனை உடையவர்கள், வலதுசாரி கருத்துகளுக்கு எதிராக யாரெல்லாம் பேசுகிறார்களோ, பாஜகவுக்கு எதிராக யார் எல்லாம் பேசுகிறார்களோ அவர்கள் எல்லாம் தாக்கப்படுவது இயல்பாக இருக்கிறது. சத்ரபதி சிவாஜி படம் கிழிக்கப்பட்ட சம்பவத்திற்கும் தமிழக மாணவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அங்கு ஹிந்தி பேசக் கூடிய வலது சாரி மற்றும் இடதுசாரி மாணவர்களிடையே தான்  பிரச்சனை. ஏற்கனவே தமிழக மாணவர்கள் மூன்று நாட்களாக விழா நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதனை நேரடியாக கேட்க முடியாததால் இவ்வாறு பிரச்சனை செய்து பெரியார் படத்தை உடைத்திருக்கிறார்கள். 2014 இல் இருந்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஒன்றிய அரசாக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஜேஎன்யூவில் ஏபிவிபி செய்யும் அட்டூழியத்திற்கு முடிவே இல்லை. ஒவ்வொரு வருடமும் இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்படுவது வாடிக்கையாகத் தான் இருக்கிறது.

 

குடியுரிமை சட்டப் போராட்டத்தின் போது தாக்கப்பட்ட எத்தனையோ பேர் மேல் புகார் அளிக்கப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் போராட்டம் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வழக்கை சந்தித்து வருகிறார்கள். அண்ணாமலை, சத்ரபதி சிவாஜி படம் கிழிக்கப்பட்டதால் தான் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதாக பொய்யை சொல்லுகிறார். பெரியார் படமும், கார்ல் மார்க்ஸ் படங்கள் தான் கிழிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக மாணவர்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாணவர்கள் என்ற பெயரில் குண்டர்கள்  தான் தமிழக மாணவர்களை தாக்கி உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

ஜே.என்.யூ. மாணவர்கள் சங்கத் தேர்தல்; அனைத்து இடங்களையும் கைப்பற்றியது இடதுசாரி கூட்டணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Left-wing alliance wins in JNU student union elections

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி  மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பின் வேட்பாளர் ஜஷே ஜோஷ் வெற்றி பெற்றியிருந்தார்.

இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜே.என்.யூ மாணவர்கள் சங்கத் தேர்தல் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் உள்பட 4 பதவிகளையும் இடதுசாரி மாணவர்கள் அமைப்பு கைப்பற்றியுள்ளது. தலைவர் தேர்தலில் ஏ.பி.வி.பி. கட்சியின் உமேஷ் சந்திர ஆஜ்மீராவை தோற்கடித்து இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த பட்டியலின மாணவர் தனஞ்செய் 2,598 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.   

கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பட்டி லால் பாயிர்வா என்ற பட்டியலின மாணவர் ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரான நிலையில், தற்போது 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பட்டியலின மாணவர் தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி) அனைத்து பதவிக்கான போட்டியிலும் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.