Skip to main content

"10 சதவீத இட ஒதுக்கீட்டில் பாஜகவின் வஞ்சக அரசியல் ; இட ஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையில் இருப்பதை உடைக்கணும் என்பதே..." - புதுமடம் ஹலீம்

Published on 14/11/2022 | Edited on 15/11/2022

 

ரதக

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்குக் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக புதுமடம் ஹலீமிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது தற்போது பொருளாதார ரீதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் காலங்காலமாக இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி சார்ந்ததாகவே இன்றளவும் இருந்து வருகிறது. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது இதுவரை இருந்ததில்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் இவை. இதில் தற்போது சூழ்ச்சி செய்யப் பார்க்கிறார்கள். விளிம்பு நிலை மக்கள் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் தற்போது பொருளாதாரத்தின் அடிப்படையில் கொண்டு செல்லப்பட்டால் இட ஒதுக்கீட்டின் அடிநாதமே சிதைந்துவிடும். 

 

இந்தியாவிலேயே இட ஒதுக்கீடு என்பது மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் 69 சதவீத இட ஒதுக்கீடு என்பது அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருக்கும் இட ஒதுக்கீடு. எந்த மாநிலத்திலும் இதை இன்றளவும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இந்த இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தாலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தமிழகம் எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம், பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு என்பது எந்த வகையில் சரியான ஒன்று என்றே கேட்கிறோம். இது மிகத் தவறான உதாரணமாக இருக்கப்போகிறது என்ற அடிப்படையில் அதனை எதிர்க்கிறோம். 

 

வட இந்தியாவில் இந்த இட ஒதுக்கீட்டிற்குக் காங்கிரஸ் பாஜக இரண்டு பேருமே ஆதரிக்கிறார்கள். வட இந்தியாவில் அவர்கள் இந்த இட ஒதுக்கீட்டிற்காக யாரும் போராடப் போவதில்லை. அங்கே குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயர் சாதியினர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் குறி வைத்தே இந்த இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி சார்ந்தே இருந்து வந்துள்ளது. பொருளாதார அளவீடுகள் என்பதே நம்மிடம் இட ஒதுக்கீட்டில் இதுவரை இருந்ததில்லை. அதனால் இந்தப் பிரச்சனை தமிழகம் இதுவரை பார்த்திராத புதிய பிரச்சனையை மத்திய அரசு இதன் மூலம் கொண்டு வந்துள்ளது. 

இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தைக் கொண்டு வந்தால் சமூகநீதி கோட்பாடே சிதைந்து போய்விடும். தற்போது தமிழகத்தில் இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தமாட்டோம் என்று கூறியுள்ளார்கள். ஏற்கனவே உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையைத்தான் நாங்கள் பின்பற்றுவோம் என்று தமிழக அரசு தெளிவாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் தேசிய அளவில் ஆதரிக்கிறது. தமிழகத்தில் எதிர்க்கிறதே என்ற கேள்வி கூட வருகிறது. மாநிலங்களுக்கு மாநிலம் இது வேறுபடுகிறது. கேரளாவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எதிரணியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒன்றாக இருக்கிறார்கள். இதை வட மாநிலத்தில் எதிர்த்தால் வாக்கு பாதிக்கப்படுமென நினைக்கிறார்கள்.

 


இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் கூட ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் 77 சதவீதம் இட ஒதுக்கீட்டை அதிகரித்து அதில் 10 சதவீதம் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். பாஜகவின் நோக்கம் இதுதான். நீங்கள் எத்தனை சதவீதம் வேண்டுமானாலும் அதிகரித்துக் கொள்ளுங்கள்; ஆனால் சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதை நீக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளார்கள். இவர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இதை நீதிமன்றம் வரைக் கொண்டு சென்று அனுமதி வாங்கி இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்தாலே அவர்களின் அரசியல் நமக்குத் தெரிய வரும்.

 


 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.