Skip to main content

"10 சதவீத இட ஒதுக்கீட்டில் பாஜகவின் வஞ்சக அரசியல் ; இட ஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையில் இருப்பதை உடைக்கணும் என்பதே..." - புதுமடம் ஹலீம்

Published on 14/11/2022 | Edited on 15/11/2022

 

ரதக

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்குக் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக புதுமடம் ஹலீமிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது தற்போது பொருளாதார ரீதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் காலங்காலமாக இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி சார்ந்ததாகவே இன்றளவும் இருந்து வருகிறது. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது இதுவரை இருந்ததில்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் இவை. இதில் தற்போது சூழ்ச்சி செய்யப் பார்க்கிறார்கள். விளிம்பு நிலை மக்கள் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் தற்போது பொருளாதாரத்தின் அடிப்படையில் கொண்டு செல்லப்பட்டால் இட ஒதுக்கீட்டின் அடிநாதமே சிதைந்துவிடும். 

 

இந்தியாவிலேயே இட ஒதுக்கீடு என்பது மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் 69 சதவீத இட ஒதுக்கீடு என்பது அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருக்கும் இட ஒதுக்கீடு. எந்த மாநிலத்திலும் இதை இன்றளவும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இந்த இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தாலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தமிழகம் எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம், பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு என்பது எந்த வகையில் சரியான ஒன்று என்றே கேட்கிறோம். இது மிகத் தவறான உதாரணமாக இருக்கப்போகிறது என்ற அடிப்படையில் அதனை எதிர்க்கிறோம். 

 

வட இந்தியாவில் இந்த இட ஒதுக்கீட்டிற்குக் காங்கிரஸ் பாஜக இரண்டு பேருமே ஆதரிக்கிறார்கள். வட இந்தியாவில் அவர்கள் இந்த இட ஒதுக்கீட்டிற்காக யாரும் போராடப் போவதில்லை. அங்கே குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயர் சாதியினர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் குறி வைத்தே இந்த இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி சார்ந்தே இருந்து வந்துள்ளது. பொருளாதார அளவீடுகள் என்பதே நம்மிடம் இட ஒதுக்கீட்டில் இதுவரை இருந்ததில்லை. அதனால் இந்தப் பிரச்சனை தமிழகம் இதுவரை பார்த்திராத புதிய பிரச்சனையை மத்திய அரசு இதன் மூலம் கொண்டு வந்துள்ளது. 

இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தைக் கொண்டு வந்தால் சமூகநீதி கோட்பாடே சிதைந்து போய்விடும். தற்போது தமிழகத்தில் இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தமாட்டோம் என்று கூறியுள்ளார்கள். ஏற்கனவே உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையைத்தான் நாங்கள் பின்பற்றுவோம் என்று தமிழக அரசு தெளிவாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் தேசிய அளவில் ஆதரிக்கிறது. தமிழகத்தில் எதிர்க்கிறதே என்ற கேள்வி கூட வருகிறது. மாநிலங்களுக்கு மாநிலம் இது வேறுபடுகிறது. கேரளாவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எதிரணியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒன்றாக இருக்கிறார்கள். இதை வட மாநிலத்தில் எதிர்த்தால் வாக்கு பாதிக்கப்படுமென நினைக்கிறார்கள்.

 


இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் கூட ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் 77 சதவீதம் இட ஒதுக்கீட்டை அதிகரித்து அதில் 10 சதவீதம் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். பாஜகவின் நோக்கம் இதுதான். நீங்கள் எத்தனை சதவீதம் வேண்டுமானாலும் அதிகரித்துக் கொள்ளுங்கள்; ஆனால் சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதை நீக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளார்கள். இவர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இதை நீதிமன்றம் வரைக் கொண்டு சென்று அனுமதி வாங்கி இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்தாலே அவர்களின் அரசியல் நமக்குத் தெரிய வரும்.

 


 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Question by Dimple Yadav on Who snatched the thali of the soldiers' wives?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.