Skip to main content

“ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செய்வது தவறு; மத்திய அரசே இப்போது கூறிவிட்டது” - புதுமடம் ஹலீம்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

 Pudhumadam Haleem Interview  

 

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக மாநில அரசே சட்டம் கொண்டு வரலாம் என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து தன்னுடைய கருத்துகளை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் மத்திய அரசு சரண்டராகி விட்டது. ஆளுநரைக் காப்பாற்ற முடிவு செய்துவிட்டனர். ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டம் முதலில் அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. ரம்மி கம்பெனிகள் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றபோது, சட்டச்சிக்கல்களை நீக்கிவிட்டு சட்டம் இயற்றலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளுமே குரல் கொடுத்தன. அதன் அடிப்படையில் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்தை திமுக அரசு உருவாக்கியது.

 

அவசர சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக அனுமதி கொடுத்தார். அதன்பிறகு சட்ட முன்வடிவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது அரசு. ஆனால் அதற்கு ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. ஆளுநர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அரசு பதிலளித்துவிட்டது. ஆனாலும் இன்றும் ஆளுநர் இந்த சட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுக்கிறார். இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று கூறி ஆளுநர் திருப்பி அனுப்பினார். இப்போது மத்திய அமைச்சர் மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது என்று பாராளுமன்றத்தில் கூறிவிட்டார். 

 

ஆளுநர் செய்தது தவறு என்பதை மத்திய அரசே இப்போது கூறிவிட்டது. அரசியலமைப்பு சட்டத்தின்படி இரண்டாவது முறை சட்டம் இயற்றி அரசு அனுப்பி வைத்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துத்தான் ஆக வேண்டும். ஆன்லைன் ரம்மியால் இவ்வளவு தற்கொலைகள் நடந்த பிறகும் ஆளுநர் அனுமதி அளிக்காமல் இருக்கிறார். மத்திய அரசும் ஜனாதிபதியும் ஆளுநருக்கு எந்த அறிவுரையும் வழங்கவில்லை. ஆனால், அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசுதான் ஆளுநரை இயக்கி வருகிறது.

 

மத்திய அரசு கைவிரித்து விட்டதால் இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. இதுவரை பல மாநிலங்களில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசே கூறுகிறது. சட்டமே தெரியாத ஒரு ஆளுநர் நமக்குத் தேவையா? இந்நேரம் இதில் ஜனாதிபதி தலையிட்டு ஆளுநரைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இப்போது தமிழ்நாடு அரசு மீண்டும் அதே சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்ப வேண்டும். ஆளுநர் அதில் கையெழுத்திட்டே ஆக வேண்டும். அவர் அதைச் செய்யவில்லை என்றால் உச்சநீதிமன்றம் மூலம் இந்தச் சட்டம் நிறைவேறும். அது ஆளுநரின் பதவிக்கே ஆபத்தாக முடியலாம்.

 

 

Next Story

குரூப் 2 பணியிடங்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Interview for Group 2 posts from today

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் இன்று (12.02.2024) முதல் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“நல்ல இயக்குநர்கள் கிடைத்தது எனக்கு லக்கி தான்” - நிவேதிதா சதீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Nivedhithaa Sathish Interview

சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.  அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன். 

ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க. 

இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.