Skip to main content

சாதி வெறியின் அடையாளம் காயத்ரி ரகுராம் - பேராசிரியர் சுந்தரவள்ளி பொளேர்!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

சில தினங்களாக நடிகை காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரை மையப்படுத்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறாள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மகளிர் அணியினர் அவரது வீட்டை நேற்று முற்றுகையிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

ஒடுக்கப்பட்ட மக்களையும் கடந்து அனைத்து ஜாதியினரையும் ஒரு பொது நீரோட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து பாடுபடுபவர் எழுச்சி தமிழர் திருமாவளவன். அவர் இந்து கடவுள்களை அவமானப்படுத்திவிட்டார் என்று கூறி அவருக்கு எதிராக கருத்துக்களை எதனடிப்படையில் தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மணிமேகலை காப்பியத்தில் ஆபுத்திரன் என்ற பகுதியில் இந்து கடவுள்களை பற்றி என்ன போட்டிருக்கிறது என்று யாராவது அவரிடம் எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும். கேட்பதற்கு அருவருப்பாக இருக்கும் வகையில் பல்வேறு தகவல்கள் இந்து கடவுள்களை பற்றி அதில் இருக்கும். திருமா ஒன்றும் இல்லாத தகவல்களை சொல்லவில்லை. ஆதாரத்தை கூட நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் போய் தெரிந்துகொள்ளுங்கள். சங்கிகள் ஒரு முடிவோடு தற்போது களத்தில் இறங்கியுள்ளார்கள். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேற போவதில்லை. அவரின் வீட்டை முற்றுகையிட்டது தவறு என்று சொல்ல முடியாது. அவர் கருத்தியல் ரீதியாக மோதினால் பதில் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், ஒன்டிக்கொண்டி வரியா என்று சவால் விட்டால் எல்லா தொண்டர்களும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று நாம் நினைக்க முடியாது அல்லவா. 
 

vbn



அதுவும் காயத்ரி போன்ற அரசியல் அறிவு கொண்டவர்களுக்கு எப்போதும் இந்த மாதிரியான புரிதல்களே அதிகம் இருக்கும். அவர்களுக்கு தலித்துகளுக்கும், இடைநிலை சாதியினருக்கும் ஒரு சண்டை ஏற்படுத்தவே அதிகம் விரும்புவார்கள். அதன் வெளிப்பாடே திருமாவளவன் விஷயத்தில் மருத்துவர் ராமதாலை துணைக்கு கூப்பிட்ட நிகழ்வு காட்டுகிறது. இதைத்தான் பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறியிருந்தார். பார்ப்பனர்களின் எண்ணம் நமக்குள்ளேயே கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் குளிர் காயலாம் என்று நினைப்பார்கள் என்று கூறியிருந்தார். அன்று அவர் சொன்ன விஷயங்களை தற்போது காயத்ரி நடைமுறை படுத்துகிறார். நாம் எல்லாம் சேர்ந்து அவர்களை துரத்தாதன் விளைவு அவர்கள் தற்போது நம்மை பிரித்தாள முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சி ஒருபோதும் பலிக்கபோவதில்லை. அவர்களின் எண்ணமும் நிறைவேற போவதில்லை என்பதே உண்மை. பெரியார் மண்ணில் அவர்களின் சூழ்ச்சி இருக்கும் இடம்தெரியாமல் போகப்போகிறது என்பது மட்டும் நிஜம்.

 


 

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.