Skip to main content

பிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்தது விவசாயிகளின் வருமானம் அல்ல...!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

farmer delhi chalo

 

 

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்கிற பேரணியை நேற்று முன் தினம் தொடங்கினர். இதில் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் ஹரியானா வழியாக டெல்லியை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டு, ஹரியானாவில் நுழையும்போது பல்லாயிரக் கணக்கான விவசாயிகளுக்கும் ஹரியானா போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அவர்களை ஹரியானாவுக்கு நுழையவிடாமல் தடுக்க அந்த மாநில அரசு முயன்றது. விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இது தொடர்பாக 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், தடைகளை உடைத்து ஹரியானா விவசாயிகளுடன் பஞ்சாப் விவசாயிகள் கைகோர்த்து பேரணியை தொடங்கினர். இரண்டாம் நாளான நேற்று டெல்லியை நெருங்கும் சமயத்தில், அவர்களை டெல்லிக்குள் அனுமதிக்கவிடாமல் ஹரியானா எல்லைப்பகுதியிலேயே தடுத்து நிறுத்தி வைத்தனர். மீண்டும் போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே நேற்று காலை மோதல் வெடித்தது. டெல்லி எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவியது. திடீரென, விவசாயிகளுக்கு உள்ளே நுழைய அனுமதி வழங்கியது டெல்லி போலீஸ். டெல்லி திக்ரி எல்லைப் பகுதியில் விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட, போலீஸார் மீண்டும் தடியடி நடத்தியும், தண்னீர் பீய்ச்சியும் விவசாயிகளை அடித்து விரட்டினர்.

 

அதன்பின் டெல்லி புராரி பகுதியிலுள்ள மைதானத்தில் அமைதியான வழியில் போராட்டங்களை நடத்திக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் ஆங்காங்கே வாகனங்களுடன் விவசாயிகள் கூடியிருந்ததால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. விவசாயிகளின் போராட்டத்தால் நெற்று டெல்லி போக்குவரத்து நிலைகுழைந்துவிட்டது. இதனிடையே, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று கூறும்போது, “விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்றார். ஏற்கனவே கடந்த 13ஆம் தேதி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் விவசாயிகள் சார்பாக ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப் படாததால்தான் அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்த பஞ்சாப், ஹரியானா, உ.பி, உத்தரகாண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமான டிராக்டர், லாரிகளில் நேற்று முன் தினம் இந்த டெல்லி சலோ என்கிற முழக்கத்துடன் பேரணியை தொடங்கியுள்ளனர். தற்போது வரையில் இந்த விவசாயிகளின் போராட்டம், போலீஸாரின் தடியடியால் டெல்லியே பதற்றத்தில் இருக்கிறது. இன்று டெல்லியில் மட்டும் 3 லட்சம் விவசாயிகள் கூடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனை தடுப்பதற்காக அந்தந்த மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, சில ரயில்கள் வேறு பாதையில் அனுப்பப்பட்டுள்ளன, சில ரயில்கள் பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

 

விவசாயிகளின் இந்த போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர டெல்லி போலீஸாருடன் சிஐஎஸ்எஃப் உட்பட பல்வேறு படைகளைச் சேர்ந்த வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த போராட்டத்திற்கு இந்தியா முழுவதிலும் விவசாயிகளிடமிருந்து ஆதரவு பெருகி வருகிறது. ஒருசில முக்கிய விவசாய சங்க தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்தவர்களை வீட்டு காவலில் போலீஸ் வைத்துள்ளது. என்சிஆர்பியின் கணக்குப்படி மோடி இந்தியாவின் பிரதமரானபின் விவசாயிகளின் போராட்டம் மலமலவென உயர்ந்திருப்பது தெரிய வருகிறது. 2014 முதல் 2016 என்கிற இடைப்பட்ட காலத்தில் மட்டும் சட்டத்தை மீறிய விவசாயிகள் நடத்தும் போராட்டம் 628லிருந்து 4837ஆக அதிகரித்துள்ளது. சுமார் 700 சதவீதம் இரண்டு வருடங்களில் உயர்ந்திருப்பதாக தெரிகிறது. தன்னுடைய ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று பிரச்சாரங்களில் பேசி விவசாயிகளின் நம்பிக்கைக்கு பயிரிட்ட நரேந்திர மோடி. வெற்றிபெற்ற பின்னர் விவசாயிகளுக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பெரிதும் உழைத்ததாக தெரியவில்லை. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாய மாநாட்டில், காணொளி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, “2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க அரசு உறுதி எடுத்துள்ளது” என்று பேசினார். அதன்மீது நம்பிக்கை வைத்த விவசாயிகளுக்கு, பேரதிர்ச்சியாக அமைந்தது புதிய வேளாண் திருத்த சட்டம், போராட்டம் பல மடங்காக இரட்டிப்பாகியுள்ளது என்பது வருத்தமான விஷயமே. தொடக்கத்தில் சிறு சிறு ஆர்ப்பாட்டங்களாக இருந்துவந்த விவசாயிகளின் போராட்டங்கள் தற்போது மத்திய அரசுடனான நேரடி போராட்டமாக மாறி இருப்பதனால்தான் தெருக்களிலிருந்து டெல்லியை நோக்கிய பயணமாக கடந்த இரண்டாண்டில் மாறியிருக்கிறது.

 

(மேற்குறிப்பிட்ட 700 சதவீத விவசாய போராட்டம் அதிகரிப்பு என்பது 2014 முதல் 2016 வரை மட்டுமே. இன்னும் 2017 முதல் தற்போது வரையிலான போராட்டங்களின் எண்ணிக்கை அதிகமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.)

 

 

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.