Skip to main content

“பிரதமர் எனக்கு உத்தரவிட்டுள்ளார்..” - ஆளுநர் ஆர்.என்.ரவி

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

"Prime Minister has ordered me.." - Governor RN Ravi

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மாணவர்கள் நடுவே பேசும்போதெல்லாம் பிரதமரின் பெருமை பேசி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, “உங்களுக்கென தனி சட்டமன்றத் தொகுதி, தனி பாராளுமன்றத் தொகுதி, தனி ஊராட்சி என முன்னெடுப்போம். பிரதமர் இதற்கு ஆவன செய்வார்” என மீனவர்களிடம் உசுப்பிவிட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

 

தூத்துக்குடி பனிமய மாதா பேராலாயத்திற்குட்பட்ட ஸ்நோ ஹாலில் மீனவர் தின வெள்ளி விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. “மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகிய முக்கியஸ்தர்களையும், குறிப்பாக உள்ளூர் எம்.எல்.ஏ.க்களையும் அழைக்கக்கூடாது என்கின்ற நிபந்தனையுடன்தான் நிகழ்ச்சிக்கு வரவே ஒப்புக்கொண்டார் ஆளுநர்” என்றார் குமரி மாவட்டத்தினைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர்.

 

விழா அரங்கிற்கு வந்த வேகத்திலேயே, விழா ஏற்பாட்டாளர்களால் முன்னரே தேர்வு செய்யப்பட்ட மீனவ சுதந்திர போராட்ட தியாகிகளின் பிள்ளைகளுக்கு விருதுகள், மீனவ ஆளுமைகள் விருது மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் விருதுகளை வழங்கி கௌரவித்தார். பின்னர் உரையாற்றத் துவங்கிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி., “உலக மீனவர் தினத்தில் உங்களுடன் கலந்துகொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இரண்டு மாதத்திற்கு முன்னால் செப்டம்பர் 21-ம் தேதி உங்களிடம் குறைகளைக் கேட்டறிந்தேன். நீங்கள் வைத்த கோரிக்கையை நான் நிறைவேற்றித் தருவேன். நாட்டினை பாதுகாக்க எவ்வளவு படைகள் இருந்தாலும் கடலைப் பாதுகாக்க நீங்கள் இருக்கிறீர்கள். மரைன் போலீசில் மீனவ இளைஞர்கள் பங்குபெற வேண்டும். உங்களை கடலோர காவல்படையில் சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன். மீனவ சமுதாயத்தில் சரியான பிரதிநிதித்துவம் இல்லாததால் சட்டமன்றம், பாராளுமன்றம், பஞ்சாயத்தில் பின்னடைந்து வருகிறது. உங்களுக்கென தனித் தொகுதிகளை வாங்கித்தருவேன். பாரத பிரதமர் உங்களுக்கு செய்யவேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும் என உத்தரவு போட்டுள்ளார்” எனப் பேசி மீனவ மக்களை உசுப்பிவிட்டார்.

 

"Prime Minister has ordered me.." - Governor RN Ravi

 

தொடர்ச்சியாக அங்கிருந்து புறப்பட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பனிமய மாதா கோவிலிற்குள் செல்ல, அவரை வரவேற்று பனிமய மாதா திருவுருவ படத்தை அளித்தது கோவில் நிர்வாகம். அங்கிருந்து புறப்பட்டு எஸ்.ஆர்.எம். தனியார் ஹாலில் விசைப்படகு மீனவர்கள் ஏற்பாடு செய்திருந்த இன்டோர் மீட்டிங்கில் கலந்துகொண்டார். செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத அந்த இன்டோர் மீட்டிங்கில், “நீங்கள் எனக்கு சப்போர்ட் செய்யுங்கள். உங்களுடைய கோரிக்கைகளை நானும், பிரதமரும் நிறைவேற்றித் தருகின்றோம்” என வாக்குறுதி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆற்றவேண்டிய கட்சிக் கடமைகளை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. செய்துவருவது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

 

 

 

 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.