Skip to main content

பிரதமர்-கவர்னர் சந்திப்பு!  பதட்டத்தில் எடப்பாடி!

Published on 08/12/2018 | Edited on 08/12/2018

                                

modi


 

பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும் சந்தித்து விவாதித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்! இந்த சந்திப்பைத் தொடர்ந்து எடப்பாடி தரப்பில் ஏகத்துக்கும் பதட்டம் தெரிகிறது. 

 

காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணையை கட்டுவதற்கான திட்ட வரையறைக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் முடிவை கண்டிக்கும் வகையில், மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானத்தை கடந்த 6-ந்தேதி நிறைவேற்றியது எடப்பாடி அரசு.
 


மத்திய மோடி அரசை நேரடியாக பகைத்துக்கொள்ளும் வகையில் இதுவரை எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை முதல்வர் எடப்பாடி. ஏன், கடிதம் கூட கண்டித்து எழுதப்பட்டதில்லை. அப்படிப்பட்ட சூழலில், கர்நாடக அரசு கட்டத்துடிக்கும் மேகதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. உடனடியாக இந்த தீர்மானம் டெல்லிக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 

 

இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை (7-ந் தேதி) பிற்பகலில் டெல்லிக்கு விரைந்து பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் கவர்னர் பன்வாரிலால். 

 

அவரது டெல்லி பயணம் குறித்து விசாரித்தபோது, ’’ மோடி அரசுக்கு தெரிவிக்கும் தீர்மானமாகட்டும், எழுதப்படும் கடிதமாகட்டும் மத்திய அரசை கண்டிக்கும் வகையில் இது வரை வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை எடப்பாடி பழனிச்சாமி. முதன்முறையாக கண்டன வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இதனை மத்திய அரசு ஜீரணிக்கவில்லை. சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி, மோடியை சந்தித்து வைக்கப்பட்ட தனிப்பட்ட கோரிக்கைகளிலும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதனால், மத்திய அரசு தன்னைப் புறக்கணிப்பதாக கருதுகிறார் அவர். இந்த நிலையில், தமிழக நலன்களுக்கு எதிரான விசயத்தில் மென்மையானப் போக்கினை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என தீர்மானித்ததன் விளைவுதான் மத்திய அரசை தீர்மான வடிவில் எதிர்க்கத் துவங்கியிருக்கிறார் எடப்பாடி. இதனை மோடி அரசு எதிர்ப்பார்க்கவில்லை. இந்த நிலையில்தான் கவர்னரை டெல்லி அழைத்தது.

 

eps



 
தன்னை சந்தித்த கவர்னரிடம், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் ட்ராப்ட் உங்களுக்கு முன்கூட்டி காட்டப்பட்டதா? தீர்மானத்தின் வரிகளைப் படித்துப் பார்த்தீர்களா? என கேட்டிருக்கிறார் பிரதமர் மோடி. அதற்கு கவர்னர், மேகதாது அணைக்கான ஒப்புதலை தந்த மத்திய அமைச்சகத்தின் முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதற்கான தீர்மானம்தான் நிறைவேற்றப்படவிருக்கிறது என முதல்வர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. கண்டனம் தெரிவிப்பதாக என்னிடம் சொல்லவில்லை என தெரிவித்திருக்கிறார். 

 

இதனையடுத்து மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து கேட்டறிந்தார் மோடி. அப்போது, கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துமளவுக்கு நிலைமை தமிழகத்தில் இருப்பதையும் சமீபத்தில், 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தையும் விவரித்துள்ளார் கவர்னர்.  மேலும், வைகோ உள்ளிட்ட பலர் மீது காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டிருப்பதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் கவர்னர். 
 

rajnathwsigh



அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரதமர், ராஜ்நாத்தை சந்தித்து விவாதித்துவிட்டு சென்னைக்கு செல்லுங்கள் என கவர்னருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜ்நாத்தை சந்தித்தார் கவர்னர். இந்த சந்திப்பில், தமிழக அமைச்சர்கள் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு சேகரித்து வைத்துள்ள தகவல்கள், முதல்வர் எடப்பாடிக்கு எதிராக சு.சாமி கொடுத்துள்ள புகார், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு , 7 பேர் விடுதலை என பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது ‘’ என விரிவாக சுட்டிக்காட்டுகின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள். 

 

’’எடப்பாடி அரசுக்கு எதிராக சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவே இந்த சந்திப்பு உணர்த்துகிறது. இனி வரும் நாட்கள் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும்‘’  என்கிறார்கள் தமிழக தலைமைச்செயலக அதிகாரிகள்.  இதற்கிடையே, கவர்னரின் டெல்லி பயணத்தில் நடந்தவைகளை அறிந்து கொள்ள டெல்லியிலுள்ள சோர்ஸ்களை அணுகியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
 

 

 

 

 


 

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

“எடப்பாடி பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் மறக்க மாட்டார்கள்” - திமுக காட்டம்! 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டம், உதய்மின் திட்டம் போன்ற பா.ஜ.க. அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிகையில், “எடப்பாடி பழனிசாமி ஏறத்தாழ நான்கு ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ அவரால் சிறு பயனும் இல்லை. அவரால் பயன் கூட வேண்டாம். அவர் பாதகம் செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா. பதவி சுகத்தை அனுபவித்தார். ஆனால், தமிழர்களுக்குப் பாதகங்கள் பல செய்தார். எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல், தன்னெழுச்சியாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் திரண்டு பல மாதங்கள் போராடினார்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்குப் புற்றுநோய் முதலான கொடிய நோய்கள் ஏற்பட்டு, அவர்கள் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி திரண்டு எழுந்து போராடினார்கள். அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது பழனிச்சாமியின் காவல்துறை. ஒரு பெண்ணின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். ஒரு தந்தை கண் எதிரே அவர் மகன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தக் காட்சிகளை எல்லாம் கண்ட மக்கள் பதறினார்கள். இந்தக் கொடுமைகள் குறித்து அப்போதைய முதலமைச்சர் பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தொலைக்காட்சியில் பார்த்துத்தான் நான் தெரிந்து கொண்டேன் என்றார் நிதானமாக. ஒரு முதலமைச்சர் இப்படிக் கூறியது நியாயமா?. அந்தக் கொடிய துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா தலைமையிலான ஆணையம் அந்தச் சம்பவம் குறித்து ஏற்கெனவே அவருக்குத் தெரியும் என்று கூறி, பழனிசாமியின் பொய்முகத்தை வெளிப்படுத்தியது.

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைகள் :

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

பொள்ளாச்சியில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள், 200க்கும் மேற்பட்ட மகளிரை மிரட்டி, கற்பழித்து கொடுமைகளுக்கு ஆளாக்கினர். மகளிர் சங்கங்கள் போராடின. பாதிக்கப்பட்ட மகளிர் கூறியும் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் பழனிசாமி.

நீட் தேர்வை அனுமதித்த பழனிசாமி : 

அரியலூர் அனிதா முதல் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களும் மகளிரும் தற்கொலை செய்து கொண்ட கொடுமைகளுக்குக் காரணமானவர் பழனிசாமி. அவர் தான் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவர். ஜெயலலிதா இருந்தவரை நீட்தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. ஆனால் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவரும் பழனிசாமிதானே.

உதய் மின் திட்டத்தை அனுமதித்தவரும் பழனிசாமியே :

உதய் மின் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு நன்மை இல்லை. தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநிலங்கள் வாங்க வேண்டும். தனியார் மின் நிறுவனங்கள் மின்சாரத்தை மாநிலங்களில் விற்பனை செய்து, வங்கியில் வாங்கிய கடன்களைச் செலுத்தி அவை லாபம் சம்பாதிக்கும். இத்திட்டத்தை ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாடு ஏற்கவில்லை. அவர் மறைந்த பின் உதய மின் திட்டத்தை ஏற்றார் பழனிசாமி. இதனால், மின்வாரியத்தின் கடன் 40 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு ஏற்று அதன் நிதிச்சுமை தமிழ்நாடு அரசின் மேல் விழுந்தது. இதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழனிசாமியை பாதம் தாங்கிப் பழனிசாமி என்று கூறுகிறார்.

இன்னும் ஒரு வேடிக்கை :

பழனிசாமி சொல்கிறார் நான் என் உழைப்பால்தான் முதலமைச்சர் பதவிக்கு உழைத்து முன்னுக்கு வந்தேன் என்று. பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பதை ஊரும், உலகமும் தொலைக்காட்சியில் பார்த்துக் கைகொட்டி சிரித்ததே. அவர் மண்புழு போல தரையில் ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆனதுடன், யாரால் முதலமைச்சர் ஆனாரோ அவருக்கே துரோகம் செய்தவர் அல்லவா பழனிசாமி. அது மட்டும் அல்ல கொடநாடு கோட்டைக்குள் புகுந்து காவலரைக் கொன்று அங்கிருந்த ஊழல் பண மூட்டைகளைக் கொள்ளையடித்த கும்பல், எங்களை ஏவியது பழனிசாமிதான் என்று காவல்துறையிடம் கூறி பழனிசாமியின் பொய்முகத்தைத் தோலுரித்துக் காட்டியதை மறக்க முடியுமா? உறவினர்களுக்கு அரசு டெண்டர் எதுவும் வழங்கக்கூடாது எனும் விதிகளுக்கு மாறாக, தன்னுடைய சம்பந்திக்கு அரசுப் பணிகளை டெண்டர் மூலம் வாரி வழங்கி ஊழல் செய்தவர் பழனிச்சாமி என்பதை அவர் மறுக்க முடியுமா?.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த பழனிச்சாமி : 

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

பா.ஜ.க.அரசின் பாதகச் செயல்களில் ஒன்று சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம். அச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அ.தி.மு.க. எம்.பி.க்கள் 11 பேர் வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டம் நிறைவேறி இருக்காது. ஆனால், அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து கொண்டது பழனிசாமியின் அ.தி.மு.க.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் பழனிசாமி :

எங்கு சென்றாலும், தான் ஒரு விவசாயி என்று கூறிவரும் பழனிசாமி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் என்பதை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

தொழில் வளர்ச்சியில் கடைசி இடம் :

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டைக் கடைசி இடத்திற்குத் தள்ளியது இந்த பழனிசாமி ஆட்சிதானே.

ஒரே நாடு ஒரே தேர்தல் : 

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே உணவு என்பதை மட்டுமல்லாமல், பாஜக ஆட்சி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறியதைக் கேட்டு உடனே டெல்லிக்கு ஓடிச்சென்று பா.ஜ.க. அரசிடம் ஆதரவு தெரிவித்தவர் பழனிசாமி தானே. இப்படித் தமிழ்நாட்டை பா.ஜ.க.விடம் அடகு வைத்து பிரதமரின் பாதம் தாங்கிய பழனிசாமி இப்பொழுது பா.ஜ.கவிடம் கூட்டணி இல்லை என்று கூறி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் முழுவதும் தி.மு.க கூட்டணிக்கு சென்று விடக்கூடாது என வஞ்சக நோக்கத்துடன் பிதற்றுகிறார். பாஜ.க.வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள பழனிசாமியின் செயலை இனியும் தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் அல்ல” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.