Skip to main content

கர்ப்பிணி மனைவி... வீட்டின் பின்புறம் ஒளிந்திருந்த முதல் கணவர்... வெளியான அதிர்ச்சி சம்பவ தகவல்!

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

லண்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளிப் பெண்ணான தேவி என்ற சனா முகமதுவை அவரது முதல்  கணவர் அம்பு விட்டு கொலை செய்த சம்பவம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையை அவரது முதல் கணவர் ஏன் செய்தார் என்ற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளிப் பெண்ணான தேவி என்ற சனா முகமது கிழக்கு லண்டனில் தன்னுடைய இரண்டாவது கணவரான இம்தியாஸ் முகமது அவருடன் வசித்து உள்ளார்.  அப்போது நடந்த விசாரணையில் தேவி ஏழு வருடங்களுக்கு முன்னதாக இம்தியாஸ் முகமது என்பவரைத் திருமணம் செய்து கொண்டு தன் பெயரை சனா முகமது என மாற்றி இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். தேவியின் முதல் கணவரான ராமனோஜ்க்கும், தேவிக்கும் மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். இரண்டாவது திருமணம் செய்த இம்தியாஸ் முகம்மதுக்கும், தேவிக்கும் இரண்டு குழந்தைகள் இருந்துள்ளன. 

 

issues


 

issues



இந்நிலையில் தேவி தனது இரண்டாவது கணவர் மூலம் 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இரண்டாவது கணவருடன், தேவி சந்தோசமாக கிழக்கு லண்டன் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். தேவி மற்றும் அவருடைய இரண்டாவது கணவரான இம்தியாஸ் இருவரும் கிழக்கு லண்டனில் இருக்கும் அவர்களது வீட்டில் இருந்தபோது தேவியின் முதல் கணவரான ராமனோஜ் வீட்டிற்குள் வில்லும் அம்பும் ஏந்தி கொண்டு அவர்கள் இருவரையும் தாக்குவதற்காக சென்றிருக்கிறார். அப்போது பயந்து போன தேவியும், இம்தியாஸும் வீட்டில் ஆளுக்கொரு புறம் ஓடியுள்ளனர். அப்போது முதல் கணவர் ராமனோஜ் எய்த அம்பு தேவியின் இதயத்தை துளைத்தது. பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் தேவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் தீவிர போராட்டத்திற்கு பின்பு தேவியின் வயிற்றில் இருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு எடுத்தனர் அதனை அடுத்து சிறிது நேரத்திலேயே தேவி பரிதாபமாக உயிரிழந்தார். 

 

issues



பின்னர் போலீசார் தேவியை கொலை செய்த அவரது முதல் கணவரை கைது செய்து விசாரணை செய்தனர். தற்போது தேவியை முதல் கணவர் கொலை செய்தது ஏன் என்ற காரணம் வெளிவந்துள்ளது. தேவியும் அவரது இரண்டாவது கணவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அவர்களை கொலை செய்வதற்கு அவர்களின் வீட்டின் பின்னால் இருக்கும் ஒரு அறையில் ஒரு மாத காலமாக பதுங்கி இருந்து அவர்களை கண்காணித்து வந்தேன் என்று விசாரணையில் கூறியுள்ளார். மேலும் தேவியை கொலை செய்வதற்காக அம்பு வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளிப் பெண்ணான தேவியின் கொலை குறித்த தகவல் தற்போது வெளியாகி லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.