Skip to main content

பிரசாந்த் கிஷோரின் முதல் சாய்ஸ் அதிமுக... திமுக போட்ட கண்டிஷன்... திமுக பாணியில் எடப்பாடியின் புதிய திட்டம்!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

தமிழக சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் செயல் திட்டத்திற்காக பிரபல தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்துடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. பாணியில் அ.தி.மு.க.வும் தேர்தல் ப்ராண்டிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

 

admk



குறிப்பாக, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் "டெமோஸ் ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துடன் அ.தி.மு.க. பேசுவதாகவும், அதற்கு முன்னோட்டமாக, நான்காம் ஆண்டில் பயணிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்த நிறுவனம் வாழ்த்து தெரிவித்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கிறது அ.தி.மு.க.வின் ஐ.டி.விங்.

இதன் பின்னணி குறித்து தேர்தல் வியூக வல்லுநர்கள் தரப்பில் விசாரித்தபோது, "பிரசாந்த் கிஷோரின் "ஐ பேக்' நிறுவனத்தில் கிஷோருக்கு இணையாக இருந்த சுனிலை கவர்ந்து தங்களுக்கு ப்ராண்டிங் செய்யுமாறு அவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். தி.மு.க.வுக் காக 2016 சட்டமன்றத் தேர்தலில் சுனிலும் தேர்தல் வியூக வல்லுநராக செயல்பட்டார். 2011 தேர்தலில் எதிர்க் கட்சி அந்தஸ்தை இழந்திருந்த தி.மு.க., சுனிலின் வியூகத்தில் 2016 தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாக வெற்றி பெற்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 38 இடங்களை கைப்பற்ற உதவியதும் சுனிலின் யுக்தியே.

இப்படிப்பட்ட சூழலில், 2021 தேர்த லுக்காக ஐ பேக்கின் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தி.மு.க. தலைமை திட்டமிட்டது. ஒரு கட்டத்தில், "பிரசாந்துடன் நீங்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்' என சுனிலிடம் தி.மு.க. தலைமை சொல்ல, அதனை மறுத்ததுடன், இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தி.மு.க.விடமிருந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு வெளியேறினார் சுனில். அதேசமயம், ஐ பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது தி.மு.க. தலைமை.

 

dmk



இந்த நிலையில்தான் தி.மு.க.வுக்கும் ஐ பேக் நிறுவனத்துக்கும் போட்டியாக அ.தி.மு.க.வை கையிலெடுக்க டெமோஸ் ப்ராஜெக்ட் நிறுவனம் களத்தில் குதித்துள்ளது. இந்த நிறுவனத்தில் இருப்பவர்கள் இளைஞர்கள். அவர்களில் பலரும் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக்கில் வேலை பார்த்தவர்கள். குறிப்பாக, பிரசாந்த் கிஷோரை உதறிவிட்டு ஐ பேக்கிலிருந்து வெளியேறி தி.மு.க.வுடன் இணைந்த சுனில், ஒரு கட்டத்தில் ஐ பேக்கில் பணிபுரிந்த தமிழக இளைஞர்கள் 15 பேரை வெளியே கொண்டுவந்தார். அவர்களுக்காக உருவாக்கப் பட்டதுதான் டெமோஸ் ப்ராஜெக்ட் நிறுவனம். தி.மு.க.வுக்காக சுனில் பணிபுரிந்த காலகட்டத்தில், அவரிடம் சப்- காண்ட்ராக்டாக பணிபுரிந்தது டெமோஸ். சுனில் வெளியேறியதையடுத்து, தி.மு.க.வின் கிச்சன் கேபினெட்டை அணுகிய டெமோஸ், தங்களின் நிலை குறித்துப் பேசியிருக்கிறது. ஆனால், அவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதனால், சுனிலிடமே டெமோஸ் விவாதித்துள்ளது. இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வை கையிலெடுக்க திட்டமிட்டது டெமோஸ். அதற்காக முதல்வர் எடப்பாடியை சந்திக்க முயற்சித்தனர், மறுத்துவிட்டார் எடப்பாடி'' என சுட்டிக்காட்டுகிறார்கள் தேர்தல் வியூக வல்லுநர்களோடு தொடர்புடையவர்கள்.

அ.தி.மு.க.வின் ஐ.டி.விங்க்கில் விசாரித்தபோது, "குறிப்பிட்ட நிறுவனம் கடந்த நவம்பரில்தான் வெளிப்படையாக லான்ச் ஆகியிருக்கிறது. அதில் பணிபுரியும் நபர்களெல்லாம் இளைஞர் கள். மாநில முதல்வர்கள் மற்றும் முதல்வர் வேட்பாளர்களாக அறியப் பட்ட அரசியல் தலைவர்களோடும் அரசியல் கட்சிகளோடும் நேரடியாக பணிபுரிந்த எந்த அனுபவமும் டெமோஸுக்கு இல்லை. மேலும், பிரசாந்த் கிஷோர் அளவுக்கு அனுபவம் வாய்ந்த வியூக வகுப்பாளர்கள் யாரும் அந்த நிறுவனத்தில் இல்லை. தி.மு.க.வை வீழ்த்த சுனிலின் ஏற்பாட்டில்தான் அ.தி.மு.க.வை டெமோஸ் அணுகியதாக எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.


தி.மு.க.வுடன் இணைவதற்கு முன்பு அ.தி.மு.க.வுக்காக வேலை செய்ய பிரசாந்த் கிஷோர் முதலில் அணுகியது எடப்பாடியைத்தான். ஒருமுறை டெல்லி சென்றிருந்த எடப்பாடியை பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். அப்போது அவர் முன்வைத்த சில நிபந்தனைகளை எடப்பாடி ஏற்கவில்லை. அதன்பிறகு, கட்சியின் மூத்த தலைவர்களுடன் இது குறித்து எடப்பாடி ஆலோசித்தபோது, "இந்த மாதிரி நிறுவனங்கள் நமக்குத் தேவையில்லை' என சொன்னதை ஏற்று, "கார்ப்பரேட் அரசியல் கான்செப்ட்டே அ.தி.மு.க.வுக்கு தேவையில்லை' என முடிவு செய்தனர்.

கொஞ்சகாலமாக அமுங்கிக் கிடந்த இந்தப் பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. ஆனால், டெமோஸ் நிறுவனத்துடன் எடப்பாடியின் சந்திப்போ, அவர்களுடனான ஒப்பந்தமோ எதுவும் இதுவரை நடக்கவில்லை. அதேசமயம் அ.தி.மு.க.வை எப்படியும் இழுத்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான கருத்துக்களை சோசியல் மீடியாக்களில் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். அதற்காக, முதல்வர் எடப்பாடியை வாழ்த்தி தங்களது வாட்ஸ்அப்பில் உலவ விட்டிருக்கிறார்கள்'' என்கிறார்கள் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.