Skip to main content

“ஸ்கூல் யூனிபார்மோட கூட்டிட்டு போவாங்க...” - சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அதிமுக கவுன்சிலர்!

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

Pramakudi child issue five arrested include admk member

 

"சின்னப்புள்ளை வேணும்னு கேட்டு அடம் பிடிச்சு அனுபவிச்சவன் பணம் கொடுக்காமல் எப்படி ஏமாத்தலாம்? இதெல்லாம் அந்த பெரிய மனுசனுக்கு அழகா?' என தன்னுடைய ஆதங்கத்தை பாலியல் புரோக்கரான பெண்மணி ஒருவர், இன்னொருவரிடம் கொட்டித் தீர்த்திருக்கின்றார். இது ஆடியோவாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸாருக்கு செல்ல, ஆடியோவின் நூல்பிடித்து பரமக்குடியில் உள்ள வி.ஐ.பி.க்களை அதிரடியாக கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பியுள்ளது காவல்துறை.

 

பரமக்குடி நகராட்சியின் 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் வைகைநகர் சிகாமணி, மறத்தமிழர் சேனை எனும் அமைப்பின் மாநிலத் தலைவரான புதுமலர் பிரபாகரன், களஞ்சியம் ரெடிமேட்ஸ் ராஜாமுகமது ஆகியோர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கட்டாயப்படுத்தி, சிறுமியுடன் பலமுறை பாலியல் வல்லுறவு கொண்டதாகவும் அதற்கு உதவியாக புரோக்கராகச் செயல்பட்ட புதுநகர் கயல்விழி மற்றும் அன்னலட்சுமி ஆகிய இரு பெண்கள் உள்ளிட்ட ஐந்து நபர்களும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தாரால் குற்ற எண்: 05/23, 363, 366 (A), 376 (3) IPC and 5(1), r/w 6,16 r/w 17 of Pocso act-ன் கீழ் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.

 

th

 

சிறுமி விவகாரத்தில் போலீஸாருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவிக்க, "சிக்கியது இவர்கள் மட்டுமே! சிக்காத பல வி.வி.ஐ.பி.க்கள் இன்னும் இருக்கின்றனர். அவர்களையும் கைதுசெய்து இது போல் பாதிக்கப்பட்ட பல சிறுமிகளைக் காப்பாற்ற போலீஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என கோரிக்கை வைத்திருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள் சிலர்.


வெளிநாட்டிற்கு பெண்கள் வேலைக்குத் தேவைப்படுகிறார்கள் என சகஜமாக ஆரம்பிக்கும் அந்த ஆடியோவில், “ஏம்பா! இந்த புதுமலர் பிரபாகரன் இருக்கான்லே! சின்ன புள்ளைதான் வேணும்னு அடம்பிடிச்சு அன்னைக்கு அந்த புள்ளையை கூட்டிட்டு பார்த்திபனூரிலிருந்து மானாமதுரை போகும் பாதையில் இருக்கின்ற அந்த மஹாலுக்கு கூட்டிட்டுப் போனான். வேலையை முடிச்சதும் பணத்தைத் தரல! இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? ஒரு பெரிய மனுசனுக்கு இதெல்லாம் அழகா?” என தற்பொழுது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கயல்விழி இன்னொருவரிடம் பேசிய ஆடியோ தான் எங்களுக்குத் துருப்புச் சீட்டாக மாறியது. அதனைக் கொண்டு சி.டி.ஆர். போட்டுப்பார்க்கையில் ஊரிலுள்ள அத்தனை வி.ஐ.பி.க்களும் கயல்விழியோடு தொடர்பிலிருப்பது தெரியவந்தது.


கயல்விழியை போலீஸ் காவலில் விசாரிக்கையில் அனைத்தையும் ஒப்புக் கொண்டார். அவருடைய இலக்கு வறுமையில் வாடும் நிறமான 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் மட்டுமே! இதற்காக தன்னுடைய கூட்டாளியான அன்னலட்சுமியை துணைக்குக் கொண்டு அவருடைய சமூகத்து ஆட்களிடம் நெருக்கமாகப் பழகி அங்குள்ள சிறுமிகளை அவ்வப்போது திருவிழா, பொருட்காட்சி, கோவில், சினிமா என உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.

 

Pramakudi child issue five arrested include admk member

 

சிறுமிகளுடன் திரியும் கயல்விழியை அணுகும் பெரிய மனிதர்கள் ரேட் பேசி விடுவார்கள். வாடிக்கையாளர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு பத்து ஆயிரம் என கணக்கிட்டு வாங்கும் கயல்விழி, சிறுமிகளுடன் நைச்சியமாக பேசுவார். இதில் கிடைக்கும் பணம் தன்னுடைய குடும்ப வறுமையை போக்கும் என்கின்ற நம்பிக்கையிலும், ஏற்கனவே நம்மை அழைத்துக் கொண்டு நிறைய செலவு செய்திருக்கும் கயல்விழிக்கு பிரதி உபகாரமாகவும், தவறு எனத் தெரியாமலும் சிறுமிகள் சம்மதித்த நிலையில், அந்த பெரிய மனிதர்களுக்கு சிறுமிகளை சப்ளை செய்வார் கயல்விழி. இப்படித்தான் இதே ஊரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி இந்த தொழிலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றாள் என்றார் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.

 

பாதிக்கப்பட்ட அந்த சிறுமியோ தான் படித்துக் கொண்டிருக்கும் அந்த பள்ளிக்கு கடந்த 2022, டிசம்பர் 26 தொடங்கி 2023, பிப்ரவரி 21 வரை மூன்று மாதங்களாகச் செல்லவில்லை என்பது போலீஸாரின் விசாரணையில் தெளிவானது. "கஷ்டப்படுற குடும்பம்! எனக்கு அன்னலட்சுமி என்ற உமா அக்கா சொந்தக்காரங்க. புது நகரில் இருக்கின்ற ஏந சிட்டி லேண்ட் புரமோட்டர்ஸ் வேலை பார்த்து வந்தாங்க. அவங்க மூலமாகத்தான் அது போல் அங்க ஏற்கனவே வேலை பார்த்துவந்த கயல்விழி அக்காவும் பழக்கமானாங்க. எங்கே வெளியில் போனாலும் என்னைக் கூட்டிட்டுப் போவாங்க. செலவும் நல்லா செய்வாங்க. ஒரு நாள் என்னிடம், என்னுடைய சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்களை பார்த்துக்கிட்டன்னா கைநிறைய பணம் கிடைக்கும். வீட்டு பிரச்சனையும் தீரும் என ஆசை காட்டி ஸ்கூல் யூனிபார்மோடு பார்த்திபனூர் பக்கமிருக்கின்ற மஹாலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க ஏற்கனவே அந்த அக்காவோட முதலாளி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணி இருந்தாரு. தெரிஞ்ச முகம்தானே என நினைக்கையில் அந்த சம்பவம் நடந்துச்சு.. எவ்வளவோ மறுத்தும் வலுக்கட்டாயமாக அவர் நடந்துகொண்டார். அதன்பின் அவரோட ப்ரண்டான களஞ்சியம் ரெடிமேட் ராஜாமுகமது என தொடர்ச்சியாக வந்தாங்க. நாளடைவில் நான் வேண்டாமென்றாலும் இரு அக்காக்களும் சேர்ந்து வற்புறுத்தி என்னைய அந்த மஹாலுக்கு கூட்டிட்டுப் போவாங்க. போகலைன்னா அடிதான். வலி பொறுக்கமுடியாமல், அரை மயக்கத்திலே எல்லாம் நடக்கும். அடச்சீய் இந்த மனுசனா..? என கேட்குமளவிற்கு எனக்கு தினசரி சித்ரவதைகள். டெய்லி ஸ்கூலுக்குப் போறது மாதிரி யூனிபார்ம், ஸ்கூல் பையுடன் ஸ்கூலுக்குக் கிளம்புவேன். இடையில் என்னை மறித்து கூட்டிட்டுப் போவாங்க இருவரும். இதில் புதுமலர் பிரபாகரன் போலீஸில் சொல்லிவிடுவேன் என அடிக்கடி வந்து என்னை சித்ரவதை செய்து சென்று விடுவார். "நீ பெரிய ஆளாக இருக்கலாம்? அதற்காக ஓசியில் அனுப்ப முடியுமா?' கயல்விழி அக்காவிற்கும் புதுமலர் பிரபாகரனுக்கும் சண்டையே வந்திருக்கின்றது. என்னை சித்ரவதை செய்து பாலியல் வல்லுறவு செய்ததில் கரைவேஷ்டிகளுடன் போலீஸ்காரர்களும் அடக்கம்'' என்றிருக்கின்றது பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம்.

 

பரமக்குடியின் அ.தி.மு.க. அவைத் தலைவரும், 3-வது வார்டு கவுன்சிலருமான சிகாமணி, சிறுமி பாலியல் வல்லுறவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டது குறித்து மாநில அ.தி.மு.க. தலைமைக்கு தகவல் கூறியுள்ளனர் உள்ளூர் அ.தி.மு.க.வினர். ஆனால் கட்சி இது குறித்து ராமநாதபுரம் மாவட்டத் தலைமையிடம் விளக்கம் கேட்க, எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை மாவட்டத் தலைமை. "எதற்காக சிகாமணியைக் காப்பாற்ற வேண்டும்? இதில் இவர்களும் இருக்கலாமோ?' என சொந்தக் கட்சியினரே கிசுகிசுத்து வருகின்றனர்.

 

இதேவேளையில் சிறுமி பாலியல் வழக்கு மட்டுமில்லாது தன்னுடைய சமூக அமைப்பினைக் காட்டி செங்கல் சூளையினரை மிரட்டி மாமூல் வசூலிப்பில் ஈடுபட்டதும், பரமக்குடி பேராசிரியர் ஒருவரை மிரட்டி ரூ. 2 லட்சம் வாங்கியதும் காவல்துறைக்கு புகாரான வேளையில் புதுமலர் பிரபாகரனை குண்டர் தடுப்புக் காவலில் வைக்க காவல்துறையினர் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.


சிறுமியை பள்ளிக்குச் செல்ல உத்தரவிட்டும், சிறுமிக்கு முறையான மருத்துவ ஆலோசனைகளும் கொடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்ட மாவட்ட காவல்துறை சப்தமில்லாமல், வழக்கில் சிக்காத வி.வி.ஐ.பி.க்களைத் தேடத்தொடங்கியுள்ளதால் மாவட்டம் கலகலத்துள்ளது.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.