Skip to main content

கரோனா ஏன்...? "நமக்கு நாமே எதிரிகளாகிறோம்..." -பொன்னீலன்

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
Ponneelan




கரோனா வைரஸ் காலத்தை எழுத்தாளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையறிய எழுத்தாளரும் சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான நாவலாசிரியர் பொன்னீலன் அவர்களிடம் பேசினோம். கட்டுரையாகவே நமக்கு கொடுத்தார்.


அதில், "கிட்டத்தட்ட இரு மாதத்திற்கு மேலாக கரோனா என்னும் நுண்ணிய கிருமி நம்மை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் பரவி, கோடிக்கும் அதிகமான மக்களை துயரப்படுத்தி வருகிறது இது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இதன் பாதிப்பு பரவலாக இருக்கிறது. சென்னையில் இதன் பாதிப்பு அதிகம். 

இந்த வைரஸ் என்பது புதிதான ஒரு கிருமி. உலகத்தில் 200-க்கும் மேற்பட்ட வைரஸ்கள் இருக்கும் எனச் சொல்லுகிறார்கள். இதற்கு முன்பும் வைரஸ் பல முறை உலகத்தை தாக்கி இருக்கிறது. வைசூரி, காலரா, பிளேக் என பல வைரஸ் நோய்கள் நம்மை தொடர்ந்து பாதித்து வந்திருக்கின்றன. 

 

 


எபோலா, சார்ஸ் பல கண்டங்களை, குறிப்பாக ஆப்பிரிக்கா கண்டங்களை தாக்கியது. நாம் பல வைரஸ் தாக்குதல்களில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறோம்.  இளம்பிள்ளை வாதம், மலேரியா, இவற்றில் இருந்து பெரும் அளவு வெற்றி பெற்றிருக்கிறோம். நேரு, இந்திரா காலத்தில் மருந்து கண்டுபிடிக்கப்படுவதில் பெரிய பங்கு நமக்கு இருந்தது. 

இந்த விதமாக வைரஸ் நீண்டகாலம் இருந்து வந்திருக்கிறது என்று சொல்லுகிறார்கள். இதற்கு முன்பு ஏற்பட்ட சிக்குன் குனியா உடல் உறுப்புகளையே தாக்கி முடப்படுத்தியது.  ஆனால் இந்தக் கொடிய கரோனா வைரஸ் உடலின் முக்கிய உள் உறுப்புகளை அழித்துவிடும். குறிப்பாக கல்லீரல், கணையம், நுரையீரல் போன்றவற்றை தாக்கி அழிக்கும். 

 


இதற்குப் பாரம்பரிய  இந்திய மருந்துகள் முந்தியே இருந்ததாகச் சொல்லப்பட்டது. இப்போதும் நாட்டின் பல பகுதிகளில் அவை நடைமுறையில் இருக்கின்றன.  நோயை கட்டுப்படுத்தவும் செய்கின்றன.  ஜெர்மானிய முறையான ஹோமியோ மருந்தில் பலர் குணம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.

குஜராத்தில் ஏராளமான பேர் ஹோமியோ மருத்துவத்தில் குணம் அடைவதாக செல்லப்படுகிறது. சீனாவிலும் பாரம்பரிய மருந்தால் அதிகம் போர் குணம் அடைவதாக கூறப்படுகிறது.  இப்போது நாம் இந்தியா முழுவதும் கொடுத்துவரும் மருந்தை அமொரிக்காவுக்கும் கொடுத்துவருகிறோம். மேலும் அந்த மருந்தை தயாரிக்கும் காப்பு உரிமை இந்தியாவுக்கு மட்டும்தான் உண்டு.  ஆனால் இதிலும் கொடுமை என்னவென்றால் அண்மையில் இந்த மருந்து தயாரிக்கும் விதி முறைகளை அமெரிக்காவுக்கும் நம் அரசு கொடுத்ததாகத் தகவல்கள் இருக்கின்றன. 

 

 

 


இந்த மருந்தால் பக்கவிளைவும் உண்டு என விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். அண்மையில் தமிழகத்தில் பிரபலப்படுத்தப்படும் கபசுரக் குடிநீர் அரிய நோய் எதிர்ப்பு குணம் கொண்ட ரசாயனங்களினால் ஆன மூலிகையாகச் செயல்படுகிறது என்று தெரிகிறது. 

கரோனா தடுப்பு நடவடிக்கையில் இன்று காவல் துறையே முக்கியப் பங்கு வகிப்பதாகக் காண்கிறோம்.  ஊர்களை, தெருக்களை வேலியிட்டு அடைத்தல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றை இவர்கள் தீவிரமாக செய்து மக்களை சிரமத்துக்குள்ளாக்குகிறார்கள்.  இதற்குப்பதிலாக மருத்துவ அதிகாரிகள் தேவைப்படும் காவல்துறை ஊழியர்களுடன் ஊர் ஊராகப் போய் நோய் பரவலைக் கண் காணித்து உரிய நடவடிக்கை எடுக்கலாம். 

 

 


ஊரை அல்லது தெருவை அடைத்து மக்கள் இயல்பு வாழ்க்கையை சிரமப்படுத்துவதற்குப் பதிலாக ஊர் ஊராக மருத்துவக்குழுக்கள் சென்று பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்குத் தக்க முறையில் மருத்துவ பரிசோதனை செய்து நோயை ஒடுக்குவதில் அதிக அக்கரை காட்டலாம்.  தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.  சாதாரண மக்களை சிரமப்படுத்தாத வகையில் காரியங்களை முறைப்படுத்தாலாம்.  இன்று காய்கறி வாங்க, சாமான் வாங்க பிற தேவைகளுக்கு ஆட்டோவில் போக முடியாமல் சிரமப்படுகிறோமே. இதைச் சிரமமின்றி ஒழுங்குபடுத்தலாமே எனக்கு சைக்கிள் ஒட்டத்தெரியாது, பைக் ஓட்டத்தெரியாது. ஆட்டோவையே நீண்டகாலம் நம்பி வாழ்பவன்.  ஆட்டோ இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம்.

எந்த நோய்கும் மருந்து இல்லை என்பது இல்லை.  இது அறிவு பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடியது தான்.  இப்போது ஆதிவாசிகள், பழங்குடி மக்கள், கிராமப்புற மக்கள் மூலிகைகளாலேயே நோய்களை குணப்படுத்துவதை பார்க்கிறோம்.  எனவே மருந்து இல்லை என்பதை மனித குலம் ஏற்று கொள்ள முடியாது. 

ஆனால் இக்கொடிய வைரஸ் நோய் ஏன் இவ்வளவு விரைவாகப் பரவுகிறது என்பதற்கு நாமே காரணமாக இருக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.  விலங்குகளை, பறவைகளைக் கொல்லுவது, தாவரங்களை அழிப்பது, காடுகளை அழிப்பது போன்ற சீர்கேடுகளாலும் நமக்கு நாமே எதிரிகள் ஆகிறோம் என்பதும் உண்மை." இவ்வாறு தனது கட்டுரையில் கூறியிருக்கிறார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.