Skip to main content

அ.தி.மு.க.வை மிரட்டும் பெரும் பணியில் பி.ஜே.பி..! தேர்தலுக்காக காத்திருந்த சி.பி.ஐ.! 

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

ddd

 

ஆடிக்கு ஒரு முறை, அமாவாசைக்கு ஒரு முறை என்பதுபோல, தமிழகத்தையே அதிர வைத்த அந்தக் கொடூரம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பரபரப்பானது. தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதிய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 5-ந் தேதி இரவு சி.பி.ஐ., பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை தூசு தட்டி, 3 பேரைத் தூக்கிக்கொண்டு போயிருக்கிறது .


 
யார் அந்த 3 பேர்?

 

3 பேருமே அ.தி.மு.க.காரர்கள் என்பதும், அவர்களின் பெயர் ஹெரான் பால், பாபு, அருளானந்தம் என்பதும்தான் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அருளானந்தம் பொள்ளாச்சி மாநகர மாணவரணி துணைச் செயலாளர். பொள்ளாச்சி அ.தி.மு.க வி.ஐ.பி.யின் வலது கையாகவே சொல்லப்படும் அருளானந்தத்தை கட்சி ஆஃபிசில் வைத்தே தூக்கிக்கொண்டு போய் விசாரித்துக்கொண்டிருக்கிறது சி.பி.ஐ.

 

ஹெரானும், பாபுவும் பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் மகன்கள் இருவருக்கும் நெருக்கம். பாபு, அந்த வி.ஐ.பி.யின் மகன்களுக்கு பெண் நண்பர்களை அறிமுகப்படுத்தும் ஆட்களில் மிக முக்கியமானவன். சி.பி.ஐ. இந்த வழக்கை மீண்டும் தோண்டித் துருவும் என்பதையும் ‘நக்கீரன்’ சுட்டிக்காட்டியிருந்தது.

 

தேர்தல் பிரச்சாரத்தில், அ.தி.முக.வின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி பிஸியாக உள்ள நிலையில், சி.பி.ஐ மேற்கொண்ட கைது மூவ் நடவடிக்கைகளின் பின்னணி பற்றி சி.பி.ஐ அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம்.  

 

“பொள்ளாச்சி வழக்கில் நக்கீரனின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரி என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார், ஆச்சிபட்டி மணிகண்டன்... என 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். இப்போது விசாரணைக்கு கொண்டு வந்திருக்கும் ஹெரான் பால் உள்ளிட்ட ரெண்டு பேரும் ‘நக்கீரன்’ சுட்டிக்காட்டிய நபர்களே.

 

இந்த ஹெரான் பால், பெண்களிடம் சைக்கோ போல நடந்து கொள்வான். பெல்ட்டால் அடிக்கும் கொடூரத்தை ரசிக்கும் மனப்பான்மை உடையவன்... என நீங்கள் சொல்லியதை வைத்தே நாங்கள் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தோம். தற்போதைய அரசியல் சூழல் - முதல்வர் வேட்பாளர் - சீட் பங்கீடு எனப் பல கணக்குகள் இந்த திடீர் நடவடிக்கையின் பின்னணியில் உள்ளன. பொள்ளாச்சி பவர் புள்ளியான அ.தி.மு.க. வி.ஐ.பியின் வாரிசுகளுடன் தொடர்புடையவர்களை நெருங்கியிருக்கிறோம். விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வாரிசுகளையும் நெருக்குவோம்.

 

அரசியல் காரணங்களைத் தாண்டி, எங்கள் விசாரணையில் புதிய கோணங்களும் கிடைத்துள்ளன. வழக்கமாக திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில்தான் பெண்களைத் தூக்கிக்கொண்டு போய் அழிச்சாட்டியம் செய்வார்கள். ஆனால் இப்போது எங்கள் விசாரணையில் இரண்டு பெண்களைக் கண்டறிந்து விசாரித்தோம். அவர்கள் இருவரையும் சபரிராஜன் தன் வீட்டிற்கு கொண்டு சென்றிருக்கிறான் .

 

அங்கே வைத்து வல்லுறவு செய்திருக்கிறார்கள். பெல்ட்டால் அடித்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். அதில் சபரி ராஜனோடு அருளானந்தம், பாபு, ஹெரோன் பால் மூன்று பேரும் சேர்ந்து இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களைத் தூக்கிக்கொண்டு வந்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்.

 

ddd

 

இந்த விசாரணையில் அடுத்தடுத்த கட்டங்கள் இன்னும் முக்கியமானதாக இருக்கும். அவரும் ‘நக்கீரன்’ சுட்டிக்காட்டிய ஆள்தான். திருநாவுக்கரசை விசாரிக்கும்போது, பொள்ளாச்சி நகராட்சித் தலைவராய் இருந்த கிருஷ்ணகுமார், எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர். அவருக்காக நிறைய வேலைகளை செய்திருக்கிறேன் என திருநாவுக்கரசு வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். இப்போது உடல் நிலை சரியில்லாமல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் திருநாவுக்கரசு.

 

அவரது வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்துள்ளோம். கிருஷ்ணகுமாரை கைது செய்து தூக்குவதன் மூலம் இன்னும் நிறைய உண்மைகளை வெளிக்கொண்டு வந்து அ.தி.மு.க.வை மிரட்டும் பெரும் பணியில் இருக்கிறது பி.ஜே.பி கவர்மெண்ட். இந்த வழக்கு கடைசிகட்ட நிலையை எட்டி விட்டதாகவே மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும்படி நடந்துகொள்ள வேண்டும் என எங்களுக்கு உத்தரவும் இடப்பட்டிருக்கிறது'' என்கிறார்கள்.

 

இந்த நிலையில் அருளானந்தம் நிதின் கட்கரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், பொள்ளாச்சி வி.ஐ.பி.யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், எஸ்.பி.வேலுமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வைத்து, அருளானந்தம் மேல்பட்ட மனிதர்களோடு நல்ல பழக்கத்தில் இருந்திருக்கிறான் என கண்டறிந்திருக்கிறது சி.பி.ஐ.

 

பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் வாரிசுகளை சி.பி.ஐ. இன்னும் நெருங்காத நிலையில், புதுப்புது ஆதாரங்கள் கிடைத்து வருவதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இந்த வழக்கை, அரசியல் சூழலைப் பொறுத்து எந்த இடத்திற்கும் இழுத்துச் செல்லலாம் என்கிறார்கள் நிலவரம் அறிந்த அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர்.

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.