Skip to main content

பதற வைக்கும் பொள்ளாச்சி கொடூர நிகழ்வுகளின் முழுப் பின்னணி!

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

மனசாட்சியுள்ள மக்கள் அனைவரையும் உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரம், தமிழகத் தேர்தல் களத்தில் பிரச்சார ஆயுதமாக இருந்தது. வாக்குப்பதிவு முடிந்து, அரசியல் கட்சிகள் ஓய்வெடுத்து வரும் நிலையில், இந்தக் கொடூரத்தை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் வழக்கம்போல தனது புலனாய்வுப் பணியைத் தொடர்ந்தது.. வி.ஐ.பி. வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் கோவை ஸ்டெயின்ஸ் பள்ளியில்தான் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனான பிரவீன் படித்தார். அவருடன் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் மகன் விவேக்கும் படித்தார். இவர்களின் பணக்கார நண்பர்கள் வட்டாரத்தில் ஒருவர், திலக்முருகன். 

 

pollachi issues



இந்த டீமுடன் அதே பள்ளியில் படித்த இரண்டு மாணவிகளும் இணைந்தனர். பள்ளிப் படிப்பு முடித்தவுடன்  பி.எஸ்.ஜி. கல்லூரியில் இந்த டீம் அப்படியே சேர்ந்தது. கூடுதலாக ஒரு மாணவி சேர்ந்தார். கல்லூரியில் மன்மத ராஜாவாக பிரவீன் டீம் வலம் வந்தது என்கிறார் தற்பொழுது ஒரு பிரபலமான மீடியாவில் பணியாற்றும் மாலதி.பேஸ்புக், மெசெஞ்சர் போன்ற இணையதளங்கள் மூலமாக புதுப்புது நட்புகளை உருவாக்கிய இந்த டீமின் வலையில் சிக்கினார் இன்னொரு பெண்ணான சுரேகா. காரில் ஆனைமலை பண்ணை வீட்டுக்குப் போகும்வழியிலேயே ஆரம்பிக்கும் ஆட்டம், பண்ணை வீட்டில் யாருக்கு யார் ஜோடி என்ற பேதமில்லாமல் தொடரும். இந்த வகை பாலியல் தொடர்புகள் பற்றி அறிய தாய்லாந்து நாட்டிற்கு பறந்து செல்வது பிரவீனின் பழக்கம். இத்தகைய பாலியல் உறவுகளை விரும்பாத சுரேகா, ஒரு முறை காரிலிருந்து தப்ப முயன்றபோதுதான் பலியானார். பொள்ளாச்சி ஜெயராமனும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வரையிலான தொடர்பினால் அது விபத்து வழக்காகப் பதிவானது. 
 

pollachi issues



இந்த வில்லங்கத்திற்குப் பிறகும் பிரவீன் டீமின் ஆட்டம் தொடர, கல்லூரி நிர்வாகம் விதித்த தடையால், பெங்களூருவில் உள்ள சட்ட கல்லூரிக்கு பிரவீனை மாற்றினார் பொள்ளாச்சி ஜெயராமன். பிரவீன் இல்லாவிட்டாலும் அவரது பெயரை வைத்து,  பண்ணை வீட்டில் பாலியல் திருவிழாவை பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு லோக்கல்  டீம் கொண்டாடி வந்தது. பெண்களை வலையில் சிக்க வைத்து, இங்கே கொண்டு வந்து விடுவார்கள். இந்த விவரம் பிரவீனுக்குத் தெரியவர, பொள்ளாச்சி கும்பலை சந்திக்க முயற்சிக்கிறார். ஆனைமலையில் காவல்துறை அதிகாரியாக இருந்த ராஜேந்திர பிரசாத் உதவ முன்வருகிறார். 
 

pollachi issues



ஆனைமலை பண்ணை வீடுகளில் நடக்கும் காமக் கொடூரங்களுக்கு துணை போனதினால் மாமூல் வாழ்க்கை அதிகமாகி புத்தம் புதிய சொகுசு கார்களை வாங்கி வலம் வரும் ராஜேந்திர பிரசாத், பிரவீனின் நண்பரும் அவர் பாணியிலேயே பாலியல் விளையாட்டுகளில் ஆர்வம் உடையவ ரான அ.தி.மு.க. கவுன்சிலர் ஜிம் வசந்த் மற்றும் அமைச்சர் வேலுமணியின் வலதுகரமான பார் நாகராஜ் ஆகியோருக்கும் சிறந்த நண்பரானார். இவர்கள் அனைவரும் பொள்ளாச்சி நகரில் இயங்கும் அழகு நிலையங்களில் சந்தித்துக் கொள்வார்கள். பிரவீனுக்கு ஜிம் வசந்த்தும் ராஜேந்திர பிரசாத்தும் தற்போது குண்டர் சட்டத்தில் கோவை சிறையிலிருக்கும் திருநாவுக்கரசையும் சபரி (எ) ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரையும் அறிமுகப்படுத்துகிறார்கள். அதன்பின்னர், பொள்ளாச்சி இளம்பெண்கள் மீதான இவர்களின் பார்வை தீவிரமாகி, பண்ணை வீட்டில் பலிகடாவாக்கியது. 
 

pollachi praveen



அதில் ஒரு பெண்ணான அனிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்தோம். இவர்தான் அந்தப் பதற வைக்கும் வீடியோவில், "அண்ணா என்னை அடிக்காதீங்கண்ணா டிரெஸ்ஸை கழட்டிடுறேன்'' என ரிஷ்வந்த்தின் பெல்ட் அடி தாங்காமல் கதறியபடியே துடித்தவர்.  "எனக்கு அப்பா கிடையாது. கல்லூரிக்கு செல் லும் தம்பி இருக்கிறார். வயதான தாயார். இந்த மூன்று உயிருக்கு வயிறார சோறு வாழ்வதற்கான வீடு இவற்றிற்காக 15 வயதில் இருந்தே பல்வேறு அழகு நிலையங்களில் பணியாற்றி வருகிறேன். எனக்கு இப்போது 21 வயதாகிறது. பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன், அவரது நண்பர்கள் போன்ற பல ஊர் வி.ஐ.பி.க்கள் எனது கஸ்டமர்கள். தனிப்பட்ட முறையிலும் வீட்டு விசேஷங்களுக்கு மேக்கப் பணிகளுக்கு செல்வேன்.
 

pollachi jeyaraman



அப்படித்தான் கடந்த வருடம் ஒருநாள் ஒரு பெண்மணி தனது பெண்ணின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என கூப்பிட்டார். காலை நேரம் பதினொன்றரை என்பதால் நான் அவர் சொன்ன முகவரிக்கு போனேன். அது திருநாவுக்கரசு காமக் களியாட்டங்களுக்கு பயன்படுத்திய பண்ணை வீடு என்பது அப்போது தெரியாது.  அந்த வீட்டில் விழா நடப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. பக்கத்து வீட்டில்தான் விழா ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. நாம் தவறாக வந்துவிட்டோம் என விழா நடக்கும் வீட்டிற்குப் போக முயன்றேன். என்னை குண்டுகட்டாக ரிஷ்வந்த்தும் சதீஷும் தூக்கிச் சென்றார்கள். நான் அவர்களுடன் போராடினேன். எனது தலையை சுவரில் வைத்து மோதினார்கள். நான் ஆஸ்துமா மற்றும் வலிப்பு நோய் பாதிப்புள்ளவள். டிரஸ்ஸை கழட்டச் சொல்லி, ரிஷ்வந்த்தும் சதீஷும் அடித்தார்கள். மேலாடையை கழட்டியதும், லெக்கின்ஸையும் கழட்டச் சொல்லி அடிச்சாங்க. நான் துடிச்சபடியே போராடினேன். அதை வீடியோ எடுத்தார்கள். அதன்பிறகு எனக்கு வலிப்பு வந்தது. மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டேன். அவர்களது கவனம் திசை மாறியது. 

அந்த சந்தர்ப்பத்தில் பக்கத்தில் இருந்த வீட்டிற்கு போய் விழுந்தேன். என் அலங்கோலத்தைப் பார்த்த அவர்கள் என்னை காரில் படுக்க வைத்த நிலையில் திருநாவுக்கரசு டீமின் கண்ணில் படாமல் காப்பாற்றினார்கள். இந்த சம்பவத்தை யாரிடமும் கூறவில்லை. பொள்ளாச்சி சம்பவத்தில் எனது வீடியோ வெளியானது. அதில் இருப்பது நான்தான் என எனக்கு நெருக்கமானவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். பெற்றோர் மற்றும் ஐந்து வருடமாக என்னை காதலித்து வரும் முஸ்லிம் இளைஞரிடம் மட்டும் சொன்னேன். வேலைக்குப் போறதையும் நிறுத்திட்டேன்'' என கூறினார். 

அந்தப் பெண்ணின் தாயாரோ, "இவள் இந்த சம்பவத்தைப் பற்றி எங்ககிட்ட சொல்லலை. இவளது மண்டையை சுவரில் வைத்து மோதியதால் தீராத தலைவலியால் இவள் கஷ்டப்பட்டாள். நாங்களும் உடம்பு சரியில்லை என நினைத்துவிட்டோம்'' என்றார்.  இந்தப் பெண்ணை பண்ணை வீட்டுக்குத் தூக்க வேண்டும் என முடிவு செய்ததே அந்த அழகு நிலையத்துக்கு அடிக்கடி வரும் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன்தானாம். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி திருநாவுக்கரசு ஒரு வருடம் அனிதாவிற்கு தொல்லை கொடுக்க, இஷ்டத்துக்குப் பலியாக்கியுள்ளது அந்த டீம் என்பதும் விவரம் அறிந்தவர்களால் சொல்லப்படுகிறது. இதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனிதாவை விசாரிக்கவில்லை. அனிதாவும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லை. 

ஆளுந்தரப்பில் செல்வாக்கு மிக்க மனிதரின் மகன் உள்ளிட்ட வி.ஐ.பி. குடும்பத்தினர் சம்பந்தப் பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் இப்போதும் பயத்தில் இருக்கிறார்கள். இதைத்தான் பிடிபட்ட குற்றவாளியான திருநாவுக்கரசு, பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளும்கட்சி வி.ஐ.பி.க்கள் இருக்கிறார்கள் என்றான்'' என்கிறார்கள் அவனது நண்பர்கள்.பதற வைக்கும் கொடூர நிகழ்வுகளின் முழுப் பின்னணியும் காவல்துறைக்குத் தெரியும். காவல்துறையோ ஆள்பவர்களின் முழுக்கட்டுப் பாட்டில் இருக்கிறது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.