Skip to main content

அரசியல் தலைவர்களுக்கு கிடுக்கிப்பிடி! ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பா.ஜ.க குறி!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

 political leaders! I.A.S. BJP mark for officials!

 

பாஜகவை எதிர்க்கும் கட்சிகளையும், பாஜகவுக்கு சவாலாக இருக்கும் கட்சிகளையும் வழிக்குக் கொண்டு வர, தங்களின் விசாரணை அமைப்புகள் மூலம் ரெய்டுகள், வழக்குகள் என்கிற அஸ்திரத்தை வீசி வருகிற மத்திய பாஜக அரசு, "அரசியல் தலைவர்கள் மீது நேரடியாகப் பாய்வதற்கு முன்பாக, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் குறி வைப்பதை மீண்டும் கையிலெடுத்துள்ளது" என்கிறார்கள் டெல்லியிலுள்ள அதிகாரிகள்.

                     

இதுகுறித்து நம்மிடம் பேசும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், "மத்தியில் 2014-ல் ஆட்சியைக் கைப்பற்றிய பா.ஜ.க தலைமை, காங்கிரசை அரசியல் ரீதியாகப் பலகீனப்படுத்துவதை முக்கியக் குறிக்கோளாக வைத்திருந்தது. குறிப்பாக, மாநிலங்கள்தோறும் இந்த அசைண்மெண்டை கையிலெடுத்தது. அதில் தமிழகத்தையும் முக்கிய இடத்தில் வைத்திருந்தது பா.ஜ.க தலைமை. அந்த வகையில், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஜி.கே.வாசனை காங்கிரசில் இருந்து பிரிக்க முயற்சித்தனர். இதற்காக, ஜி.கே.வாசனிடம் தனிச் செயலாளராக, அப்போதிருந்த தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரைக் குறிவைத்தது.
                       

அவரோ, பாஜகவின் நோக்கத்தை நிறைவேற்ற மறுத்த நிலையில், அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிரான ஊழல் ரெக்கார்டுகள், திருச்சியைச் சேர்ந்த நித்திய ஆனந்தமான ஆர்.எஸ்.எஸ்.காரரான ஒரு தொழிலதிபரிடம் இருப்பதையறிந்து அவரைத் தூக்கிய மத்திய அரசு, ஐ.ஏ.எஸ்.க்கு எதிராகப் புகார் கொடுக்க வலியுறுத்தியது. அவரிடமிருந்த 190 பக்க ஆதாரங்களைக் கேட்டும் மிரட்டியது.  

                

 political leaders! I.A.S. BJP mark for officials!

 

ஆனால், அவரோ, தமிழரான ஐ.ஏ.எஸ்.அதிகாரிக்கு எதிராகப் புகார் தரவும் ஆதாரங்களைக் கொடுக்கவும் மறுத்தார். எவ்வளவோ மிரட்டியும் மத்திய அரசின் நோக்கத்திற்கு அடிபணிய மறுத்ததுடன், இப்படி மிரட்டினால், தி.மு.க - அ.தி.மு.க தலைமையையும் நீதிமன்றத்தையும் அணுகுவேன் என அவர் சொல்ல, பிரச்சனையை அப்போது கைவிட்டது மத்திய அரசு. இதனால், வாசனின் தனிச் செயலாளர் தப்பினார்.
                       

அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நேரடியாக ஆக்சன் எடுத்தால், காழ்ப்புணர்ச்சி என்கிற விமர்சனம் வரும். அதுவே அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களில் வழக்குப் பதிவு செய்து, அதன் மூலம் சம்மந்தப்பட்ட அரசியல் தலைவரை வளைத்தால் அது நிர்வாக ரீதியிலான ஊழல் விவகாரமாகப் பார்க்கப்படும்; மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களாக வராது என்கிற யோசனையில்தான், இத்தகைய தந்திரங்களைக் கையாண்டது. ஆனால், சம்மந்தப்பட்ட நித்திய ஆனந்தமான அந்த திருச்சி நபர் ஒத்துழைக்காததால் ஐ.ஏ.எஸ்.சும் தப்பினார்; வாசனையும் வளைக்க முடியவில்லை. இதனால், மாற்று அஸ்திரத்தைப் பயன்படுத்தி வாசனை காங்கிரசிலிருந்து பிரித்தது மத்திய அரசு.  
                        

 political leaders! I.A.S. BJP mark for officials!

 

இந்த நிலையில், அரசியல்வாதிகளை வளைக்க மீண்டும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் குறி வைக்கத் துவங்கியுள்ளது. அந்த வகையில், முதல்வர் எடப்பாடிக்கு எதிரான பல ரெக்கார்டுகள் மத்திய அரசிடம் இருந்தாலும், எடப்பாடி தொடர்பான பல ரகசியங்கள் தலைமைச் செயாலளர் சண்முகத்திற்குத் தெரியும் என்பதால், சண்முகத்திற்கு எதிரான ரெக்கார்டுகளை பிரதமர் அலுவலகம் சேகரித்திருக்கிறது. அதேபோல, முக்கிய அமைச்சர்களின் துறைகளில், கோலோச்சும் உயரதிகாரிகள் பலரின் ரெக்கார்டுகளும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவைகளை தேவையான நேரத்தில் அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
                        

 political leaders! I.A.S. BJP mark for officials!

 

இதற்கிடையே, சமீபத்தில் வாரணாசி சென்ற நித்திய ஆனந்தமான அந்த திருச்சி தொழிலதிபரை மத்திய அரசு அதிகாரிகள் மீண்டும் அணுகியுள்ளனர். அப்போது, மீண்டும் புகார் கொடுக்க அவர்கள் வலியுறுத்தியபோது, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக என்னால் புகார் தரமுடியாது என மறுக்க, அப்படியானால் உங்களிடம் இருக்கும் 190 பக்க ஆதாரங்களை மட்டும் எங்களிடம் கொடுங்கள் என அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, அதையெல்லாம் அப்போதே தீயிட்டு எரித்துவிட்டேன் எனத் தெரிவித்திருக்கிறார் அந்த திருச்சி நபர் !
                          

இதேபோல, தமிழக ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராகப் புகார் கொடுக்க பலருக்கும் வலை வீசப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க பல அதிரடி தந்திரங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் பணிகள் டெல்லியில் ரகசியமாக நடந்து வருகின்றன. பாஜகவின் வலையில் சிக்காத அல்லது முரண்டு பிடிக்கிற தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வைத்து நெருக்கடிகளை மோடியும் அமீத்சாவும் உருவாக்கப் போகிறார்கள்" என்கின்றனர் டெல்லியின் ரகசியங்களை அறிந்தவர்கள்.
                           

 political leaders! I.A.S. BJP mark for officials!

 

அரசியலுக்கு ரஜினி வரமாட்டார் என ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் எதிர்பார்த்திருந்த நிலையில், பா.ஜ.க பின்னணியில், அரசியலுக்கு வருவதை அவர் உறுதி செய்திருப்பதால் மத்திய அரசின் ஆட்டம் இனி அதிரடியாக இருக்கும் என்கிறார்கள்.

 

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.