Skip to main content

'அச்சில் ஏற்றமுடியா ஆபாசம்!' - பப்ளிக் ஒப்பீனியன், ப்ராங் யூ-ட்யூப் சேனல்களுக்கு வார்னிங்! 

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

 police warning to public opinion, prang you-tube channels

 

மக்களிடம் கருத்துக் கேட்பது என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால் கருத்துக்கேட்பு என்ற பெயரில் ஆபாசத்தைத் திணித்து அதன் மூலம் பணம் ஈட்ட நினைக்கும் யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த மூன்று பேரின் கைது.

 

யூட்யூப்  என்ற ஒன்று அதிகம் அறியப்படாத ஆரம்ப காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த மக்களின் விமர்சனங்களைப் பெறுவதற்காக யூடியூப் சேனல்கள் தியேட்டர் வாசலை நோக்கி படையெடுக்கும். வெளியான திரைப்படம் குறித்து ரசிகர்கள், பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பர். இப்படி இருந்தநிலையில் யூடியூப் சேனல்களின் கருத்துக் கேட்பு என்பது கொஞ்சம் சமூகம் நோக்கியும் பயணித்தது. நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்து பொதுமக்களிடம் ஆரோக்கியமான கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதில்களும் ஆரோக்கியமான முறையிலேயே இருந்துவந்தது.

 

 police warning to public opinion, prang you-tube channels

 

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதிலும் குறிப்பாக, கடந்த மூன்று வருடங்களாகக் கருத்துக் கேட்பு என்பதே ஆபாசக் கேள்விகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது சில யூட்யூப் சேனல்களால். கடற்கரை, சுற்றுலாத் தலம் என பொது இடங்களில் பெண்கள், இளைஞர்களிடம் கருத்துக் கேட்பு என்ற பெயரில் விரசமான கேள்விகளைக் கேட்டு அதற்கு ஆபாசமான பதில்களைப் பெற முயற்சிப்பதையே தற்பொழுது சில யூடியூப் சேனல்கள் முன்னெடுத்து வருகின்றன. இதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் 'கண்டெண்ட்' எடுப்பது. உதாரணமாக உங்களுடைய காதலரோ அல்லது ஆண் நண்பரோ உங்கள் முன்பே வேறு ஒருவருடன் சென்றால் நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்பது போன்ற தேவையில்லாத கேள்விகள் இளைஞர்கள், பெண்கள், ஆண்களிடம் முன்வைக்கப்படுகிறது. இதைவிடவும் மோசமான ஆபாசமான கேள்விகளும் முன்வைக்கப்படுகிறது. இது எல்லாம் சமூக மாற்றத்திற்குத் தேவையான கேள்விகளா எனச் சிலர் ரவுத்திரம் கொண்டாலும் அல்லது முகம்சுளித்துச் சென்றாலும் ஒரு சிலர் இந்த ஆபாசக் கேள்விகளுக்குக்கூட நாகரீகமான முறையில் முடிந்த அளவு பதில் சொல்கின்றனர். இருப்பினும் அவர்களை விடாமல், ஆபாசமான பதில்களை, வார்த்தைகளை அவர்கள் வாயில் இருந்தே பெறுவதற்கு முயற்சிப்பது தான் இதில் உட்ச்சபட்ச வக்கிரமே.

 

 police warning to public opinion, prang you-tube channels

 

அதேபோலத்தான் யூட்யூப் ப்ராங்-ஷோக்களும். முன் பின் தெரியாதவர்களை மன உளைச்சலுக்கு ஆளாகும் அளவிற்கு 'ப்ராங்க்' என்ற பெயரில் வீடியோ எடுத்து வெளியிடுவது, பல நேரங்களில் விபரீதத்தில் முடிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ப்ராங் ஷோக்கள் தொடர்பாக நீதிமன்றம் எவ்வளவு கண்டிப்புகளை, உத்தரவுகளைப் பிறப்பித்தும் எந்தப் பலனும் இல்லை என்றே சொல்லாம். இன்று சென்னையில் பப்ளிக் ஒப்பீனியன்  என்ற பெயரில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 'சென்னை டாக்ஸ்'  என்ற அந்த யூடியூப் சேனலின் மீது சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆபாசமாகப் பேசி பேட்டி எடுத்ததாக புகாரளிக்கப்பட்டது. காரணம் சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் அந்த யூடியூப் சேனலுக்கு வார்த்தைகளிலே சொல்லமுடியாத அளவிற்கு ஆபாசமான பதில்களை அளித்திருந்தார். அந்த வீடியோவை கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பின்றி அப்படியே அந்த சேனலும் வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்களைப் பெற்று வந்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆசின் பாட்சா, கேமராமேன் அஜய் பாபு மற்றும் அந்த யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 police warning to public opinion, prang you-tube channels

 

குறிப்பிட்ட இந்த யூடியூப் சேனல் இதுவரை 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடியோக்களும் ஆபாசம் நிறைந்த கேள்விகளும் அதற்கான தலைப்புகளும் இடம்பெற்றிருக்கும். அதேபோல் இது போன்ற யூடியூப் சேனல்களில் வெளியாகும் சில வீடியோக்களில் தாங்களே ஏற்பாடு செய்த பெண்களை வரவழைத்து ஆபாசமான கருத்துகளைப் பேசவைத்து வீடியோ வெளியிட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்பொழுது அந்த யூடியூப் சேனலை முடக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

 

 police warning to public opinion, prang you-tube channels

 

இது ஒருபுறம் இருந்தாலும் ஆரோக்கியமான கருத்துக் கேட்பு என்பது ஒருபுறம் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஒரு சிலர் செய்யும் இந்தச் சீரழிவுகளால் ஒட்டுமொத்த யூட்யூப் சேனல்களையும் குறைசொல்ல முடியாது. அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாசங்கள் நிறைந்த, பப்ளிக் ஒப்பீனியன் என்ற பெயரிலும், ப்ராங் ஷோ என்ற பெயரிலும் இந்த ஆபாச கலாச்சாரம் அரங்கேறி வருகிறது.

 

ஆழமான சிந்தனை, தரமான முயற்சி, புதிய கற்பனை, களப்பணி... இப்படி எதுவுமே இல்லாமல் இளைஞர்களை வைத்துப் பணம் ஈட்ட நினைக்கும் சில யூடியூப் சேனல்களுக்கு இந்த மூவரின் கைது மூலம் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது போலீஸ். 

 

 

 

 

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.