Skip to main content

பாமக... பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

Published on 06/02/2019 | Edited on 08/02/2019


வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும் மேலும் அமமுக, மக்கள் நீதி மய்யம் என பலகட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதில் கூட்டணி என்ற கணக்கில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் மற்றும் சில அமைப்புகள் திமுக கூட்டணியில் வலுவாக உள்ளது. அடுத்ததாக அதிமுக அணியில் பாஜக உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அக்கூட்டணியில் வேறு கட்சிகள் எதுஎது என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக அணியில் பாமக, தேமுதிக, தமாகா இந்த கட்சிகள் ரகசிய டீலிங்கில் இருந்துவருவது ஊடகங்கள் மூலம் அவ்வப்போது அம்பலமாகி வருகிறது.

 

 

pmk

 

 

இதில் குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணி பற்றி வெளிவருகிற கருத்துக்களை அக்கட்சியின் தலைவரான டாக்டர் ராமதாஸ் மறுத்து வருகிறார். மேலும் ஊடகங்கள் கற்பனை குதிரையில் ஏறி சவாரி செய்கிறது என்றும், அவரவர்  இஷ்டத்துக்கும் பாமக தேர்தல் கூட்டணி விஷயத்தில் கண்டபடி எழுதுவது தவறு என்றும் யாருடன் கூட்டணி என்கிற முடிவை எடுக்கும் அதிகாரம் எங்கள் கட்சி எனக்கு தந்துள்ளது. ஆகவே நான் எடுக்கும் நிலைதான் கட்சியின் அதிகாரபூர்வ முடிவு அறிவுப்பு என கூறியிருக்கிறார்.

 

 

ஆனால் என்னதான் பொத்தி பொத்தி வைத்திருந்தாலும் ஒருநாள் பூனைக்குட்டி வெளியே வரும் என்ற கூற்று இப்போது  அம்பலமாகியுள்ளது.

 

அது என்ன கூற்று?

 

பாமகவின் தருமபுரி எம்பியாக இருப்பவர் அன்புமணி ராமதாஸ். இந்த தொகுதியில் உள்ள  தருமபுரி முதல் மொரப்பூர் வரை ரயில்வே திட்டம் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்திலேயே இந்த ரயில்வே திட்டத்தை நிறைவேற்றக்கோரி மத்திய அரசிற்கு பலக்கடிதங்கள் அப்போதிலிருந்தே அனுப்பப்பட்டது. இந்த ரயில்வே திட்டத்தால் தருமபுரி மக்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும் என்பதே உண்மை. தருமபுரி தொகுதி மக்கள் சென்னை செல்வதென்றாலும், அல்லது சென்னையிலிருந்து வருவதென்றாலும் மொரப்பூருக்கு வேறு வாகனத்தில் வந்துதான் ரயிலில் செல்ல  இருக்கிறது.

 

pmk

 

அன்புமணி எம்பியாக வந்த இந்த ஐந்து வருட காலமாகவும் இந்த ரயில்வே திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று பாராளுமன்றத்தில் பேசியதோடு மத்திய ரயில்வே அமைச்சரை 18 முறை சந்தித்து கடிதம் கொடுத்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இறுதியாக 2016 -2017 பட்ஜெட்டில் நிபந்தனைகளுடன் இந்த ரயில்வே திட்டத்தை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்தது. 

 

அது என்ன நிபந்தனை?

 

இத்திட்டத்திற்காக செலவழிக்கப்படும் செலவில் மாநில அரசு பாதி செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. மாநில அரசிற்கும் கடிதம் எழுதினார் அன்புமணி. ஆனால் வருவாய் எதுவும் இல்லை ஆகவே பாதி தொகையை மாநில அரசு ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்ற நவம்பர் மாதமே அறிவித்துவிட்டது எடப்பாடி அரசு. இதன் பின்னணியில் தான் பூனைக்குட்டியை சென்ற 4 ஆம் தேதி ரயில்வே அமைச்சரின் கடிதம் மூலம் பார்க்க முடிந்தது. 

 

 

pmk

 

 

அதாவது மாநில அரசின் பங்கே வேண்டாம். இந்த திட்டத்திற்கான மொத்த தொகை 358 கொடியே 95 லட்சம் இதை முழுமையாக மத்திய அரசு ஏற்கிறது. அடுத்த 10 நாட்களுக்குள் மொரப்பூர் தருமபுரி அகல மின்சார ரயில் பாதையை துவைக்கி வைக்கும் விழாவிற்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் நேரில் வருவதாக எம்பி அன்புமணிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இத்திட்டம் அப்பகுதி மக்களின் 78 ஆண்டு கோரிக்கை இதன்மூலம் அன்புமணிக்கு கிடைத்த வெற்றி என்று பாமகவினர் கொண்டாடுகின்றனர்.

 

 

pmk

 

 

எம்பியாகி ஐந்து வருடமாக கஜினி முகமது போல் 18 முறை படையெடுத்தும் கிடைக்காத இந்த திட்டம் இப்போது கிடைதித்திருப்பதன் பின்னணி கூட்டணி என்ற பூனை குட்டிதான். அதிமுக, பாஜக  கூட்டணியில் பாமகவிற்கு  7 இடங்கள் என்று பேச்சுவார்த்தை தொடங்கி தற்போது 5 இடங்கள் என பேச்சு தொடர்கிறது. கூடக்குறைய இடங்கள் இருந்தாலும் கூட்டணி உறுதி என்பதே பாஜக மத்திய அரசு அன்புமணி தொகுதிக்கு ரயில்வே திட்டத்தை அறிவித்துள்ளது.

 

 

 

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.