Skip to main content

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ம.க. எங்களிடம்தான் முதலில் பேசியது!

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

ர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு டி.டி.வி. தினகரன் தரப்பு எடுக்கும் வியூகங்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் உற்றுப் பார்க்க வைத்துள்ளது.

epsநடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலிலும் இருபத்தியொரு தொகுதி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் டி.டி.வி. அணியின் வியூகம் என்னவென அதன் முக்கிய தலைவர்களிடம் பேசினோம். இன்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ம.க. எங்களிடம்தான் முதலில் பேசியது. நாங்கள் "முடியாது. பா.ம.க. தலைவர் ராமதாஸ் ஜெ.வை குற்றவாளி என பேசினார்'ன்னு பா.ம.க.வுடனான கூட்டணியை மறுத்தோம். அதேபோல் தே.மு.தி.க.வும் எங்களுடன் தான் பேசினார்கள். எல்.கே.சுதீஷின் உறவினரான ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. மூலம் அந்த பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது தி.மு.க.வின் துரைமுருகன் சுதீஷின் பேச்சுவார்த்தையை நக்கலடித்து பேட்டி கொடுத்தவுடன் மறுபடியும் சுதீஷ் அந்த முன்னாள் எம்.எல்.ஏ. மூலம் எங்களிடம் தொடர்பு கொண்டார். நாங்கள் பெரிய நோ சொல்லிவிட்டோம். அதன்பிறகே அ.தி.மு.க.வுடன் கூட்டணி என சுதீஷ் அறிவித்தார்'' என்கிறார் டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பெரம்பூர் எம்.எல்.ஏ.வான வெற்றிவேல்.

டி.டி.வி. அணியுடன் இன்று வரை எஸ்.டி.பி.ஐ. கட்சி மட்டுமே கூட்டணி என அறிவித்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் "நான் டி.டி.வி.அணியுடன் பேசுகிறேன்' என அறிவித் துள்ளார். "ஏன் உங்கள் அணியில் பெரிய பெரிய கட்சிகளை தவிர்த்து விட்டு மிகச்சிறிய கட்சிகளை சேர்த்துள்ளீர்கள்' என டி.டி.வி. அணியை சேர்ந்தவர்களை கேட்டோம்.

தமிழகத்தில் எங்களைப் போல தேர்தல் வியூகம் அமைக்க யாராலும் முடியாது. அறிவிக்கப்பட்ட திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.விற்கும் முன்பே நாங்கள் வேட்பாளரை அறிவித்தோம். அந்த தொகுதி யில் உள்ள அனைத்து இடங்களிலும் பிரம்மாண்டமான ஊழியர் கூட்டங்களை நடத்தினோம். அதைப் பார்த்த அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பயந்துபோய் விட்டது. அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து வழக்கு போட்டார்கள். அந்த தேர்தலையே நிறுத்தினார்கள். அந்தத் தேர்தல் நடந்திருந்தால் அதில் டி.டி.வி. அணி வெற்றி பெற்று அடுத்து நடக்கவுள்ள அனைத்து தேர்தல் முடிவுகளையும் மாற்றும் என்பதால் நடத்தவில்லை.

dinakaran


திருவாரூர் தேர்தலில் நாங்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல தனியாகத்தான் களம் கண்டோம். தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களில் தனியாகத்தான் களம் காண்கிறோம். எங்கள் வெற்றிக்கு நாங்கள் எங்கள் பலத்தைத்தான் நம்புகிறோம். கூட்டணி கட்சிகள் என்கிற சுமையோடு நடக்க நாங்கள் விரும்பவில்லை. ஒன்றிரண்டு கட்சிகள் எங்களுடன் வர உள்ளன. அதனால் பெரிய கட்சிகளை தவிர்த்து விட்டோம்'' என பதில் சொல்கிறார்கள் டி.டி.வி. அணியினர்.
dinakaran
தினகரன் தமிழகம் முழுவதும் நடத்தும் சுற்றுப்பயணமும், காத்திருந்து அவர் பேச்சை கேட்கும் மக்களின் எண்ணிக்கையும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உற்றுப் பார்க்க வைத்துள் ளது. அ.ம.மு.க.வை மத்திய பா.ஜ.க அரசு தனது ஆயுதங்களால் பலமாக தாக்க ஆரம்பித்துள்ளது. டி.டி.வி. தினகரனுக்கும் சிறையிலிருக்கும் சசிகலாவிற்கும் நெருக்கமான கார்னெட் மணல் அதிபர் வைகுண்டராஜன் செய்து வந்த கனிம பிசுனசுக்கு மத்திய அரசு தடை போட்டு விட்டது.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட தினகரன் அணியைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ரத்தினசபாபதி, "என்னை தகுதி நீக்கம் செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டால் சபாநாயகர் தனபாலின் கையை வெட்டுவேன்' எனக் கூறினார். அதற்கு அடுத்தநாளே ரத்தின சபாபதிக்கு நெருக்கமான மணல் கார்த்திக் மற்றும் மணல் ரமேஷ் ஆகியோர் திருச்சி மற்றும் சென்னையில் நடத்தும் ஓட்டல்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இது டி.டி.வி. தினகரனின் பணபலத்தை நொறுக்குவதற்காக எடப்பாடி மத்திய அரசிடம் சொல்லி நடத்திய ஏற்பாடு என்கிறார்கள் டி.டி.வி. அணியை சேர்ந்தவர்கள்.

தேர்தல் களத்துக்கு வந்தால் "இரட்டை இலை' லஞ்ச வழக்கு வேகமெடுத்து தினகரனுக்கு திகார் ஜெயில்தான் என்ற மிரட்டல் பாலிசியால் ஹேப்பியாக இருக்கிறார் எடப்பாடி. பெரிய கட்சிகளே மிரளும் வகையில் செயல்படும் அ.ம.மு.க.வின் உள்குத்துகளும் மீடியாக்களில் வரத் தொடங்கியுள்ளன. டி.டி.வி. அணியின் மா.செ.வாக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன் மற்றும் சமீபத்தில் மா.செ. பதவி பறிக்கப்பட்ட செந்தமிழன் ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர். அதில் கலைராஜன் தி.மு.க.விற்கு தாவப்போகிறார் என செய்திகள் சிறகடிக்கின்றன. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் டி.டி.வி. கட்சியில் போட்டியிட யாரும் தயாராக இல்லை. இரட்டை இலை சின்னத்தை டி.டி.வி. தினகரன் இழந்தார். அத்துடன் குக்கர் சின்னமும் கிடைக்காது என்கிற நிலை உருவாகிவிட்டது. தேர்தலில் நின்றால் ஓட்டுக்களை பிரிக்க முடியுமே தவிர வெற்றி பெற முடியாது என்பதால் தேர் தலில் போட்டியிட தயக்கம் நிலவுகிறது.

சசிகலா குடும்ப உறுப்பினர்களுடன் தினகரனுக்கு சரியான உறவுமில்லை. டி.டி.வி.யுடன் கூட்டணி பேசி வந்த ஜான் பாண்டியனை எடப்பாடியிடம் அனுப்பி வைத்ததே திவாகரன்தான். குடும்ப உறுப்பினர்களை அட்ஜஸ்ட் செய்து நடந்து கொள்ளாததால் சசிகலா, இளவரசி மகன் விவேக் மூலம் கொட்டப்படும் பணம் தினகரனுக்கு கிடைக்காது என செய்திகளை வாசிக்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள்.

அ.ம.மு.க. நிர்வாகிகளோ, எங்களிடம் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட் பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். சசிகலாவுக்கும் தினகரனுக்கும் மோதல் இல்லை. தினகரன் சுற்றுப் பயணத்தில் இருப்பதால் அவரது மனைவி அனுராதா சசிகலாவை சந்தித்து பேசி யிருக்கிறார்.

அ.ம.மு.க.வை ஒருங்கிணைப்பதே சசிகலாதான். தேர்தலை சந்திக்க சசிகலா தான் நிதி தர வேண்டுமென்பதில்லை. எங்கள் பணத்தையே செலவு செய்து தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகவே உள்ளோம்'' என்கிறார்கள்.

Next Story

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” - உதயநிதி குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Udhayanidhi alleges Central govt is looting through GST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.

Next Story

''உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது''- உறுதியளித்த உதயநிதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 ``What is your mind voice asking?''-Udhayanithi assured

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பேசுவையில், ''நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய திட்டம் காலை உணவு திட்டம். காலையில் எழுந்து நீங்கள் சீக்கிரம் வேலைக்கு போய் விடுவீர்கள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட நேரம் இருக்காது. மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டுக்கொள் எனச் சொல்லி அனுப்பிவிடுவீர்கள். ஆனால் உங்களுக்கு நினைவெல்லாம் குழந்தையைப் பசியோடு அனுப்பி வைத்தோமே சாப்பிட்டார்களோ இல்லையோ, பசி மயக்கத்தில் இருப்பார்களே, பள்ளிக்கூடத்திற்கு போனார்களா, தூங்கி விட்டார்களா? என்றெல்லாம் நினைப்பீர்கள். ஆனால் முதல்வர் அதற்காக கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சருடைய காலை உணவு திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 31 லட்சம் மாணவர்கள் தினமும் காலை முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். இந்த மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் முதல்வர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை நிம்மதியாக அனுப்புகிறீர்கள் 'என் பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதும் அவனுக்கு காலையில் தரமான உணவு கொடுத்து கல்வியைக் கொடுப்பார்கள். திராவிட மாடல் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்' எனத் தைரியமாக அனுப்புகிறீர்கள். இதற்குப் பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டத்தையும் சிறப்பான திட்டம் என்று சொல்லி தெலுங்கானா, கர்நாடக மாநில அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுடைய மாநிலத்தில் விரிவுபடுத்துவதற்கு. இங்க மட்டும் அல்ல கனடா நாடு தெரியுமா... அமெரிக்கா பக்கத்தில் இருக்கின்ற கனடா நாடு, பணக்கார நாடு. அந்த நாட்டின் பிரதம மந்திரி பெயர் ஜஸ்டின். அவர்  ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் 'உலகத்திலே மிகச் சிறந்த திட்டம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தான். பள்ளி குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு வர வைப்பதற்கு இதை விட சிறப்பான திட்டம் எங்குமே இல்லை' என்று சொல்லி கனடா நாட்டில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். இதற்கு பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு.

அடுத்து நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும். மகளிர் எல்லாம் வந்திருக்கிறீர்கள் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது. அதுதான் இன்று தேதி 16. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தேர்தல் 2021 தேர்தலில் முதல்வர் வாக்குறுதி அளித்தார். தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னோம். கடும் நிதி நெருக்கடி. ஒன்றிய அரசு நமக்கு காசு தரவே மாட்டேன் என்கிறார்கள். இருந்தாலும் தமிழக முதல்வர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க சொன்னார். விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரு கோடியே அறுபது லட்சம் பேர். அதில் சரி பார்த்து வெரிஃபிகேஷன் செய்து ஒரு கோடியே 18 லட்சம் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இப்பொழுது வரை போய்க்கொண்டிருக்கிறது. சில இடங்களில் குறை இருக்கிறது. எனக்கு வரவில்லை, பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வந்துவிட்டது. எதிர் வீட்டு பெண்ணுக்கு வந்து விட்டது எனக் குறைகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும். தேர்தல் நேரம் நானும் நிதியமைச்சரும் தான் அதற்கு பொறுப்பு. கண்டிப்பாக இன்னும் 5 மாதங்களில் நிச்சயம் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் கொடுப்பார். ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு மகளிர் உதவி தொகைத்கொடுக்க மனசுள்ள முதலமைச்சர் இன்னும் ஒரு 40 லட்சம் மகளிருக்கு கொடுக்க மாட்டாரா?'' என்றார்.