Skip to main content

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ம.க. எங்களிடம்தான் முதலில் பேசியது!

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

ர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு டி.டி.வி. தினகரன் தரப்பு எடுக்கும் வியூகங்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் உற்றுப் பார்க்க வைத்துள்ளது.

epsநடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலிலும் இருபத்தியொரு தொகுதி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் டி.டி.வி. அணியின் வியூகம் என்னவென அதன் முக்கிய தலைவர்களிடம் பேசினோம். இன்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ம.க. எங்களிடம்தான் முதலில் பேசியது. நாங்கள் "முடியாது. பா.ம.க. தலைவர் ராமதாஸ் ஜெ.வை குற்றவாளி என பேசினார்'ன்னு பா.ம.க.வுடனான கூட்டணியை மறுத்தோம். அதேபோல் தே.மு.தி.க.வும் எங்களுடன் தான் பேசினார்கள். எல்.கே.சுதீஷின் உறவினரான ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. மூலம் அந்த பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது தி.மு.க.வின் துரைமுருகன் சுதீஷின் பேச்சுவார்த்தையை நக்கலடித்து பேட்டி கொடுத்தவுடன் மறுபடியும் சுதீஷ் அந்த முன்னாள் எம்.எல்.ஏ. மூலம் எங்களிடம் தொடர்பு கொண்டார். நாங்கள் பெரிய நோ சொல்லிவிட்டோம். அதன்பிறகே அ.தி.மு.க.வுடன் கூட்டணி என சுதீஷ் அறிவித்தார்'' என்கிறார் டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பெரம்பூர் எம்.எல்.ஏ.வான வெற்றிவேல்.

டி.டி.வி. அணியுடன் இன்று வரை எஸ்.டி.பி.ஐ. கட்சி மட்டுமே கூட்டணி என அறிவித்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் "நான் டி.டி.வி.அணியுடன் பேசுகிறேன்' என அறிவித் துள்ளார். "ஏன் உங்கள் அணியில் பெரிய பெரிய கட்சிகளை தவிர்த்து விட்டு மிகச்சிறிய கட்சிகளை சேர்த்துள்ளீர்கள்' என டி.டி.வி. அணியை சேர்ந்தவர்களை கேட்டோம்.

தமிழகத்தில் எங்களைப் போல தேர்தல் வியூகம் அமைக்க யாராலும் முடியாது. அறிவிக்கப்பட்ட திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.விற்கும் முன்பே நாங்கள் வேட்பாளரை அறிவித்தோம். அந்த தொகுதி யில் உள்ள அனைத்து இடங்களிலும் பிரம்மாண்டமான ஊழியர் கூட்டங்களை நடத்தினோம். அதைப் பார்த்த அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பயந்துபோய் விட்டது. அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து வழக்கு போட்டார்கள். அந்த தேர்தலையே நிறுத்தினார்கள். அந்தத் தேர்தல் நடந்திருந்தால் அதில் டி.டி.வி. அணி வெற்றி பெற்று அடுத்து நடக்கவுள்ள அனைத்து தேர்தல் முடிவுகளையும் மாற்றும் என்பதால் நடத்தவில்லை.

dinakaran


திருவாரூர் தேர்தலில் நாங்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல தனியாகத்தான் களம் கண்டோம். தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களில் தனியாகத்தான் களம் காண்கிறோம். எங்கள் வெற்றிக்கு நாங்கள் எங்கள் பலத்தைத்தான் நம்புகிறோம். கூட்டணி கட்சிகள் என்கிற சுமையோடு நடக்க நாங்கள் விரும்பவில்லை. ஒன்றிரண்டு கட்சிகள் எங்களுடன் வர உள்ளன. அதனால் பெரிய கட்சிகளை தவிர்த்து விட்டோம்'' என பதில் சொல்கிறார்கள் டி.டி.வி. அணியினர்.
dinakaran
தினகரன் தமிழகம் முழுவதும் நடத்தும் சுற்றுப்பயணமும், காத்திருந்து அவர் பேச்சை கேட்கும் மக்களின் எண்ணிக்கையும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உற்றுப் பார்க்க வைத்துள் ளது. அ.ம.மு.க.வை மத்திய பா.ஜ.க அரசு தனது ஆயுதங்களால் பலமாக தாக்க ஆரம்பித்துள்ளது. டி.டி.வி. தினகரனுக்கும் சிறையிலிருக்கும் சசிகலாவிற்கும் நெருக்கமான கார்னெட் மணல் அதிபர் வைகுண்டராஜன் செய்து வந்த கனிம பிசுனசுக்கு மத்திய அரசு தடை போட்டு விட்டது.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட தினகரன் அணியைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ரத்தினசபாபதி, "என்னை தகுதி நீக்கம் செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டால் சபாநாயகர் தனபாலின் கையை வெட்டுவேன்' எனக் கூறினார். அதற்கு அடுத்தநாளே ரத்தின சபாபதிக்கு நெருக்கமான மணல் கார்த்திக் மற்றும் மணல் ரமேஷ் ஆகியோர் திருச்சி மற்றும் சென்னையில் நடத்தும் ஓட்டல்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இது டி.டி.வி. தினகரனின் பணபலத்தை நொறுக்குவதற்காக எடப்பாடி மத்திய அரசிடம் சொல்லி நடத்திய ஏற்பாடு என்கிறார்கள் டி.டி.வி. அணியை சேர்ந்தவர்கள்.

தேர்தல் களத்துக்கு வந்தால் "இரட்டை இலை' லஞ்ச வழக்கு வேகமெடுத்து தினகரனுக்கு திகார் ஜெயில்தான் என்ற மிரட்டல் பாலிசியால் ஹேப்பியாக இருக்கிறார் எடப்பாடி. பெரிய கட்சிகளே மிரளும் வகையில் செயல்படும் அ.ம.மு.க.வின் உள்குத்துகளும் மீடியாக்களில் வரத் தொடங்கியுள்ளன. டி.டி.வி. அணியின் மா.செ.வாக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன் மற்றும் சமீபத்தில் மா.செ. பதவி பறிக்கப்பட்ட செந்தமிழன் ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர். அதில் கலைராஜன் தி.மு.க.விற்கு தாவப்போகிறார் என செய்திகள் சிறகடிக்கின்றன. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் டி.டி.வி. கட்சியில் போட்டியிட யாரும் தயாராக இல்லை. இரட்டை இலை சின்னத்தை டி.டி.வி. தினகரன் இழந்தார். அத்துடன் குக்கர் சின்னமும் கிடைக்காது என்கிற நிலை உருவாகிவிட்டது. தேர்தலில் நின்றால் ஓட்டுக்களை பிரிக்க முடியுமே தவிர வெற்றி பெற முடியாது என்பதால் தேர் தலில் போட்டியிட தயக்கம் நிலவுகிறது.

சசிகலா குடும்ப உறுப்பினர்களுடன் தினகரனுக்கு சரியான உறவுமில்லை. டி.டி.வி.யுடன் கூட்டணி பேசி வந்த ஜான் பாண்டியனை எடப்பாடியிடம் அனுப்பி வைத்ததே திவாகரன்தான். குடும்ப உறுப்பினர்களை அட்ஜஸ்ட் செய்து நடந்து கொள்ளாததால் சசிகலா, இளவரசி மகன் விவேக் மூலம் கொட்டப்படும் பணம் தினகரனுக்கு கிடைக்காது என செய்திகளை வாசிக்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள்.

அ.ம.மு.க. நிர்வாகிகளோ, எங்களிடம் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட் பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். சசிகலாவுக்கும் தினகரனுக்கும் மோதல் இல்லை. தினகரன் சுற்றுப் பயணத்தில் இருப்பதால் அவரது மனைவி அனுராதா சசிகலாவை சந்தித்து பேசி யிருக்கிறார்.

அ.ம.மு.க.வை ஒருங்கிணைப்பதே சசிகலாதான். தேர்தலை சந்திக்க சசிகலா தான் நிதி தர வேண்டுமென்பதில்லை. எங்கள் பணத்தையே செலவு செய்து தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகவே உள்ளோம்'' என்கிறார்கள்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.