Skip to main content

சீல் வைப்பதில் டாஸ்மாக் கடைகளுக்கு விதிவிலக்கு இருக்கிறதா? - பியுஷ் மனுஷ் கேள்வி!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

v


தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் பியுஷ் மனுஷ் கூறியுள்ளதாவது, "நாளை டாஸ்மார்க் கடைகள் எல்லாம் திறக்கப் போவதாகக் கூறியிருக்கிறார்கள். எப்போதும் அரசாங்கம் கடைகள் உடனடியாகத் திறக்கப்படும் என்றுதான் அறிவிப்பார்கள். இன்றைக்குச் சொல்லி நாளைக்குத் திறப்பார்கள். இதுதான் வாடிக்கையான நடைமுறையாக இதுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது எதற்காக நான்கு நாட்கள் இடைவெளிவிட்டார்கள் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்குத் தற்போது விடை கிடைத்துள்ளது.


40 நாட்களாக வேலைக்குச் செல்லாத காரணத்தால் யாரிடமும் பணம் இருக்காது. எனவே வீட்டில் உள்ள நகை, அண்டா, குண்டாவை அடகு வைத்துவிட்டு பணத்தோடு டாஸ்மார்க் கடைக்கு வருவதற்கே இந்த பிளான் போடப்பட்டுள்ளது. தற்போது தனிமனித இடைவெளி இல்லாமல் நிறைய கடைகள் வெளிமாநிலங்களில் தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளது. அங்கே தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப் படுகின்றதா? தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்று பல்வேறு வகையான கடைகளை அதிகாரிகள் சீல் வைக்கிறார்கள், மளிகை, மருந்துக் கடைகளை சீல் வைக்கும் போது தனிமனித இடைவெளியைச் சிறிதும் கடைப்பிடிக்காத இந்தமாதிரியான மதுக்கடைகள் ஏன் சீல் வைக்கவில்லை. 

சீல் வைத்தால் அரசுக்கு வரும் வருமானம் பாதிக்கப்படும். சேலத்தில் 215 கடைக்கள் இருக்கு. அதில் 65 கடைகள் சேலம் நகரத்திற்குள் இருக்கின்றது. மாவட்டம் முழுவதும் வாகனங்களைச் சோதனை செய்யும் இடங்களில் 200 போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள். தற்போது மதுக்கடைகளைத் திறந்தால் அதற்கு யார் பாதுகாப்புக் கொடுப்பார்கள். ஒரு டாஸ்மார்க் கடைக்கு குறைந்தது 5 பேராவது பாதுகாப்புக்கு இருக்க வேண்டும் இல்லையா? அப்படி இல்லை என்றால் தனிமனித இடைவெளியை எப்படி கடைபிடிப்பார்கள். மாவட்ட முழுவதும் 150 கடைகள் இருக்கிறது. சிட்டிக்குள் 65 கடைகள் இருக்கின்றது. இந்த கடைக்கெல்லாம் காவலர்களைப் பயன்படுத்தினால் எத்தனை காவலர்கள் வருவார்கள் என்று நினைத்து பாருங்கள்.

 

 


அப்படி எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து சாராயம் விற்றால் கூட, குடித்துவிட்டு அதற்குப் பிறகு கிரைம் செய்பவர்களை யார் பார்ப்பது, அப்புறம் யார் அதை கண்ட்ரோல் செய்வது. அரசாங்கம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இதைக் கொண்டு வருகிறார்கள். இப்படித்தான் பெட்ரோல், டீசல் விலை ஏற்றினார்கள். மக்கள் அதைப் பற்றி கேள்வி எழுப்பவில்லை. ஆனால் டாஸ்மாக் கடை திறப்புக்குக் கதறி அழுவுகிறார்கள். இதைத்தான் ஒரு அரசாங்கம் செய்ய வேண்டுமா? இந்த அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்பதை வெளிப்படையாக இது காட்டுகிறது.

 

 

Next Story

பறந்த முத்தம்; பதறிய பாஜக எம்பிக்கள் - வெளுத்து வாங்கும் பியூஷ்மனுஷ்

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Piyush Manush interview

 

சமீபத்திய பாராளுமன்ற நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் அவர்கள்...

 

கொடுக்கப்படாத ஃப்ளையிங் கிஸ் ஸ்மிருதி இரானியால் பாராளுமன்றத்தில் அரசியலாக்கப்பட்டது. மணிப்பூரில் வெளியான வீடியோவிலேயே இவ்வளவு கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றால், இன்னும் வெளியாகாத விஷயங்கள் எவ்வளவு இருக்கும்? மணிப்பூர் முதலமைச்சரே சொல்கிறார் இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் அங்கு நடைபெற்றுள்ளது என்று. பாஜகவினர் தேசத்துரோகிகள் என ராகுல் காந்தி சரியாகச் சொன்னார். பாஜகவினர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் கலவரங்களுக்கு அரசின் ஆதரவு இல்லையென்றால் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை?

 

இவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தான் இதில் அரசியல் இருக்கிறது என்கிறோம். மணிப்பூரில் நடந்தது அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட வன்முறை. சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில் மக்களைத் துன்புறுத்துவது தான் தீவிரவாதம். 24 மணி நேரமும் இவர்களுடைய சிந்தனை மதம் குறித்தே இருக்கிறது. மக்கள் துன்பப்படுவதை மணிப்பூர் முதலமைச்சரால் நிறுத்த முடியவில்லை. ஆனால் அவரை மாற்றுவதற்கு பாஜக தயாராக இல்லை. சொந்த மாநிலத்தில் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். 

 

கொஞ்சமாவது மனசாட்சி இருந்திருந்தால் மணிப்பூர் முதலமைச்சரை இவர்கள் மாற்றியிருப்பார்கள். மணிப்பூர் மக்கள் யாரும் அவரை விரும்பவில்லை. ராகுல் காந்தி யாருக்கும் ஃப்ளையிங் கிஸ்  கொடுத்தது போல் வீடியோவில் தெரியவில்லை. ஆனால் இவர்கள் பொய்யைப் பரப்புகின்றனர். மணிப்பூரில் அவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்ட விஷயத்தை விட்டுவிட்டு, எந்த விஷயத்துக்காக இவர்கள் சபாநாயகரிடம் புகார் கொடுக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். சொந்த மக்களையே இவர்கள் இன அழிப்பு செய்கிறார்கள். 

 

பிரதமரைப் பேச வைப்பதற்காகத் தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அவர் பேசுவதற்கு தயாராக இல்லை. பஸ்ஸில் 10 கிலோமீட்டர்கள் சென்றுவிட்டு வெறும் 2 கிலோமீட்டர்கள் மட்டும் நடப்பது தான் அண்ணாமலையின் நடைபயணம். இந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு என்ன மக்கள் நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? சிலிண்டர் விலையை உயர்த்தியது, மக்கள் சொத்துக்களை அதானியிடம் கொடுப்பது தான் சாதனையா? இவர்கள் வாயைத் திறந்தாலே பொய்தான் பேசுகிறார்கள். இவர்கள் நாட்டை மொத்தமாகக் கொள்ளையடிக்கிறார்கள்.

 

 

 

Next Story

“இளம்பெண்கள் கடத்தல்; மோடி ஊரில் நடக்கும் அவலம்” - பியூஷ் மனுஷ்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Piyush Manush  Interview

 

குஜராத் மாநிலத்தில் பெண்கள் கடத்தப்படும் சம்பவம் மற்றும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து நம்மோடு சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் பகிர்ந்துகொள்கிறார்.

 

அவர் பேசியதாவது: “குஜராத் மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பெண் சிசுக் கொலை அங்கு அதிகம் நடக்கிறது. பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர். ஆனால், வட இந்திய மக்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியாது. அவர்களுக்கு மதம் தான் முக்கியம். காங்கிரஸ் ஆட்சியில் தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் இருந்தன. பாஜக ஆட்சியில் தீமைகள் மட்டும் தான் இருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளில் 40000 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

 

இந்தக் குற்றச்சாட்டுகள் எதன் மீதும் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. சங்கிகளுக்கு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு மட்டும் தான் அரசியல். ஏழை மக்கள் இருக்கும் பகுதிகளை எப்போதும் தடுப்பு வைத்து மறைக்கவே விரும்புபவர் மோடி. அவருக்கு இதுபற்றியெல்லாம் கவலை இருக்காது. மணிப்பூரில் கலவரத்தால் இவ்வளவு பேர் இறந்த பிறகும் மோடிக்கு கர்நாடக தேர்தலின் மீதுதான் ஆர்வம் இருக்கிறது. அவர் என்ன செய்தாலும் அவருடைய பக்தர்கள் கைதட்டுவார்கள். உக்ரைன்-ரஷ்யா போரைக் கூட அவரால் நிறுத்த முடியும் என்று நம்புவார்கள். 

 

மணிப்பூரில் நடைபெறும் கலவரம் பாஜக உருவாக்கியது தான். கலவரம் குறித்து மோடி, அமித்ஷா வாய் திறக்கவே இல்லை. கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருவரும் பிசியாக இருந்தனர். மோடிக்கு இந்து பெண்கள் பற்றிக் கவலையில்லை. அவர்களின் கல்விக்கு நீட் மூலம் தடை போட்டுள்ளார். பெண்களின் முன்னேற்றத்துக்காக எதையும் செய்யவில்லை. தேர்தலைச் சுற்றி மட்டும் தான் அவருடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அவருடைய பிரச்சார அணிவகுப்பில் மக்களையே காண முடியவில்லை. கட்சிக்காரர்களே நின்று பூக்களை அவர் மேல் தூவுகின்றனர். மத ரீதியான 'தி கேரளா ஸ்டோரி' படத்தை இவர்கள் ப்ரமோட் செய்கின்றனர். 

 

தமிழ்நாடு குறித்து மணிஷ் காஷ்யப் அவதூறு பரப்பி வருவதை முதன்முதலில் நான் தான் வெளிப்படுத்தினேன். அந்த நேரத்தில் அவர்களால் முடிந்த அளவு அவதூறு செய்திகளைப் பரப்பினர். அதன் பிறகு மணிஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டான். அவனுக்கு தண்டனை வாங்கித் தருவது தான் அடுத்து என்னுடைய வேலை. இதுபோன்ற ஆர்எஸ்எஸ் நபர்கள் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்தத் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம்.”