Skip to main content

பாஜக ஒரு மீட்டிங் நடத்திட்டு... முடிந்தால் கருத்தால் சண்டைபோடு, அதைவிட்டுவிட்டு... பியூஸ் மானுஷ்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் ஆஞ்சிநேயரை அவமதித்துவிட்டார் என்பதுபோன்ற போலிச்செய்திகளை ஃபேஸ்புக்கில் பரப்பினர். மேலும் அவரது எண்ணையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர். இதுகுறித்து அவர் கூறியது.
 

piyush manush


காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என அனைவரையும் நாம் எதிர்த்திருக்கிறோம், ஆனால் இப்படி ஃபேக் நியூஸ் போட்டு, போட்டு குடும்பத்தை தாக்குவது, இப்போது இன்னும் கீழ்மட்டத்திற்கு சென்று கடவுள் பெயரை வைத்து தாக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆஞ்சிநேயரைப்பற்றி அவதூறாக நாம் எதுவுமே பேசவில்லை. ஆனால் இவர்கள் இவ்வளவு கீழ்தரமாக இறங்குவார்கள் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. காலையிலிருந்து 400 ஃபோன் கால்கள் வந்துவிட்டன. அதில் 350 ஃபோன் கால்கள் அவை ஃபேக் நியூஸ் என தெரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டனர். அது மிகவும் நல்ல விஷயம். நிறையபேர் தாக்கவும் செய்துள்ளனர். 
 

எப்போதும் நம்மைப்பற்றி ஃபேக் நியூஸ் பரப்புவார்கள் ஆனால் இந்தளவிற்கு இல்லை. சமீபத்தில் என்ன ஆச்சுனா, பாஜக ஒரு மீட்டிங் நடத்திட்டு இருந்தாங்க. அப்போது சாமி பாடல்கள், பக்தி பாடல்களெல்லாம் போட்டுட்டு இருந்தாங்க. நாம மதங்களை பயன்படுத்தாமல் ஓட்டுக்களை கேளுங்கள் என எதிர்த்தோம். இந்து மதத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் கிடையாது, இந்து மதத்தை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நீ அதை ஓட்டுக்காக பயன்படுத்தாதீர்கள். இந்து மதம் நீ விளையாடக்கூடிய மைதானம் கிடையாது எனக்கூறினேன். அதற்கு அவர்கள் இது மதமில்லை, கலாச்சாரம் எனக்கூறினர். இது கலாச்சாரம் இல்லை, இது மதம். 
 

ஓட்டுக்காக மதம், ஜாதியை பயன்படுத்தக்கூடாது, நாம் அதில் தெளிவாக இருக்கிறோம். இதுகுறித்து பேசியதுதான் பெரிய ரகளை ஆகிவிட்டது. பறக்கும்படை வந்தவுடனே நாங்கள் அந்தப் பாடல்களையெல்லாம் போடவே இல்லை எனக்கூறிவிட்டனர். நான் புகார் கொடுத்துள்ளேன், நீ ஆஞ்சிநேயர் பாடல் போட்டீர்கள் என்று. ஆமாம் போட்டேன் என்று சொல்லிருக்கலாமே. வழக்குதானே போடுவார்கள், போடட்டும் என கூறவேண்டியதுதானே. அப்போது அவர்கள் உண்மையான பக்தர்கள். புகார் வந்தவுடனேயே நாங்கள் பாட்டே போடவில்லை எனக்கூறுகிறார்கள். இப்போது நான் ஆஞ்சிநேயர் குறித்து அவதூறாக பேசினார்கள் எனக்கூறி, பொய் செய்திகளை பரப்புகிறார்கள். 
 

நாம் பேசிக்கொண்டிருந்தபோதே அந்த ஃபேக் நியூஸை பார்த்துவிட்டு, அவருக்கு யாரோ கால் செய்திருக்கிறார்கள். அதில் அவர் பேசிவிட்டு வந்தார். 
 

கருத்திற்கு கருத்து மூலம் சண்டைபோடு. முடிந்தால் கருத்தால் சண்டைபோடு. அதைவிட்டுவிட்டு ஓடி, ஒளிந்து ஃபேக் ஐடிக்கள் மூலம், ஃபேக் நியூஸ்களைப் போட்டுதான் களத்தில் வெல்ல வேண்டுமென்றால் அதைவிட கேவலம் வேறெதுவுமில்லை. ஃபேக் நியூஸ் பரப்பவேண்டுமென்று எவனோ ஒருவன் மதத்தைக் கொச்சைப்படுத்தியிருக்கிறானே, அவன் எவ்வளவு கொடூரமானவனாக இருப்பான். நான் நித்தியானந்தாவை திட்டுவேன், உடனே அவன் இந்து கடவுளை திட்டுகிறேன் என்கிறான். இந்துக் கடவுள்களுக்கும், நித்தியானந்தாவிற்கும் வித்தியாசம் இல்லையா. 

 

 

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.