Skip to main content

புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சாப்பாடு கொடுக்கக் கூட மத்திய அரசால் முடியாதா..? - பியுஷ் மனுஷ் கேள்வி!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

jk


புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்புவதில் பல்வேறு சிக்கல் எழுந்த நிலையில் இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் பியுஷ் மனுஷ் மத்திய அரசை விமர்சனம் செய்து பேசியதாவது, "மக்களுக்கு தண்ணியும் உணவையும் கொடுங்கள் என்று அரசாங்கத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும் நிலையில் நாடு இருக்கின்றது. பொதுமக்கள் உங்கள் ரயிலில் பணம் கொடுத்துச் செல்லும் போது அவர்களுக்குத் தேவையானதை நீங்கள் தானே கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கின்றது. அரசாங்கத்தின் அறிக்கையை அடிப்படையாக வைத்து இப்போது நான் பேச உள்ளேன். அரசாங்கம் தற்போது என்ன கூறுகிறது என்றால் 97 லட்சம் பேரை அவர்கள் வேலை செய்யும் இடங்களில் இருந்து அவர்கள் வீடுகளுக்குக் கொண்டு சேர்த்து விட்டோம் என்று சொல்கிறது. அவர்கள் ரயிலில் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது மூன்று நாளில் இருந்து ஒருவாரம் கூட ஆகின்றது. குறைந்தது மூன்று நாட்கள் என்று வைத்துக்கொண்டால் கூட அரசாங்கம் இதுவரை 84 லட்சம் உணவு பாக்கெட்டுக்களை அந்தத் தொழிலாளர்களுக்குக் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். 
 


அப்படி என்றால் ஒரு ஆளுக்கு ஒரு பாக்கெட் கொடுத்துள்ளார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் உணவுக்கு என்ன செய்வார்கள். சாப்பிடாமல் அவர்கள் அனைவரும் ஊருக்குப் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? இது அனைத்தும் அரசாங்கம் கொடுத்த டேட்டா. நானாக எந்தத் தகவலையும் கூறவில்லை. அதுவும் மக்கிப் போன சாப்பாட்டைக் கொடுத்து மக்களைத் தூக்கி எறிந்துள்ளார்கள். 16 பேர் இறந்துள்ளார்கள், உணவில்லாமலும்,  வெப்பத்தின் காரணமாகவும் ரயிலில் மட்டும் இந்த இறப்பு நடைபெற்றுள்ளது. நாம் அனைவரும் பீகார் ரயில் நிலையத்தில் தாயைப் பறிக்கொடுத்துவிட்டு குழந்தை விளையாடிய வீடியோவை பார்த்திருப்போம். சில நாட்களுக்கு முன்பு இந்தத் தொழிலாளர்கள் செல்வதற்குரிய கட்டணத்தை 85 சதவீதம் மத்திய அரசு தருவதாக ஒரு தகவலைக் கூறினார்கள். உச்சநீதிமன்றத்தில் தற்போது அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் இந்தக் கட்டணங்களை மாநிலங்கள் பார்த்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்கள். அப்புறம் எதற்காக மக்களிடம் அவர்கள் பொய்க்கூற வேண்டும்.

நீங்கள் பி.எம். கேர் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் வைத்துள்ளீர்கள். இந்தப் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒரு ரயில் டிக்கெட் எடுத்துக்கொடுத்துள்ளீர்களா? ஏன் எடுத்துக்கொடுக்கவில்லை. இதற்குப் பிரதமர் பதில் சொல்வாரா? அவரால் எதுவும் கூற முடியாது. அவர் மக்கள் நலனில் அக்கறை இருந்தால்தானே அது பற்றி சிந்திக்க முடியும். அந்த மாதிரியான சிந்தனைகள் எல்லாம் அவருக்கு ஒருபோதும் வராது. அவர்களுக்கு என்னவெல்லாமோ செய்ய இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர்களுக்குச் செய்தது என்ன, தண்ணீரும், உணவும் கேட்கிறார்கள். அதைக்கூட செய்ய மாட்டேன் என்று எதற்காகக் கூறுகிறீர்கள். யாரும் யோசிக்க முடியாத அளவுக்கு ஒரு மோசடி நடைபெற்று வருகின்றது" என்றார்.



 

 

Next Story

பறந்த முத்தம்; பதறிய பாஜக எம்பிக்கள் - வெளுத்து வாங்கும் பியூஷ்மனுஷ்

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Piyush Manush interview

 

சமீபத்திய பாராளுமன்ற நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் அவர்கள்...

 

கொடுக்கப்படாத ஃப்ளையிங் கிஸ் ஸ்மிருதி இரானியால் பாராளுமன்றத்தில் அரசியலாக்கப்பட்டது. மணிப்பூரில் வெளியான வீடியோவிலேயே இவ்வளவு கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றால், இன்னும் வெளியாகாத விஷயங்கள் எவ்வளவு இருக்கும்? மணிப்பூர் முதலமைச்சரே சொல்கிறார் இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் அங்கு நடைபெற்றுள்ளது என்று. பாஜகவினர் தேசத்துரோகிகள் என ராகுல் காந்தி சரியாகச் சொன்னார். பாஜகவினர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் கலவரங்களுக்கு அரசின் ஆதரவு இல்லையென்றால் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை?

 

இவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தான் இதில் அரசியல் இருக்கிறது என்கிறோம். மணிப்பூரில் நடந்தது அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட வன்முறை. சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில் மக்களைத் துன்புறுத்துவது தான் தீவிரவாதம். 24 மணி நேரமும் இவர்களுடைய சிந்தனை மதம் குறித்தே இருக்கிறது. மக்கள் துன்பப்படுவதை மணிப்பூர் முதலமைச்சரால் நிறுத்த முடியவில்லை. ஆனால் அவரை மாற்றுவதற்கு பாஜக தயாராக இல்லை. சொந்த மாநிலத்தில் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். 

 

கொஞ்சமாவது மனசாட்சி இருந்திருந்தால் மணிப்பூர் முதலமைச்சரை இவர்கள் மாற்றியிருப்பார்கள். மணிப்பூர் மக்கள் யாரும் அவரை விரும்பவில்லை. ராகுல் காந்தி யாருக்கும் ஃப்ளையிங் கிஸ்  கொடுத்தது போல் வீடியோவில் தெரியவில்லை. ஆனால் இவர்கள் பொய்யைப் பரப்புகின்றனர். மணிப்பூரில் அவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்ட விஷயத்தை விட்டுவிட்டு, எந்த விஷயத்துக்காக இவர்கள் சபாநாயகரிடம் புகார் கொடுக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். சொந்த மக்களையே இவர்கள் இன அழிப்பு செய்கிறார்கள். 

 

பிரதமரைப் பேச வைப்பதற்காகத் தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அவர் பேசுவதற்கு தயாராக இல்லை. பஸ்ஸில் 10 கிலோமீட்டர்கள் சென்றுவிட்டு வெறும் 2 கிலோமீட்டர்கள் மட்டும் நடப்பது தான் அண்ணாமலையின் நடைபயணம். இந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு என்ன மக்கள் நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? சிலிண்டர் விலையை உயர்த்தியது, மக்கள் சொத்துக்களை அதானியிடம் கொடுப்பது தான் சாதனையா? இவர்கள் வாயைத் திறந்தாலே பொய்தான் பேசுகிறார்கள். இவர்கள் நாட்டை மொத்தமாகக் கொள்ளையடிக்கிறார்கள்.

 

 

 

Next Story

“இளம்பெண்கள் கடத்தல்; மோடி ஊரில் நடக்கும் அவலம்” - பியூஷ் மனுஷ்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Piyush Manush  Interview

 

குஜராத் மாநிலத்தில் பெண்கள் கடத்தப்படும் சம்பவம் மற்றும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து நம்மோடு சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் பகிர்ந்துகொள்கிறார்.

 

அவர் பேசியதாவது: “குஜராத் மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பெண் சிசுக் கொலை அங்கு அதிகம் நடக்கிறது. பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர். ஆனால், வட இந்திய மக்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியாது. அவர்களுக்கு மதம் தான் முக்கியம். காங்கிரஸ் ஆட்சியில் தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் இருந்தன. பாஜக ஆட்சியில் தீமைகள் மட்டும் தான் இருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளில் 40000 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

 

இந்தக் குற்றச்சாட்டுகள் எதன் மீதும் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. சங்கிகளுக்கு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு மட்டும் தான் அரசியல். ஏழை மக்கள் இருக்கும் பகுதிகளை எப்போதும் தடுப்பு வைத்து மறைக்கவே விரும்புபவர் மோடி. அவருக்கு இதுபற்றியெல்லாம் கவலை இருக்காது. மணிப்பூரில் கலவரத்தால் இவ்வளவு பேர் இறந்த பிறகும் மோடிக்கு கர்நாடக தேர்தலின் மீதுதான் ஆர்வம் இருக்கிறது. அவர் என்ன செய்தாலும் அவருடைய பக்தர்கள் கைதட்டுவார்கள். உக்ரைன்-ரஷ்யா போரைக் கூட அவரால் நிறுத்த முடியும் என்று நம்புவார்கள். 

 

மணிப்பூரில் நடைபெறும் கலவரம் பாஜக உருவாக்கியது தான். கலவரம் குறித்து மோடி, அமித்ஷா வாய் திறக்கவே இல்லை. கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருவரும் பிசியாக இருந்தனர். மோடிக்கு இந்து பெண்கள் பற்றிக் கவலையில்லை. அவர்களின் கல்விக்கு நீட் மூலம் தடை போட்டுள்ளார். பெண்களின் முன்னேற்றத்துக்காக எதையும் செய்யவில்லை. தேர்தலைச் சுற்றி மட்டும் தான் அவருடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அவருடைய பிரச்சார அணிவகுப்பில் மக்களையே காண முடியவில்லை. கட்சிக்காரர்களே நின்று பூக்களை அவர் மேல் தூவுகின்றனர். மத ரீதியான 'தி கேரளா ஸ்டோரி' படத்தை இவர்கள் ப்ரமோட் செய்கின்றனர். 

 

தமிழ்நாடு குறித்து மணிஷ் காஷ்யப் அவதூறு பரப்பி வருவதை முதன்முதலில் நான் தான் வெளிப்படுத்தினேன். அந்த நேரத்தில் அவர்களால் முடிந்த அளவு அவதூறு செய்திகளைப் பரப்பினர். அதன் பிறகு மணிஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டான். அவனுக்கு தண்டனை வாங்கித் தருவது தான் அடுத்து என்னுடைய வேலை. இதுபோன்ற ஆர்எஸ்எஸ் நபர்கள் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்தத் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம்.”