Skip to main content

இந்தியாவை விமர்சித்து மீண்டும் முதல் இடத்தை பிடித்த யூ-ட்யூப் சேனல்...

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

‘பியுவ் டை பை’ என்னும் யூ-ட்யூப் சேனலுக்கும் இந்தியாவைச் சேர்ந்த மியூஸிக் லேபல் ட்-சீரிஸ் யூ-ட்யூப் சேனலுக்கும் யூ-ட்யூபில் ஒரு போரே நடந்துகொண்டிருப்பது நாம் அறிந்ததே. 
 

pewdiepie

 

 

இந்த இரண்டு சேனல்களும்தான் யூ-ட்யூபில் அதிக சப்ஸ்க்ரைபர்கள் வைத்திருக்கும் சேனல்கள். தற்போது யார் 10 கோடி சப்ஸ்க்ரைபர்கள் பெற்று யூ-ட்யூபில் முதலிடம் பிடிப்பார்கள் என்று இரு சேனலுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த பியுவ் டை பை என்னும் சேனலை முந்தியது டி- சிரீஸ். இதன் பின்னர் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்வது போன்று இந்தியாவை விமர்சித்து  ‘பியுவ் டை பை’ வெளியிட்ட ரேப் பாடல் தற்போது வைரலாகியது. இதனால் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது இந்த பியுவ் டை பை சேனல். அதுவும் இவ்விரு சேனலுக்கும் 2 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் வித்தியாசம் தற்போதைய நிலவரப்படி உள்ளது.
 

‘பியுவ் டை பை’என்னும் அந்த சேனலை சுவீடன் நாட்டைச் சேர்ந்த 29 வயது இளைஞரான ஃபெலிக்ஸ் அர்விட் நடத்தி வருகிறார். இவருடைய சேனலின் சிறப்பம்சம் என்ன என்றால் இவர் மட்டும்தான் இந்த சேனலையே நடத்துகிறார். காமெடியும் காண்டிரவர்சியுமே இவருடைய சேனல் மிக பிரபலமாகுவதற்கு காரணமாக இருந்தது. யூ-ட்யூபில் அதிகமாக சம்பாதித்தவர்களில் இவரும் ஒருவர். யூ-ட்யூபினால் கிடைத்த பிரபலத்தின் மூலம் பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். உலகம் முழுவதும் இவருக்கு பல ரசிகர்களும் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 
 

கடந்த மார்ச் 30ஆம் தேதி இவர் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு டி-சீரிஸை வாழ்த்துவது போன்று ராப் பாடல் ஒன்றை வெளியிட்டார். அந்த ராப் பாடலில் இந்தியாவில் உள்ள வறுமை, ஜாதி பாகுபாடு ஆகியவற்றை எல்லாம் குறிப்பிட்டு இந்தியாவை விமர்சித்து பாடியுள்ளார். மேலும் இவருடைய போட்டியாளராக இருக்கும் டி-சீரிஸின் தலைவர் பூஷன் குமாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்திருக்கிறார். இதனால் பூஷன் குமார் பியுவ் டை பை மீது மானநஷ்ட வழக்கு போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 
 

‘பியுவ் டை பை’ சேனலில் ஏற்கனவே இந்தியாவை மிகவும் மோசமாக விமர்சித்து பெரும் சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறார். இந்த போட்டியில் டி-சீரிஸ் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பூஷன் குமார் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான ஷாரூக் கான், சல்மான் கான் ஆகியோரிடம் உதவி கேட்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

'அவதூறு பரப்பிய பிரபல யூடியூப் சேனல்'- நஷ்ட ஈடு கேட்கும் மலேசிய தயாரிப்பாளர்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
nn


மலேசியா நாட்டை சேர்ந்தவர்  அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் என பன்முகத்தன்மை கொண்டவர். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல ஆயிரம் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையை பாராட்டி மலேசிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சர்வதேச அளவில் ‘மாஸ்டர் கிளாஸ் தொழில் முனைவோர்‘ என்ற விருதும் பெற்றுள்ளார்.

கடின உழைப்பு மூலம் இளம் வயதிலே பல சாதனைகளை தன் வசப்படுத்தியுள்ள அப்துல் மாலிக் பின் தஸ்திகீர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டது. அதில், சமீபத்தில் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக் என்பவருக்கும் அப்துல் மாலிக் அவர்களுக்கும் தொடர்பு உண்டு என்ற அவதூறு செய்தி வெளியானது. உண்மைக்கு புறம்பாக அவதூறு செய்தி வெளியிட்ட சில யு.டியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் 18.03.2024 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்து அப்துல் மாலிக் பின் தஸ்திகீர் அவர்களின் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, 'அப்துல் மாலிக் மலேசியாவில் புகழ்பெற்ற தொழிலதிபர். அவருடைய நிறுவனங்களில் ஒன்றான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சினிமா தொடர்புடைய பல வர்த்தகம் செய்து வருகிறது. குறிப்பாக, தமிழ் படங்களைவை மலேசியாவில் விநியோகம் செய்து வருகிறார். இணை தயாரிப்பாளராக பல தமிழ் படங்களையும் தயாரித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பல உதவிகளையும் தன்னலம் பார்க்காமல் செய்து வருகிறார். அவருடைய இந்த சேவைகளை பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதை கொடுத்து கெளரவித்துள்ளது.

தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் பல நட்சத்திர கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மலேசியா வரும்போது சினிமா சார்ந்து பல ஆலோசனைகளையும், வழிநடத்துதலையும் அப்துல் மாலிக்கிடம் கேட்பதுண்டு.  இதன் காரணமாக அப்துல் மாலிக்கின் வளர்ச்சியை பிடிக்காத சில விஷமிகள் சமூக வலைத்தளங்களில் அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தீய நோக்கத்துடன் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அதை அடிப்படையாக கொண்டு மேலும் பல யூடியூப் சேனல்கள் செவி வழி செய்தியை உண்மை என்று நம்பி எந்தவித விசாரணை, முன் அனுமதியும் இல்லமால் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

வீடியோ பதிவுகள் அப்துல் மாலிக் நற்பெயரை களங்கப்படுத்தி இருப்பதோடு, மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அதை சட்டபூர்வமாக அணுகும் விதமாக பொய் வீடியோ வெளியிட்ட நிறுவனங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனுவும் அளித்துள்ளோம். அந்த புகாரில், அவதூறு வீடியோக்களை நீக்குவதோடு, பொதுவெளியில் அப்துல் மாலிக் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது, இந்திய மதிப்பில் ரூபாய் ஐந்து கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்'' என்றனர்.