Skip to main content

அமலாக்கத்துறைக்கு எதிரான மனுவும்; பின்னணியும்! 

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Petition against the enforcement department and reason

 

கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், திருச்சி மாவட்டம் மாதவப்பெருமாள் கோயில், தாளக்குடி, நொச்சியம் உள்ளிட்ட பகுதிகளிலிருக்கும் மணல் குவாரிகளில் நடத்திய ஆய்வில், மணல் குவாரியில் உள்ள ஸ்டாக் பாயிண்ட்டில் எவ்வளவு மணல் உள்ளது? அனுமதிக்கப்பட்ட அளவில் மணல் விற்கப்படுகிறதா? அதற்கு முறையான ரசீதுகள் போடப்பட்டு பராமரிக்கப்படுகிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தனர். மணல் குவாரி ஒப்பந்ததாரர்களிடமும் பலகட்ட விசாரணைகள் நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் இம்மாதம் 4 ஆம் தேதி, ஐ.ஐ.டி. மாணவர்கள் உதவியுடன், ரிவர் சர்வேயர், ஹைட்ரோ சர்வேயர் உடன் அதே பகுதிகளில் மீண்டும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

அதில், ஒரு நாளைக்கு எத்தனை லாரிகள் வருகிறது? எத்தனை யூனிட் அனுமதி பெற்று வருகிறது? அதற்கான தொகை எவ்வளவு? மணல் குவாரிகளில் அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதையெல்லாம் ஆய்வு செய்தனர். அதில், நாள் ஒன்றுக்கு 50 லாரிகளுக்கு மட்டுமே மணல் எடுப்பதற்கு அனுமதி பெற்றுக்கொண்டு, 500 லாரிகளுக்கு அள்ளப்படுவது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், ஐ.ஐ.டி. மாணவர்களின் உதவியுடன் கொள்ளிடம் ஆற்றில் எவ்வளவு ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பதை அளவீடு செய்தனர். கடந்த இரண்டு மாதங்களில் மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதும், விதிமுறைகள் மீறப்பட்டதும் உறுதிசெய்யப்பட்டது. எனவே மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

 

Petition against the enforcement department and reason

 

மேலும், நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியதில், பெரும்பாலான இடங்களில் மணல் அள்ளுவதை உயர் அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்காதது வெட்டவெளிச்சமானது. இதையடுத்து, தமிழ்நாட்டிலுள்ள 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த அதிகாரிகள் விரைவில் அமலாக்கத்துறை முன்பாக ஆஜர் ஆவார்களென்று கூறப்படுகிறது.

 

இந்த மணல் விவகாரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பெரிய அளவில் கவனம் செலுத்தாமல், கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில்தான் அதிக விதிமீறல்கள் நடைபெற்றதாகவும், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே திருச்சி மாவட்ட ஆட்சியருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், அமலாக்கத்துறையினர் முன்னிலையில் ஆஜராகலாம் அல்லது திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அமலாக்கத்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தலாம். திருச்சி மாவட்ட ஆட்சியருக்கே சம்மன் அனுப்பப்பட்டிருப்பது, அப்பகுதி மணல் குவாரி உரிமையாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 

 

Petition against the enforcement department and reason

 

இந்த நிலையில், 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை, நீர்வளத்துறை செயலர்கள், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு மனுவில், ‘மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கனிமவள கொள்ளை தொடர்பான ஆயிரக்கணாக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு சென்று நடவடிக்கை எடுக்காத அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்யப்படுவதாக கூறி அதிகார துஷ்பிரயோகம் செய்து, வரம்பு மீறி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

 

உள்நோக்கத்தோடு, மாநில நிர்வாகத்தை சீர்குலைக்கும் விதமாக மத்திய அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தில் கனிமவளம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசோ, புலன் விசாரணை அமைப்புகளோ, நீதிமன்றமோ உத்தரவிட்டு இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையால் நடவடிக்கை எடுக்க முடியும். சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசே விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது. 

 

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், அதிகார வரம்பை மீறியும் மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும் அமலாக்கத்துறை சம்மன் பிறப்பித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அமலாக்கத்துறையை பயன்படுத்தி இது போன்ற சர்வாதிகார நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட குவாரிகளின் விவரம் மட்டுமின்றி, தற்போது அனைத்து மணல் குவாரிகளின் விவரங்களையும் அமலாக்கத்துறை கோரியுள்ளது. 

 

Petition against the enforcement department and reason

 

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் சாட்சியாக சேர்க்கப்படாத, குற்றஞ்சாட்டப்படாத மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் பிறப்பிக்க இயலாது. மாநில அரசின் அனுமதியின்றி அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், நேற்று நீதிபதிகள், எஸ்.எஸ். சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் முறையிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொண்டு வரும் நவம்பர் மாதம் 27ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர். 

 

 

Next Story

அமலாக்கத்துறை சம்மனுக்கு அவகாசம் கேட்ட தமன்னா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
tamanna asked for time to summon the enforcement department regards ipl

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமன்னாவிற்கு இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியது. 

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக தமன்னா அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், மும்பையில் தற்போது இல்லை என சைபர் கிரைம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் பின்னர் வேறொரு நாளில் ஆஜராகவுள்ளதாக கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

‘சுகர் வருவதற்காகவே ஸ்வீட் சாப்பிடுகிறார்” - கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Kejriwal accused by the enforcement department to eats sweets just to get sugar

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதாடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அவர் அளித்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று (18-04-24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார்.