Skip to main content

மகளிரில் மாணிக்கம் மணியம்மையார்

Published on 10/03/2018 | Edited on 11/03/2018

மார்ச் 10 மணியம்மையார் பிறந்த நாள்
 

மகள் வயதுடைய சின்னப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவரெல்லாம் தலைவரா, இவரின் பெண் விடுதலை என்பது நாடக பேச்சாகிவிட்டதே என குற்றச்சாட்டு வைத்தார்கள் அவரது எதிரிகள். அந்த பெரியவரும் – சின்னப்பெண்ணும் இறந்து பல ஆண்டுகள் ஆனப்பின்பும் திருமணத்தை சுட்டிக்காட்டியே அந்த பெரியவரின் புகழை இன்றும் அழிக்க துடிக்கிறார்கள். அப்படி பேசுபவர்கள் பெண் இனத்துக்காகவோ அல்லது அந்த சின்ன பெண்ணுக்காக பரிதாபப்படவில்லை. தனக்கு பின் தன் கொள்கைகளை பரப்ப ஒரு வாரிசை சட்டப்படி உருவாக்கிவிட்டு செல்கிறாறே என்கிற ஆத்திரம், விரக்தி, கோபம் தான் அவர்களை பேசவைத்தது. உண்மையில் அந்த பெண் பெரியாரை விரும்பியே மணந்துக்கொண்டார். சுகம் கிடைக்காது என தெரியும், அந்த பெரியவரின் கொள்கைகளை விரும்பி, சமுதாயத்தின் விடிவெள்ளியான அவர் நீண்ட காலம் வாழவேண்டும், அவரது கருத்துக்களை பரப்ப வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் மணந்தார். அந்த சின்னப்பெண் சரியாக தான் செய்தார் என்பதை இன்றைய தலைமுறை தமிழகமும் ஏற்றுக்கொண்டதால் தான் பெரியவர் மறைந்து 45 ஆண்டுகளை கடந்தும் அவரை தமிழகம், ஏன் இந்தியாவே கொண்டாடுகிறது. அவரது பெயரை கேட்டாலே எதிரிகள் பயந்து நடுங்குகிறார்கள். அந்த பெரியவர் நமது தந்தை பெரியார். அவரை விரும்பி மணந்த அந்த சின்னப்பெண் மணியம்மை.
 

periyar maniammai


வேலூர் மாநகரில் வாழ்ந்த சுயமரியாதை இயக்கத்தின் தொண்டர் கனகசபை – பத்மாவதி தம்பதியரின் மகளாக பிறந்தவர் 1920 மார்ச் 10ந்தேதி பிறந்தார் காந்திமதி. குடியாத்தம் நகரை பூர்வீகமாக கொண்ட பெரியாரின் தளபதிகளில் ஒருவரான தமிழ் ஆர்வலர் அண்ணல்.தங்கோ, கனகசபையின் வீட்டுக்கு இயக்க வேலையைாக அடிக்கடி வருவார், அப்படி வந்தவர் காந்திமதிக்கு அரசியல்மணி என பெயர்சூட்டினார். அண்ணல்தங்கோ மீது இருந்த மரியாதையால் அந்த பெயரிலேயே அவரை அழைத்தனர் பள்ளியில் சேர்த்தனர்.
 

பெரியார் கனகசபை வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அரசியல்மணி, 9வது படிக்கும்போது பெரியாரை வீட்டில் பார்த்து பேசினார் என்கிற காரணத்தால் மணியம்மையை பள்ளியை விட்டு நீக்கினார்கள். பெரும் பிரச்சனையாகி பின் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். வேலூரில் பள்ளி படிப்பை முடித்ததும் நெல்லை மாவட்டம் குலசேகரபட்டினத்தில் இருந்த சி.டி.நாயகம் தமிழ் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் அரசியல்மணி.
 

1943ல் பெரியார் தனது தொண்டரும், நண்பருமான கனகசபைக்கு எழுதிய ஒரு கடிதத்தில், எல்லோரும் எப்படி இருக்கிங்க, உடலை கவனமா பார்த்துக்குங்க என சொல்கிறார்கள், அருகில் இருந்து கவனித்துக்கொள்ளத்தான் யாரும்மில்லை என ஆதங்கத்துடன் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை கண்டதும் கனகசபை துடித்துவிட்டார். வேலூரில் இருந்து குலசேகரன்பட்டினம் சென்றவர் தன் மகளை அழைத்துக்கொண்டு ஈரோடு சென்றார். பெரியாரை பார்த்து, இவள் என் மகள், இனி உங்களை உடன் இருந்து கவனித்துக்கொள்வாள் என்றார். அரசியல்மணியின் விருப்பத்தை கேட்டார் அரசியல்மணி, உங்களை கவனித்துக்கொள்வது என் கடமை என தன் விருப்பத்தை கூறியதும் சரியென்றார் பெரியார்.
 

பெரியாரின் பேச்சுக்களை குறிப்பெடுத்து அதனை தொகுத்து குடியரசு இதழ்க்கு அனுப்புவது, பெரியாரின் உடல் நலத்தை பராமரித்து சரியான நேரத்தில் உணவு, மருந்து பொருட்கள் வழங்குவது போன்ற பணிகளை செய்தார். அவரின் உதவியாளராக இருந்தார். பெரியார் செல்லும் கூட்டங்களுக்கு மணியம்மையும் உடன் செல்வார். இயக்கத்தின் நூல்களை கூட்டத்தில் விற்பனை செய்வார், கூட்டம் முடிந்ததும் பெரியாருடன் இணைந்துக்கொள்வார். அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்யத்துவங்குவார்.  
 

திராவிட கழகத்தின் இயக்க தொண்டர்களில் மூத்தவர்கள் அரசியல்மணியை, மணி, மணி என்றும், இயக்கத்தில் வயது குறைந்தவர்கள் மணியம்மா என பாசத்துடன் அழைத்தனர். பெரியாரை நன்றாக கவனித்துக்கொண்டார் மணியம்மை.
 

periyar maniammai with veeramani


1944ல் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தான் நீதிக்கட்சி என்கிற பெயர் திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது. அந்த மாநாட்டில் தான் முதன்முதலாக அரசியல்மணி என்கிற பெயரில் மேடையேற்றி பேசவைக்கப்பட்டார். அதன்பின் இறக்கும் வரை பெரியாரின் கருத்துக்களை முழக்கமிட்டார். இவரின் பேச்சு திறமையை கேட்டவர் குடியரசு இதழில் வெளிவந்த இராமாயணத்தையும் – மகாபாரதத்தையும் ஒப்பிட்டு இரண்டும் ஒன்றை என்கிற தலைப்பில் கட்டுரை எழுதினார். இது அவரின் எழுத்தாற்றலை வெளிக்கொணர்ந்தது.
 

பெரியாருக்கும் – அவரது அண்ணன் மகன் சம்பத் மீது அதிருப்தி உருவானது. இதனால் தன்னை கவனித்துக்கொள்ள இயக்கத்தின் சொத்துக்களை பராமரிக்க ஒரு துணை வேண்டும் என முடிவு செய்தார். அரசியல் எதிரியும், குடும்ப நண்பருமான காங்கிரஸ் கட்சியில் இருந்த ராஜாகோபாலாச்சாரியருடன் ரகசியமாக சந்தித்து பேசி, அவர் கருத்துப்படி 1949 ஏப்ரல் 9ந்தேதி பெரியார் – மணியம்மை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு பின் அரசியல்மணி என்கிற பெயரை ஈ.வெ.ரா.மணியம்மை என பெயர் மாற்றி சட்டப்படி அறிவிக்க வைத்தார் பெரியார்.
 

இந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில் முன்னணி தலைவராக நின்று களமாடி சிறைச்சென்றார் மணியம்மை. மேலும் பெரியாரைப்போல் அரசாங்கத்திடம் அடிமைப்பட்டு கிடக்க விரும்பாதவர் மணியம்மை. இளந்தமிழா புறப்படு போருக்கு என்கிற தமிழில் குடியரசு இதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. இது இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் விதத்தில் உள்ளது என அரசாங்கம் வழக்கு தொடுத்தது. பதிப்பாசிரியர் என்கிற முறையில் ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டது. அதை கட்ட மறுத்து 15 நாள் சிறை தண்டனை அனுபவித்தார்.
 

1954 ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதோடு, விடுதலை இதழின் பதிப்பாசிரியர், வெளியிட்டாளராக்கினார். திருச்சியில் பள்ளி, கல்லூரி தொடங்கிய பெரியார், ஆதரவற்ற குழந்தைகளுக்காக காப்பகத்தையும், பெண்கள் விடுதியையும் ஏற்படுத்தி அதன் நிர்வாகத்தை மணியம்மையிடம் ஒப்படைத்தார்.
 

1973ல் தந்தை பெரியார் மறைந்தார். 1974 ஜனவரி 6ந்தேதி மணியம்மை திராவிடர் கழகத்தின் தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரியார் மறைவுக்கு பின் திராவிடர் கழகத்தை வழிநடத்தும் பொறுப்பு மணியம்மையார்க்கு வந்தது. தான் மறையும் வரை பெரியார் போட்டு தந்த பாதையில் வழித்தடம் மாறாமல் நடந்தார் மணியம்மை. அதற்கு சான்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என பெரும் போராட்டம் நடத்தினார்.
 

இந்திய குடியரசுத்தலைவர் பக்ரூதின்அலியும், அவரை பொம்மை போல் ஆட்டிவைத்த இந்திய பிரதமர் இந்திராகாந்தி, பெரும் பதவியில் இருந்துக்கொண்டு முதன் முதலாக டெல்லியில் நடந்த ராமலீலா என்ற நிகழ்ச்சிக்கு செல்ல முடிவு செய்தனர். செல்லக்கூடாது என மணியம்மை வேண்டுக்கோள் விடுத்தார். அதை மீறி இருவரும் சென்றனர். பெரியார் திடலில், இராவண லீலை என்கிற விழாவை நடத்தி ராமன், சீதை உருவத்தை எரித்ததோடு, தமிழகம் வந்த மத்தியமைச்சர், இந்திராகாந்தி போன்றோர்க்கு கறுப்புக்கொடி காட்டி தொண்டர்களோடு கைதாகினார்.
 

இந்த கோபாத்தை இந்திராகாந்தி 1976ல் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவித்தபோது, மணியம்மையாரை பிடித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது இந்திராகாந்தி அரசு. சிறையில் இருந்து வெளியே வந்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் 1978 மார்ச் 16ந்தேதி மணியம்மையார் இயற்கை எய்தினார்.

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் நடத்தை விதி; மூடப்பட்ட பெரியார் சிலை அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் திறப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 closed Periyar statue will reopen in the next half hour

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அனைத்து கட்சிகளுமே அதனதன் கூட்டணிகளை உறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதிலும் மிக தீவிரம் காட்டி வந்தனர். அதன்படி, தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளையும், தொகுதிப் பங்கீடுகளையும் உறுதி செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கூட்டணியை உறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதன் பின்னர், முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே தேர்தல் தொடர்பான பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், வளைவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் சிலைகளில் பெரியார் சிலைகள் அடங்காது. இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

அதன் பின்னர், பெரியார் சிலைகள் தமிழகத்தில் மூடப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலைக் காரணம் காட்டி, திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலையை போலீசார் மூடியுள்ளனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பெரியார் அமைப்பினர், நீதிமன்றமே பெரியார் சிலைகளை மூடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, நீங்கள் எப்படி மூடலாம் எனக் கொந்தளித்துள்ளனர். உடனே இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, தலைமைக் கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை உள்ளிட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் முயற்சியில் உடனடியாக மூடப்பட்ட பெரியார் சிலை உடனடியாகத் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி எனக் கூறி திண்டுக்கல்லில் மூடப்பட்ட பெரியார் சிலை, மூடிய அரை மணி நேரத்திலேயே மறுபடியும் திறக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.