Skip to main content

பெரியார் பல்கலை: கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே முணுமுணுப்பு ஆரம்பம்!

Published on 04/07/2018 | Edited on 04/07/2018

பெரியார் பல்கலையில் கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே மூத்த பேராசிரியர்கள் சிலர் துறைத்தலைவர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியதால் துணை வேந்தர் கடும் அதிருப்தி அடைந்தார்.

 

 

 


சேலம் பெரியார் பல்கலையில் 2018 & 19ம் கல்வி ஆண்டின் முதல் நாள் வகுப்புகள் ஜூலை 2ம் தேதி தொடங்கின. இதையொட்டி, அன்றைய தினம் பல்கலையில் பணியாற்றும் அனைத்து உதவி, இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட கூட்டம், துணை வேந்தர் கொழந்தைவேல் தலைமையில் நடந்தது. செனட் அரங்கத்தில் நடந்த இந்தக் கூட்டம், பகல் 12 மணிக்கு தொடங்கி 1.45 மணியளவில் நிறைவு பெற்றது. கூட்ட நிகழ்வுகள் வெளியே 'லைவ்' ஆக தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரின் செல்போன்களும் கூட்டம் முடியும் வரை செயல்படாத வகையில் ஜாமர் கருவி மூலம் முடக்கப்பட்டது. ஆராய்ச்சி தொடர்பாக வெளிநாடு செல்லும் பேராசிரியர்களுக்கு 50 சதவீதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று துணை வேந்தர் கொழந்தைவேல் எடுத்த எடுப்பிலேயே இனிப்பான செய்தியைச் சொன்னார். அடுத்து பி.ஹெச்டி., ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்கலை சார்பில் மாதந்தோறும் 5000 ரூபாய் உதவித்தொகை (யூஆர்எஃப்) வழங்கப்படும் என்றும் துணைவேந்தர் கொழந்தைவேல் கூறினார். யூஆர்எஃப் உதவித்தொகையை பெரும்பாலான ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளாதது குறித்தும் அவர் கோடிட்டுக் காட்டத்தவறவில்லை. ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சி மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வகையில் மேலும் ஓர் இடம் உயர்த்திக் கொள்ளவும் இசைவு தெரிவித்துள்ளார். 

 

 

 

இப்படி சுமூகமாக கூட்டம் நடந்து கொண்டிருந்தாலும், சில பேராசிரியர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தினர். புவியமைப்பியல் (ஜியாலஜி) துறை பேராசிரியர் வெங்கடாசலபதி, துறைத்தலைவர் பதவியிடங்களை சுழற்சி முறையில் ஒதுக்க வேண்டும் என்று தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார். மேலும் அவர், சில பேராசிரியர்கள் நடத்தும் செமினார்களுக்கு மட்டும் பல்கலைக்கழகம் நிதியுதவி வழங்குகிறது. செமினார் நடத்தும் அனைத்து பேராசிரியர்களுக்கும் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உடனடியாக தமிழ்த்துறை மூத்த பேராசிரியரான தமிழ்மாறன், எல்லாமே இங்கு விதிகளின்படி செயல்படுவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். துறைத்தலைவர் பதவி நியமனத்திலும் விதிகளை அமல்படுத்தினால் நல்லது என்று அவரும் துணைவேந்தரிடம் தன் விருப்பத்தை முன்வைத்தார். ஒரே நேரத்தில் இரு மூத்த பேராசிரியர்களிடம் இருந்து எழுந்த இக்கோரிக்கையால் துணை வேந்தர் பதிலேதும் பேசாமல் சிறிது நேரம் மவுனம் காத்ததாகச் சொல்கின்றனர் கூட்ட விவரங்களை அறிந்த மூத்த பேராசிரியர்கள்.
 

Periyar University: Murugunu started on the first day of the school year!


 

துறைத்தலைவர் பதவி நியமனத்தில் பின்பற்றப்படும் விதிகள் குறித்து மூத்த பேராசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசினர்,


''பேராசிரியர் பெரியசாமி, தமிழ்த்துறை தலைவராக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பதவியில் இருந்து வருகிறார். பல்கலை சாசன விதிகளின்படி, துறைத்தலைவர் பதவி என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இத்தனைக்கும் துறைத்தலைவர் பதவி என்பது ஒரு கவுரவ பதவி மட்டுமே. அதனால் பண ஆதாயங்கள் ஏதுமில்லை. பேராசிரியர் தமிழ்மாறன், இன்னும் இரண்டு ஆண்டுகளில் பணி நிறைவு பெற உள்ளார். சுழற்சி முறையில் அவருக்கு துறைத்தலைவர் பதவி கிடைத்தால் அந்த அந்தஸ்திலேயே ஓய்வு பெறலாம் என்றுகூட அவர் கருதக்கூடும்,'' என்றவர்கள், பேராசிரியர் பெரியசாமியின் சில பராக்கிரமங்களையும் பட்டியலிட்டனர்.


 

Periyar University: Murugunu started on the first day of the school year!


 

''இப்போது தமிழ்த்துறை தலைவராக உள்ள பேராசிரியர் பெரியசாமி 2004ல் பெரியார் பல்கலையில் பணியில் சேர்ந்தார். பெரியசாமி 10.3.2000ல் தான் பி.ஹெச்டி., ஆய்வுப்படிப்பை நிறைவு செய்துள்ளார். முழு நேர பி.ஹெச்டி., மாணவராக நிறைவு செய்துள்ளதாக அனுபவ சான்றிதழில் தெரிவித்துள்ளார். ஆனால் அதே காலக்கட்டத்தில், அதாவது 1998 முதல் 30.6.2000 வரை மருதமலை முருகன் கோயிலில் ஓதுவாராக மாதம் 1500 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றியதாகவும் சான்றிதழில் குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 3.7.1999 முதல் 17.6.2000 வரை தமிழ் விரிவுரையாளராக பணியாற்றியதாகவும் அதன்பிறக கோபியில் உள்ள கோபி அரசு கலைக்கல்லூரியில் 19.6.2000 முதல் 22.11.2004 வரை விரிவுரையாளராக பணியாற்றிதாகவும் பணி அனுபவ சான்றிதழில் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

ஒரே ஆள், எப்படி ஒரே காலத்தில் கோயிலில் ஓதுவாராகவும், கல்லூரிகளில் ஆசிரியராகவும், முழுநேர பி.ஹெச்டி., மாணவராகவும் மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் செயலாற்ற முடியும்? ஆனால், இந்த முன் அனுபவ சான்றிதழை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டுதான் அப்போது பெரியார் பல்கலை இவரை உதவி பேராசிரியராக பணியில் நியமித்து இருக்கிறது. அப்பட்டமாக விதிகளை மீறி ஒருவர் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார் என்றால் பணமும், அரசியல் செல்வாக்கும்தானே காரணமாக இருக்க முடியும்?. அவர் வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் ஆளும் கட்சியினரின் செல்வாக்கோடு தொடர்ந்து பல ஆண்டுகளாக துறைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்,'' என்கிறார்கள் மூத்த பேராசிரியர்கள். 
 


இன்னும் சில பேராசிரியர்கள் துறைத்தலைவர் பதவியில் நிலவும் முரண்பாடுகள் குறித்தும் பேசினர். 


''பேராசிரியர் தங்கவேல் கணிதத்தில் பி.ஹெச்டி., முடித்திருக்கிறார். ஆனாலும், முதுநிலையில் கணினி பாடம் படித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்தால் அவரை நீண்ட காலமாக கணினி அறிவியல் துறைக்குத் தலைவராக நியமித்துள்ளனர். கணினி துறையில் அனுபவம் பெற்ற பேராசிரியர் சந்திரசேகர் போன்றோரெல்லாம் துறைத்தலைவராகக்கூட ஆகாமலேயே ஓய்வு பெற்றாலும் ஆச்சர்யமில்லை,'' என்றும் கிண்டலாக கூறுகின்றனர்.


 

Periyar University: Murugunu started on the first day of the school year!


பல்கலையில் நீக்கமற நிறைந்திருக்கும் பணி நியமன முறைகேடுகள், முக்கிய கோப்புகள் மாயமானது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து துணைவேந்தர் கொழந்தைவேலிடம் முன்பு ஒருமுறை கேட்டபோது, '' 

சார்... நீங்கள் நக்கீரன் நிருபன் என்கிறீர்கள். நான் உங்களை பார்த்ததே இல்லையே...'' என்றவர் பின்னர் அவரே பேசத் தொடங்கினார். 

 

 


அப்போது அவர், ''நீங்கள் சொல்லும் புகாரெல்லாம் நான் இங்கு துணைவேந்தர் பணியில் சேர்வதற்கு முன்பே நடந்தது. நான் பல்கலையின் வளர்ச்சிக்காக சில நல்லவர்களுடன் இணைந்து செயல்படுகிறேன். என் பணிக்காலத்தில் தவறுகள் நடந்தால் மட்டுமே நான் பொறுப்பாக முடியும்,'' என்றார்.


பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட கலையரங்கத்தில் பழுது ஏற்பட்டவுடன் பல கோடி ரூபாய் செலவு செய்து புதுப்பிக்கத் தெரிந்த இன்றைய துணை வேந்தருக்கு, பல்கலை நிர்வாகத்தில் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கும் முறைகேடுகளை களையாமல், 'முன்னாள்களை' நோக்கி விரல் நீட்டுவது சரியாகுமா?
 

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.