Skip to main content

பெப்சிக்கு 5500 கோடி நஷ்டம்???

Published on 14/05/2018 | Edited on 14/05/2018

 

இன்று உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும். பெப்சி நிறுவனம் மிகப்பெரிய நஷ்ட்டத்தை சந்தித்தது. ஒரு சிறிய தவறுகூட மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்திவிடும் என்பதற்கு பெப்சி நிறுவனமே மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் அமைந்தது. ஆனால் இதெல்லாம் நடந்தது தற்போது இல்லை, 1992ம் ஆண்டு. பெப்சி தனது விளம்பரத்திற்காக ஒரு அறிவிப்பை வெளியிட்ட போதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.
 

pepsi

 

பாட்டிலின் மூடியில் பல எண்கள் இருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட எண்ணை நிறுவனம் கூறும் அந்த எண்ணுள்ள மூடியை கொண்டுவருபவருக்கு குறிப்பிட்ட அளவு பரிசு என அறிவித்திருந்தது. அதன்படியே 349 என்ற எண்ணிற்கு 40,000 டாலர்களை பரிசாக அறிவித்தது நிர்வாகம். ஆனால் வந்தது ஒருவர் அல்ல. இலட்சக்கணக்கான நபர்கள். ஆம் இலட்சக்கணக்கான மக்கள்தான் பரிசுக்காக வந்தது. பெப்சி நிறுவனத்திற்கு மூடி தயாரித்த நிறுவனம் 349 என்ற எண்ணில் ஒரு மூடியை மட்டும் தயாரிக்காமல், எட்டு இலட்சம் மூடிகளை தயாரித்திருந்தது. பெப்சி நிறுவனமும் அதை கவனிக்காமல் விற்பனைக்கு அனுப்பிவிட்டு, அதே எண்ணை பரிசு எண்ணாகவும் அறிவித்திருந்தது. இதனால்தான் இலட்சக்கணக்கான மக்கள் கூட்டம் பரிசுக்காக வந்து நின்றது. பின்பு தவறு நடந்திருக்கிறது என்று நிறுவனம் பரிசு தொகையை வழங்க மறுத்தது. கோபமடைந்த வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின்மீது 680 குற்ற வழக்குகளையும், 5200 மோசடி வழக்குகளையும் பதிவு செய்தனர். அனைவருக்கும் 40,000 டாலர்கள் கொடுத்தால் 5,500 கோடி டாலர் நஷ்டம் ஏற்படும் என வாதாடியது பெப்சி. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒவ்வொரு மூடிக்கும் 2000 டாலர்கள் வழங்கவேண்டுமென உத்தரவிட்டது. இதனால் பெப்சி நிறுவனம் அப்போதே இந்திய மதிப்பில் ரூ.60 கோடிக்கும்மேல் நஷ்டத்தை அடைந்தது.

 

 

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .