Skip to main content

எப்போது இந்த கரோனா பதற்றம் முடியும்? இன்னும் எவ்வளவு காலம் இப்படியே இருக்கும்... பதற்றத்தில் மக்கள்!

Published on 04/05/2020 | Edited on 04/05/2020

 

issues



மே17 ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு. அந்த அறிவிப்பை எதிர்பார்த்தது போலவே இருக்கிறார்கள் மக்கள். எப்போது இந்த கரோனா பதற்றம் முடியும்? இன்னும் எவ்வளவு காலம் இப்படியே இருக்கும் என்பதுதான் மக்களின் ஒரே கேள்வி.


சுற்றுலா தொழில் சார்ந்த தங்கும் விடுதிகள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவை அக்டோபர் வரை மூடப்பட்டிருக்கும் என இந்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால் மற்ற தொழில்கள்? மக்களின் வாழ்வாதாரம்? இன்னும் எத்தனை காலம் என பிரபல பில்ரோத் மருத்துவமனையின் ஐ.சி.யூ. மருத்துவரும் மயக்கவியல் நிபுணருமான டாக்டர் நெடுமாறனிடம் கேட்டோம்.

"இந்தியாவில் ஜனவரி- 30ந்தேதி முதல் கரோனா பாசிட்டிவ் வந்தபிறகும் கூட ஊரடங்கு உத்தரவு அறிவித்தது மார்ச்- 23ந் தேதிதான். அதாவது, கிட்டத்தட்ட 52 நாட்களை வீணாக்கிவிட்டது. முன்கூட்டியே விமான போக்குவரத்தை நிறுத்துவது, ஊரடங்கு அறிவித்தால் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரி செய்ய என்ன செய்வது என்ற குழு அமைப்பது, பி.பி.இ. கிட் உட்பட கரோனா பாதுகாப்பு உபகரணங்களை தயார் செய்வது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் ஆகிவிட்டது.

  doctor



திடீர் திடீர் ஊரடங்கு- முழு ஊரடங்கு அறிவிப்பால், மக்கள் பதற்றமாக வெளியே வந்த தால் சமூகப் பரவல் அதிகமாக ஆரம்பிவித்து விட்டது. இதைத் தடுக்க ஆரம்பத்திலிருந்தே அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என்று சொல்லியிருக்கலாம். அப்போதே, மாஸ்க் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தால் ஊரடங்கு அறிவித்தபோது மாஸ்க் விலையும் ஏறியிருக்காது. தட்டுப்பாடும் ஆகியிருக்காது.

கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுகிறவர்களைவிட அறிகுறிகளே இல்லாத 80 சதவீத ‘ஏ சிம்ட மேட்டிக் கேரியர்’ மூலம்தான் அதிகமாக கரோனா பரவிக்கொண்டிருக்கிறது. அறிகுறிகள் தெரிந்தாலாவது டாக்டரை பார்ப்பார்கள், பரிசோதிப்பார்கள், குவாரண்டைனில் இருப்பார்கள். ஆனால், அறிகுறிகளே இல்லாத கரோனா தொற்றாளர்கள் ஸ்லீப்பர் செல்கள் போல நமக்குள்ளேயே உலாவி கரோனாவை பரப்பிக்கொண்டிருப்பார்கள். அந்த பரவலை தள்ளிவைக்கத்தான் இந்த ஊரடங்கு உத்தரவு.


ஒருவேளை ஊரடங்கை தளர்த்தி முழுமையாக திறந்து விட்டால் 15 வது நாள் அமெரிக்கா, இங்கிலாந்துபோல கரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்துவிடும்.

உலக அளவில் கரோனா பாதிப்பை பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என மூன்று மண்டலமாக பிரிக்கிறார்கள். இரண்டுவாரத்தில் 15க்கும் மேற்பட்ட பாசிட்டிவ் கேஸ்கள் வந்தால் அவை ரெட். அதற்குக்கீழ் இருந்தால் ஆரஞ்சு. கேஸ் இல்லை என்றால் கிரீன்.

ரெட்  கேஸ்கள் இரண்டுவாரத்தில் 15 கரோனா பாசிட்டிவ் கேஸ்களுக்குக்கீழ் வந்தால்தான் ஆரஞ்சு கேஸாக மாற்றப்படும். ஆரஞ்சுலிருந்து இரண்டு வாரங்களுக்கு கேஸ் இல்லை என்றால்தான் கிரீன் கேஸ்க்கு கொண்டுவரப்படும்.

ரெட்  இருக்கும் சென்னையில் ஒருநாளைக்கே 120 கரோனா பாசிட்டிவ் வருகின்றன. ஜீரோ பாசிட்டிவ் என்றால்தான் ரெட் கேஸ்களிலிருந்து சென்னை கிரீன்க்கு வரும். அப்படி, வரும்போதுதான் ஊரங்கு உத்தரவிலிருந்து ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2, ஸ்டேஜ்-3, ஸ்டேஜ்-4 என கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப்படும். அதுவரை, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் வீட்டிற்குள் இருந்து சமூகப் பரவலை உண்டாக்காமல் அனைவரும் அரசு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். அப்போது தான், இலக்கை எட்டமுடியும்'' என்கிறார் டாக்டர் நெடுமாறன்.


 

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.