Skip to main content

பாஜக போடும் மெகா ப்ளான்...தாங்கி கொள்ள மக்களுக்கு சக்தி வேண்டும்...அதிர்ச்சி ரிப்போர்ட்! 

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் ஜனநாயகத்தின் மீது ஒரு அதிரடி தாக்குதலை நடத்த மோடி-அமித்ஷா கூட்டணி திட்டமிட்டு காய்களை நகர்த்துவதாக டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் பதட்டத்தை ஏற்படுத்துகின்றன. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்த நடவடிக்கையில் தொடங்கி இந்தியாவை ஒற்றுமைப்படுத்த இந்திதான் ஒரே மொழி என்கிற அமித்ஷாவின் குரலைத் தொடர்ந்து அடுத்த தாக்குதலை நடத்துவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது பா.ஜ.க. அரசு.

 

bjp



தேசத்தை முழுமையாக இந்துத்துவாமயமாக மாற்றும் பல திட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரால் ரகசியமாக கட்டமைக்கப்பட்டு வரும் சூழலில், பா.ஜ.க. அரசியலை எதிர்க்கும் அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள், சிறுபான்மையின மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகள் என அனைவரையும் ஒடுக்கும் வகையில் பல சட்டங்களை அடுத்தடுத்து நிறைவேற்றும் திட்டத்தில் இருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.

 

bjp



இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள், "நாடாளுமன்றத் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை தந்தது மோடி அரசு. அதில் மிக முக்கியமானது காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களை உருவாக்குவோம் என்பதுதான். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை அண்மையில் திடீரென நீக்கினார் அமித்ஷா.
 

congress



காஷ்மீரத்தில் மையம் கொண்டிருக்கும் பயங்கரவாத சூழ்நிலையையும், தீவிரவாத குழுக்களுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் ஆதரவான நிலைப்பாட்டில் காஷ்மீர் அரசு இயங்கி வந்ததையும் சுட்டிக்காட்டி சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கான காரணமாக இதனை விவரித்தனர். அமித்ஷாவின் இந்த அதிரடிகள் பல அதிர்வுகளை ஏற்படுத்தின. பா.ஜ.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளைத் தவிர, மற்ற கட்சிகள் அனைத்தும் அமித்ஷாவின் அந்த பாய்ச்சலை எதிர்த்தன; கண்டித்தன. தேசமெங்கும் பா.ஜ.க.வுக்கு எதிரான கண்டனங்கள் எதிரொலித்த நிலையில் சர்வதேச நாடுகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அந்த சட்டத் திருத்தம்.

 

dmk



பாகிஸ்தானும் இதனை கண்டித்ததுடன், இந்தியாவிலுள்ள முக்கிய கட்சிகளான காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 17 கட்சிகள் மோடி அரசை கண்டித்து போராடுவதாக சர்வதேச அரசியலுக்கு கொண்டுபோனது. பாகிஸ்தான் ஊடகங்களும் இதனை ஊதி பெரிதாக்கிய நிலையில், சர்வதேச நாடுகளின் துணையுடன் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க காய்களை நகர்த்தியது பாகிஸ்தான். அதனை சாதுர்யமாக கையாண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவு கிடைக்காமல் பார்த்துக் கொண்டது மோடி அரசு.


காஷ்மீர் விவகாரத்தில் எழுந்த எதிர்ப்புக்குரலை அடக்கிவிட்டாலும் அதில் முழு திருப்தி மோடி அரசுக்கு கிடைக்கவில்லை. இனி அடுத்தடுத்து பா.ஜ.க. கொண்டு வர திட்டமிட்டிருக்கும் திட்டங்களையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்க்கின்ற நிலை அழுத்தமாக உருவாகும். அப்படிப்பட்ட நிலை உருவானால் சர்வதேச நாடுகளின் கண்டனங்களுக்கு ஆளாகலாம் என யோசித்துள்ளனர் பா.ஜ.க. தலைவர்கள்.

குறிப்பாக, காஷ்மீரத்தில் ராணுவத்தை நீண்ட நாட்களுக்கு நிலை நிறுத்த முடியாது. ஒரு கட்டத்தில் ராணுவத்தை முற்றிலும் விலக்கிக் கொண்டாக வேண்டும். அப்படி விலக்கிக்கொள்ளப்படும் போது, மோடி அரசுக்கு எதிராகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை அரசியல்கட்சிகள் நடத்தும். மோடி அரசை எதிர்க்கும் மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து மோடி, அமித்ஷாவுக்கு எதிராக குரல் எழுப்புவார்கள். காஷ்மீர் பிரச்சனைகளுக்காக மட்டுமல்லாமல் இந்துத்துவா கொள்கைகளை நிலைநிறுத்த கொண்டு வரும் மற்ற சட்டங்களையும் எதிர்ப்பார்கள்.

அதனால், இதனை ஒடுக்குவதற்காக இந்திய இறையாண்மைக்கு எதிராக பிரிவினைவாதம் பேசுதல், மேடையில் முழங்குதல், தேசத்தின் பாதுகாப்பு விவகாரங்களை கேள்வி எழுப்புதல், இந்தியாவின் நிலம் சார்ந்த எல்லை விவகாரங்களில் எதிர்மறை விமர்சனங்களை முன்னிறுத்துதல் என இனி யார் பேசினாலும் அவர்கள் கைது செய்யப்படுவதுடன் தேர்தலில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் போட்டியிடாத வகையில் புதிய சட்டத்தை கொண்டு வருவது என யோசித்திருக்கிறார்கள்.

தவிர, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பேசினால் அவர்களது பதவி பறிக்கப்படுவதுடன் அவர்களும் அடுத்த 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சட்டம் கொண்டுவரவும் அவர்களின் ஓட்டு உரிமையை ரத்து செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதைத்தவிர, சிறுபான்மையினருக்கு எதிராக மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவும் விவாதிக்கப்படுகிறது. இத்தகைய அதிரடி தாக்குதல்கள் அடுத்தடுத்த நாடாளுமன்ற கூட்டங்களில் நிறைவேற்றப்படலாம். இதனையெல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தி மக்களுக்கு வேண்டும்'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.
 

Next Story

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்” - காங்கிரஸ் முதல்வர் எச்சரிக்கை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Telangana Chief Minister warns This is what will happen if BJP comes to power

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது.

அதே வேளையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நேற்று (25-04-24) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வகையில் 400 இடங்களைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. இது ரிசர்வேஷன் முறையை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்ற உதவும். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரிசர்வேஷனை தான் ஒழிக்கும். ஆர்.எஸ்.எஸ் அதன் தலைவர்கள் பலமுறை குறிப்பிட்டது போல், 2025க்குள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அனைத்து இட ஒதுக்கீடுகளையும் ரத்து செய்வது பாஜகவின் சதி. காங்கிரஸின் எண்ணம், மக்கள்தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டைத் தொடருவதும், அதிகரிப்பதுமாகும்.

இது குறித்து பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பாஜகவுக்கு வாக்களிப்பது என்பது உங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறீர்கள் என்று அர்த்தம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இட ஒதுக்கீட்டைத் தொடர்வது மட்டுமின்றி, ஓ.பி.சி.யினரின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கேட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உரிய பங்கைப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்” எனக் கூறினார். 

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.