Skip to main content

அவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைதாகி, 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் திகார் ஜெயிலிலிருந்து விடுதலையான ராஜ்யசபா எம்.பி. ப.சிதம்பரம், மறுநாளே பாராளுமன்றம் சென்றார். மோடி அரசின் பொருளாதார வீழ்ச்சியை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இருநாட்கள் பாராளுமன்றத்திற்கு விடுமுறை என்பதால், கடந்த சனிக்கிழமையன்று சென்னை வந்த ப.சி. விமான நிலையத்தில் மீடியாக்களிடம் பேசிய போது, மோடி அரசின் பொருளாதார வீழ்ச்சியை மீண்டும் விளாசியதோடு, இந்திய மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உஷார்படுத்தினார்.
 

congress



அதற்கடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை தனது சொந்த மாவட்டமான சிவகங்கைக்குப் போகும் திட்டத்துடன், ஞாயிறு காலை 10.40க்கு திருச்சி விமானநிலையம் வந்திறங்கினார்கள் ப.சி.யும் அவரது மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும். சரியாக நண்பகல் 12 மணிக்கு திருமயம் வந்திறங்கிய ப.சி.க்கும் கார்த்திக்கிற்கும் மேளதாளம், அதிர்வேட்டு வரவேற்பு என தூள் கிளப்பினார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள். ப.சி.யின் வருகை குறித்து ஏற்கனவே காங்கிரஸ் நிர்வாகிகள் சொல்லியிருந்ததால், கட்சித் தொண்டர்களும் மக்களும் அதிகளவில் திரண்டிருந்தனர்.

திருமயம் மலைக்கோட்டையில் இருக்கும் கோட்டை பைரவர் கோவிலுக்குச் சென்ற ப.சி.க்கும் அவரது மகனுக்கும் பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்தனர் கோவில் அர்ச்சகர்கள். கண்மூடி மனமுருக பைரவரை வேண்டி நின்ற ப.சி.யிடம் "இந்தாங்கோ விடலைக்(தேங்காய்) காய். அத்தனை பிரச்சனைகளும் தீர இத சுக்குநூறா உடையுங்கோ' என அர்ச்சகர் சொன்னதும், வலது கையை ஆவேசமாக தூக்கி தேங்காயை சுக்கு நூறாக உடைத்தார் ப.சி.

தன்னை வரவேற்க காத்திருந்த அடிமட்டத் தொண்டர்களிடம் நெருங்கிச் சென்று, சிலரது பெயரைச் சொல்லி அன்புடன் பேசிய ப.சி.க்கு கைத்தறித் துண்டுகளும் மாலைகளும் அணி விக்கப்பட்டன. இது குறித்து அங்கிருந்த செந்தில் என்பவரிடம் பேசிய போது, “கைத்தறி நெசவாளர்கள், பூக்கட்டுபவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து எப்போதுமே கைத்தறித்துண்டுகளையும் மலர் மாலைகளையும்தான் வாங்குவார். ஆனால் இப்போது சால்வைகளையும் வாங்கியது எங்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. முன்னெல்லாம் அவரைப் பார்க்கணும்னா பல செக்போஸ்ட்டுகளைத் தாண்டிப் போகணும். ஆனா இனிமே அப்படி இருக்காது'' என்றார் உற்சாகத்துடன்.


திருமயத்தில் திரண்ட மக்களிடமும் தொண்டர்களிடமும் விடை பெற்றுவிட்டு, நேராக காரைக்குடி சென்றார் ப.சி. பழைய பேருந்து நிலையத்தில் பெருந்திரளாக திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், மேளதாளம், ஆடும் குதிரை வரவேற்பு என ஜமாய்த்தனர். அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு, சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார் ப.சி. அங்கே ஏராளமான மீடியாக்கள் குவிந்திருந்தன. மீடியாக்கள் கேள்விகளை ஆரம்பிக்கும் முன்பே பேச ஆரம்பித்தார்.

"இன்று நடப்பது தர்மயுத்தம். ஏழு மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய வெற்றி பெற்ற மோடி அரசு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் இப்போதைய நிலைமையே வேறாக உள்ளது. இந்த அரசு என்ன சொல்கிறதோ அதைத் தான் அனைவரும் செய்ய வேண்டும். அவர்கள் சாப்பிடச் சொல்வதை சாப்பிட வேண்டும், அவர்கள் பேசும் மொழியைப் பேச வேண்டும். இதையெல்லாம் எதிர்த்துக் கேட்டால், சமூக வலைத்தளங்களில் கருத்தைச் சொன்னால் தேசத்துரோகிகள். இப்படிப்பட்ட சர்வாதிகார பாணியில் செல்வதால்தான் நாடு பொருளாதார சீரழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.


இதை எப்படி கண்டிக்காமல் இருக்க முடியும்? மக்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்த்துப் பேசுவேன், போராடுவேன், எழுதுவேன்'' என சரமாரியாக வெடித்தவர், "அதிகாரிகள் வர்க்கம் துணிவோடு தங்களது கருத்தை ஆள்வோருக்குச் சொல்ல வேண்டும். அப்போதுதான் அரசு நெறிப்படும். இப்போது நாடு தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. வெங்காயம் சாப்பிடுபவர்கள் எல்லாம் உயர்ந்த மனிதர்கள் அல்ல. 1 லட்சம்கோடி ரூபாய் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தப் போகிறார்கள். இன்னும் பத்து நாட்களில் மக்கள் மீது புது வரி பாயப் போகிறது. அதனால் சொல்கிறேன்.

இளைஞர்கள், படித்தவர்கள் மத்தியில் புரட்சி எண்ணம் வரவேண்டும். அந்த எண்ணம் வந்தாலொழிய இந்த மத்திய அரசு மாறாது'' என கோபாவேசத்துடன் தனது பேட்டியை முடித்தார் ப.சி. பின்னர் மானகிரியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுக்கச் சென்றார் ப.சி. இதற்கிடையே திகார் சிறையில் இருந்த 106 நாட்கள் இதுகுறித்து, "அச்சமில்லை அச்சமில்லை' என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளார் ப.சிதம்பரம். அந்த புத்தக வெளியீட்டு விழா, 2020 ஜனவரி 10—ஆம் தேதி சென்னையில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் நடக்க உள்ளது.

 

CAB



 

 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.