Skip to main content

“அரசியல் ஆதாயத்திற்காக கட்சி நடத்துபவர்கள் எல்லாம் தலைவர்கள் அல்ல” - திருமா சீற்றம்!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

ghj

 

சென்னையில் நடைபெற்ற கவிஞர் இளவேனில் நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருமாவளவன், அரசியல் தொடர்பாக பேசினார். அவர் பேசியதாவது, "இந்த நிகழ்ச்சியின் வாயிலாக முதலில் கவிஞர் இளவேனில் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று அவர் நம்மிடம் இல்லை. எனவே அவரின் மரணத்தை மனம் ஏற்கவில்லை. நல்ல உடல்நலத்துடன் அவர் இருந்தார். ஆனால் தற்போது அவர் நம்முடன் இல்லை. இந்திய தேசமே சனாதன பிடியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று அவர் தொடர்ந்து விரும்பினார். தமிழ் மக்கள் மீதும், தமிழ் மீதும் அவ்வளவு ஏக்கத்தோடு இருந்த அவர், தற்போது நம்மிடம் இல்லை. இதை தாங்குவது என்பது சற்று கடினமான ஒன்றுதான். ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவர் இல்லை என்பதை தற்போது வரை மனம் ஏற்கவில்லை. உள்ளபடியே அது ஒரு வெறுமையை தருகிறது; வேதனையை தருகிறது; அளவிட முடியாத வலியை தருகிறது. இப்படிபட்ட இழப்புகளைக் கடந்துதான் நாம் நம்முடைய வாழ்வியலை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய வாழ்க்கையாக இருந்து வருகிறது. அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதுதான் உலக நியதியும் கூட.

 

அண்ணன் இளவேனில் இளம் வயதில் இருந்தே மார்க்ஸியத்தை உள்வாங்கியவர். அதனால் அவர் மானுடத்தை, சமூக அமைப்பை சரியான கண்ணோட்டத்தில் கடைசி வரை பார்த்து வந்தார். எந்த கற்பனை வாதத்துக்குள்ளும் அவர் தன்னை அவர் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. அதனால்தான் அவர் மனிதத்தைப் புரிந்து வைத்திருந்தார், சாதி, மதம் என்ற சாக்கடையில் அவர் கடைசி வரையில் விழாமல் இருந்தார். அதனால்தான் எல்லாவற்றையும் கடந்து மானுடத்தை அவரால் ரசிக்க முடிந்தது. இந்த இந்தியா முழுவதிலும் சூழ்ந்து காணப்படுகின்ற இந்த சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் அவருக்குத் தீராத வேட்கை இருந்தது என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மை. அதை யாராலும் மறுக்க முடியாது, மறைக்கவும் முடியாது. சமூக அறிவியல் பற்றிய புரிதலோடு கூடிய தலைவர்கள் வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். சாதி சங்கம் வைத்திருப்பவர்கள், மத அரசியல் செய்பவர்கள் எல்லாம் தலைவர்கள் அல்ல என்பதை அவர் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்.

 

அரசியல் ஆதாயத்திற்காக கட்சி தொடங்கி நடத்துபவர்கள் எல்லாம் தலைவர்கள் அல்ல என்பதில் நம்மை போன்று அவரும் உறுதியாக இருந்தார். அந்த வகையில் அவர் வியந்து பார்த்த ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அவர் வேறு யாரும் அல்ல, கலைஞர் தான். கலைஞரை அவர் அரசியல் கட்சித் தலைவராக மட்டும் பார்க்கவில்லை, பொதுவாக மனிதர்கள் ஒரு சார்பு கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் கலைஞர் தன்னுடைய இறுதி காலம் வரை அப்படி ஒருசார்பு கொள்கை கொண்டவராக இருந்ததில்லை. மானுடம் என்பதை மட்டும்தான் அவர் கடைசி வரை பார்த்தார். அப்படி கவிஞர் இளவேனில் அவர்கள் இறப்பு வரை மானுடம் என்பதை மட்டுமே பார்த்தார். அதன்படியே தன்னுடைய இறுதிக் காலம் வரை இருந்தார். மானுடைத்தை அவர் வெறுத்ததில்லை. மார்க்ஸியப் பார்வைக்கும் பெரியாரிய பார்வைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. சொல்லும் முறையிலும், பார்க்கும் பார்வையிலும் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவர்களின் நோக்கம் ஒன்றாக இருக்கும். அதைப்போலவே நம்முடைய கவிஞருடைய நோக்கமும் மக்கள் சார்ந்ததாகவே கடைசி வரையிலும் இருந்தது." என்று பேசினார் திருமாவளவன்.

 

Next Story

சீமான் கேட்ட சின்னம் மதிமுகவிற்கு; கிட்டத்தட்ட க்ரீன் சிக்னலில் விசிக

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Seeman asked for the symbol for Mdmk; Almost at the green signal for vck

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கும் இந்த நிலையில், விசிகவிற்கு பானை சின்னம் கொடுக்க வேண்டும் என கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. முன்னதாக மதிமுகவும் பம்பரம் சின்னம் வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தேர்தல் ஆணையம் மறுத்திருந்த நிலையில் தற்போது அண்மை செய்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்ட பானை சின்னம் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக 38 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலின் போதே துரை வைகோ மூன்று சின்னங்களை வலியுறுத்தி இருந்தார். அதில் முதல் சின்னமாக பம்பரம் சின்னத்தையும், இரண்டாவதாக தீப்பெட்டி சின்னம், மூன்றாவதாக கேஸ் சிலிண்டர் சின்னத்தை கேட்டிருந்தார். ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், மாற்று சின்னத்தை பெற மதிமுக முயன்று வருகிறது.

துரை வைகோ மாற்றாக கேட்டிருக்கும் தீப்பெட்டி சின்னத்தையும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கேட்டுள்ளார். மதிமுக அங்கீகாரம் இல்லாத கட்சியாக இருந்தாலும் பதிவுபெற்ற அரசியல் கட்சியாக இருப்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் தீப்பெட்டி சின்னம் கிடைக்கும் என மதிமுக வட்டாரம் எதிர்பார்த்து காத்துள்ளது.

அதேபோல சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருக்கும் விசிக இரண்டு தொகுதியில் போட்டியிடும் நிலையில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனைத் தவிர சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் பானை சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் பானை சின்னம் கேட்டவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் திருமாவளவனுக்கு பானை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் போட்டியிடும் விசிகவின் வேட்பாளர் ரவிக்குமாரை தவிர வேறு யாரும் பானை சின்னம் கேட்காததால் விழுப்புரம் தொகுதிக்கும் பானை சின்னம் கிடைக்க வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

மதிமுகவுக்கு தற்போது கிடைக்கப் போவதாக இருக்கும் தீப்பெட்டி சின்னத்தை இதற்கு முன்பே நாம் தமிழர் கட்சி கேட்டிருந்ததாகவும், கிடைக்காமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

'நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் மன்றம் புறக்கணிக்கும்' - திருமா கருத்து

Published on 12/12/2023 | Edited on 12/12/2023

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.  வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

 

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து என்ற தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்தேன். காஷ்மீருக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் என்பது உறுதி' என தெரிவித்துள்ளார்.