Skip to main content

அ.தி.மு.க. என்கிற கட்சி இருக்கணுமா... வேணாமா... மிரட்டும் அமைச்சர்கள்!

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

அமைச்சர் பதவி யாருக்கு கொடுக்கலாம் என்று ஓபிஎஸ்ஸை வைத்தே விளையாட்டை ஆரம்பித்த எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பி.எஸ்.சை அழைத்து அமைச்சர் பதவி ரேசில் இருந்த மைத்ரேயன், தம்பிதுரை. கே.பி. முனுசாமி ஆகியோரை இ.பி.எஸ். தவிர்த்துவிட்டு வைத்திலிங்கத்தை ஓ.பி.எஸ். மகனுக்கு எதிராக முன்னிறுத்தும் திட்டத்துடன் ஓ.பி.எஸ்.ஸிடம் பேசினார் எடப்பாடி. "நீங்கள் சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தினீர்கள். பிறகு, நானும் உங்களுடன் இணைந்து சசிகலா குடும்பத்தை எதிர்த்தேன். சசிகலா குடும்பத்தால் எம்.எல்.ஏ., எம்.பி.யாக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் பகுதியில் ஏராளமாக இருந்தார்கள். அவர்களை நமக்கு ஆதரவாகப் பாதுகாத்து அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க துணை நின்றவர் வைத்திலிங்கம், ஜெ.வின் நம்பிக்கையை பெற்றவர். அவர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அவருக்கு மத்திய மந்திரி பதவி பெற்றுத்தர விரும்புகிறேன்'' என நேரடியாகவே சொன்னார். 

 

admk



"வைத்திலிங்கம் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர். அவர் தியாகம் செய்தவர்' என ஆதரவு கொடுத்தார், மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி. அதற்கு ஓ.பி.எஸ். மறுத்தார். முரண்டு பிடித்தார். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினார்கள். மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டுமென்றால் ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளர் பதவியையும் துணை முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும். ஓ.பி.எஸ். கட்சியில் இணையும் போதே அவரிடம் இருந்த ஏழு எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். தற்பொழுது அவரிடம் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. அவர் மகனை மத்திய அமைச்சராக்கட்டும். நாங்கள் வைத்திலிங்கத்தை துணை முதல்வராக்குவோம். அவரை நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற வைப்போம். அவரை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக்குவோம்'' என மிரட்டல் தொனியில் பேசினார்கள்.

 

ministers



மோடி அமைச்சரவை பதவியேற்புக்கு முந்தைய நாள் இ.பி.எஸ். வீட்டில் "நான் என் மகனை மத்திய மந்திரியாக்க மாட்டேன்' என எழுதி கொடுத்துவிட்டுப் போனார் ஓ.பி.எஸ். ஆனால் 30-ந்தேதி காலை டெல்லிக்கு போன ப்ளைட்டில் இ.பி.எஸ். மற்றும் மந்திரிகளுடன் பயணமானார் வைத்திலிங்கம். அவர் மந்திரியாக பதவி ஏற்பதை காண தனது குடும்பத்தாரை அழைத்துச் சென்றார். அதே நேரத்தில் ஓ.பி.எஸ்.சின் குடும்பமும் அவர்களுடன் சென்றது.

  ops son



ஓ.பி.எஸ்.சின் மகன் மந்திரியாக அழைக்கப்பட்டிருக்கிறார் என டெல்லிக்குச் சென்றதும் அனைத்து தொலைக்காட்சியிலும் செய்தி வெளியானது. அதனால், இ.பி.எஸ். உடன் சென்ற அமைச்சர்கள் டெல்லியில் கொந்தளிக்க ஆரம்பித்தார்கள். "அ.தி.மு.க. என்கிற கட்சி இருக்கணுமா வேணாமா' என அவர்கள் இ.பி.எஸ்.சை கேட்டார்கள். அவர் பா.ஜ.க. மேலிடத்தை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.  பதவியேற்புக்கு முந்தைய கடைசி மணி நேரத்தில்,  ஓ.பி.எஸ். மகன் பெயரை ரத்து செய்தார் அமித்ஷா. 


இதனால் பா.ஜ.க. அமைச்சரவையில் தமிழ்நாட்டுக்கு இடமில்லை என்ற விமர்சனம் வரும் என்பதால், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளரும் சர்க்காரியா கமிஷனில் கலைஞருக்கு எதிராக செயல்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுப்ர மணியத்தின் மகனுமான ஜெய்சங்கர் பெயர் அமைச்சரவை பட்டியலில் இருந்தது. அவரை, தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்கிடுங்கள்' என இ.பி.எஸ். தரப்பிடம் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆட்சிக்காலங்களில் தமிழகக் கூட்டணிக் கட்சிகள் மத்திய கேபினட்டில் முக்கிய இடம்பெற்றிருந்த நிலையில், இம்முறை இணையமைச்சர் பதவி கூட இல்லை என்கிற அவமானத்துடன் அசிங்கப்பட்டுத் திரும்பினார்கள் டெல்லி சென்ற அ.தி.மு.க. தலைவர்கள்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.