Skip to main content

சோழர் வரலாற்றைப் பேசும் வலங்கைமாலை ஓலைச்சுவடி; ஆய்வாளர் தகவல்

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

palm leaf script talks about cholas history valangaimalai

 

தமிழர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணங்களாகக் கல்வெட்டுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் விளங்குகின்றன. இதில் ஓலைச் சுவடிகள் முதன்மையான ஆவணமாகத் திகழ்கின்றன. முற்காலத்தில் ஓலையில் எழுதி சரிபார்க்கப்பட்ட செய்தியே பின்னர் கல்லிலும் செப்பிலும் வெட்டப்பட்டது. இதன் மூலம் ஓலைச்சுவடிகளின் தொன்மை விளங்கும். தமிழகத்தில் பரவலாக ஓலைச்சுவடிகள் கிடைக்கின்றன. ஆனால் அவை திரட்டப்படாமல் அழிந்து வருகின்றன.

 

இந்நிலையில் நிகழ் காலத்தில் ஓலைச்சுவடிகளைக் கள ஆய்வு செய்து கண்டுபிடித்து, பதிப்பித்து நூலாக்கி வரும் சுவடியியல் அறிஞரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியன் புதிதாகச் சோழர் வரலாற்றுத் தொடர்புடைய ஒரு ஒலைச்சுவடியைக் கண்டுபிடித்துள்ளார். அந்த சுவடி குறித்து அவர் கூறியதாவது, "ஓலைச்சுவடிகள் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றையும், பண்பாட்டு வரலாற்றையும் தாங்கி நிற்கும் முதன்மை ஆவணங்கள் ஆகும். ஓலைச்சுவடிகள் பழந்தமிழர்களின் அறிவு மரபுத் தொகுதிகளாகவும் விளங்குகின்றன. இத்தகைய அறிவு மரபுச் சிறப்புடைய ஓலைச்சுவடிகள் வழியாகத்தான் சங்கத் தமிழரின் பண்பாட்டுமாண்பு உலகிற்குத் தெரிந்தது. பக்தி இலக்கியச் சுவடிகள் வழியாகத்தான் தமிழரின் இறையியல் கோட்பாடு மீட்டெடுக்கப்பட்டன. பழந்தமிழ் ஓலைச்சுவடிகள் வழியாகத்தான் தமிழரின் கணிதவியல், வானியல், சித்த மருத்துவவியல், சோதிடவியல், மந்திரவியல், ஜாலவியல், வரலாற்றியல், இலக்கியவியல் உள்ளிட்ட பல்வேறு அறிவு மரபுகள் நமக்கு கிடைத்துள்ளன.

 

தமிழகத்தில் சுவடி நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்கள், சித்த மருத்துவ மையங்கள், கோயில்கள், மடங்கள், ஜமீன்கள், கவிராயர் வீடுகள், தனிநபர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுவடிகள் உள்ளன. தமிழ்ச் சுவடிகள் இந்தியாவில் பல மாநிலங்களில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் கிடைக்கின்றன. உதாரணமாக கேரளப் பல்கலைக்கழகக் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் 5024 தமிழ்ச்சுவடிகள் உள்ளன. பாரிஸ் தேசிய நூலகத்தில் 1500 தமிழ்ச் சுவடிகள் உள்ளன. தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியிலும் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளை திரட்டித் தொகுத்து நூலாக்கப் படாமல் அழிந்து வருகின்றன. அவற்றை மீட்டு நூலாக்கம் செய்ய தமிழ் அறிஞர்கள் முன்வர வேண்டும். இல்லையெனில் அழிந்து பட்ட கணக்கற்ற நூல்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

 

palm leaf script talks about cholas history valangaimalai

தமிழ்ச் சுவடிகளைப் படிக்க, படியெடுக்க, பதிப்பிக்கத் தெரிந்தவர்கள் சுமார் 10 பேர் மட்டுமே தமிழகத்தில் உள்ளனர். இளைய தலைமுறையினர் சுவடித்துறையில் ஆர்வம் காட்டாமல் விலகி இருக்கின்றனர். இதனால் விரைவில் தமிழ்ச் சுவடிகளைப் படிக்கத் தெரிந்த நபர்கள் இல்லாது போகும் காலம் விரைவில் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. தமிழ்ச் சுவடிகளைத் தேடித் திரட்டிப் பாதுகாக்கும் எண்ணம் கொண்ட நான் சுமார் 20 ஆண்டுகளாகச் தமிழ்ச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்து வருகிறேன். இதுவரை 56 ஓலைச்சுவடிகளைப் பதிப்பித்து நூலாக்கியுள்ளேன். 20 சுவடிகளைத் தொகுத்துப் பதிப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்.

 

நீண்ட காலமாக இராஜராஜ சோழன் வரலாற்றுச் சுவடியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். அதைக் கண்டுபிடித்துப் பதிப்பித்து தமிழ்ச் சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பது என் கனவு. அதுபோல இராவண மருத்துவச் சுவடி, அகத்தியர் - 12,000 சுவடி, போகர் - 12,000 சுவடிகளையும் தேடி வருகிறேன். மதுரை பகுதியிலிருந்து தமிழரின் யானை மருத்துவச் சுவடிகள் 7, எனது மாணவி செ.பரமேஸ்வரி அவர்களின் உதவியுடன் கண்டுபிடித்து படியெடுத்து நூலாக்கி வருகிறேன். ஆனையின் பிறப்பு, ஆனை வகை, ஆனையை போர்க்களத்தில் பயன்படுத்தும் முறை, ஆனையின் வெளி மற்றும் உள் மருத்துவ முறைகள் முதலிய பல அரிய செய்திகள் சுவடிகளில் காணப்படுகின்றன. ஆனை மருத்துவச் சுவடிகளை எழுதியது அகத்தியர் என்ற குறிப்பு சுவடிகளில் காணப்படுகின்றன. மேலும் ஆனை மருத்துவச் சுவடியை வடமொழியில் மொழிபெயர்த்து வழங்கியவர் பாண்டிய மன்னன் அதிவீரராம பாண்டியன் என்ற குறிப்பும் ஒரு சுவடியில் காணப்படுகிறது.

 

palm leaf script talks about cholas history valangaimalai

தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தொகுப்பதையும் நூலாக்கம் செய்வதையும் கடமையாக வைத்துள்ள நான் குமரி மாவட்டப் பகுதியில் கள ஆய்வு செய்தேன். அப்போது கொடுமுட்டி ஊரைச் சேர்ந்த சித்த மருத்துவர் செ.பால் பேக்கர் என்பவரிடம் இருந்து சௌந்தர்ய லகரி உரை, சடாச்சர அந்தாதி, கிருத்தவ இலக்கியம் ஆகியவை அடங்கிய ஒரு ஓலைச்சுவடியைப் பெற்றேன். பின்பு அவரின் உதவியுடன் மாங்கரை சித்த மருத்துவர் மேத்யூ அவர்களிடமிருந்து சோழர்கள் வரலாற்றைப் பேசும் 'வலங்கைமாலை' எனும் சுவடியைப் போட்டோ நகலியாக எடுத்து சேகரித்தேன். இந்நூலை எழுதியவர் மானாடு சுந்தரம் ஆவார். இந்நூல் இயற்றப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு ஆகும். இந்நூல் கரிகால் சோழன், குலோத்துங்க சோழன் பற்றிய வரலாற்றுச் செய்திகளைப் பேசுகின்றது. மேலும் வலங்கைச் சான்றோர் எனும் உய்யக்கொண்டார் நாடார்களின் வரலாற்றையும் விரிவாக கூறுகிறது. சுவடியில் உள்ள வரலாறுகள் நிகழ்ந்த காலம் கி.பி.11 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

 

அதன் பின் சென்னையில் எழுத்தாளர் தி. மைதிலி, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த வி.ஆர்.கே. சிதம்பரம் செட்டியார் என்பவரிடமிருந்த காரைக்குடி வணிகர்களின் வணிகம் தொடர்பான 5 ஓலை ஆவணக்கட்டுகள் பெற்றுத் தந்தார். இந்த ஓலைச்சுவடி ஆவணங்கள் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஓலை ஆவணங்களில் வட்டிக்கு பணம் வழங்கியமை, நிலங்களை அடமான பத்திரமாக எழுதி வாங்கியது உள்ளிட்ட பல செய்திகள் காணப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து வரும் தனிநபர்கள் அரிய சுவடிகளை வைத்திருந்தால் அவற்றைப் பதிப்பித்து நூலாக்கிட தந்து உதவுமாறு வேண்டுகோள்" விடுத்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழில் பேச முயற்சிக்கிறேன்” - வேலூரில் பிரதமர் மோடி பேச்சு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (10.04.2024) வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே, வணக்கம். தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நமது புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்குகிறது. உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன்.

தமிழகத்தின் பூமியான வேலூர் புதிய சரித்திரம் படைக்கப் போகிறது என்பது டெல்லியில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழகத்தில் பாஜக, பாமகவுக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தியா இன்று உலகில் வல்லரசாக வளர்ந்து வருகிறது, இதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளித் துறையில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது. உற்பத்தியில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகத்தின் கடின உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடம், இந்த மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

தமிழகத்தை பழைய சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கும் திமுக, பழைய அரசியலில், ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிவிட்டது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை. திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. அந்த மூன்று முக்கிய அளவுகோல்கள், குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழர் எதிர்ப்பு ஆகும். போதை மருந்து மாஃபியாக்கள் யாருடைய பாதுகாப்பில் உள்ளனர். என்சிபியால் கைது செய்யப்பட்ட போதை மருந்து மாபியா கும்பல் தலைவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்.

திமுக மாநிலம், மதம், சாதியின் பெயரால் மக்களைச் சண்டையிட வைக்கிறது. பிரித்து ஆட்சி செய்யும் அரசியலை மக்கள் புரிந்து கொள்ளும் போது திமுகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பது திமுகவினருக்கு தெரியும். அதனால்தான் வாக்குக்காக மக்களைத் தங்களுக்குள் சண்டையிட வைக்கிறார்கள், திமுகவின் பல தசாப்த கால ஆபத்தான அரசியலை நான் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளேன். ஐக்கிய நாடுகள் சபையில், நமது தமிழ் உலகின் பழமையான மொழி என்பதை உலகம் முழுவதும் அறியும் வகையில் தமிழில் பேச முயற்சிக்கிறேன். காசியின் எம்.பி.யாக, காசி தமிழ்ச் சங்கத்தை மேலும் பெருமைப்படுத்த உங்களை அழைக்க வந்துள்ளேன். இரண்டாவதாக, நான் குஜராத்தில் பிறந்தேன், குஜராத்தைச் சேர்ந்த பல குடும்பங்களும் இங்கு வாழ்கின்றன. குஜராத்தியாக, உங்களை சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கத்திற்கு அழைக்கிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

இன்று நாடு முழுவதும் காங்கிரஸும், திமுகவும் செய்யும் இன்னொரு போலித்தனத்தைப் பற்றி மக்கள் விவாதிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கினர். எந்த அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மௌனம் காக்கிறது. அந்தத் தீவின் அருகே சென்று மீன் பிடிக்கும்போது தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட மீனவர்களைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து விடுவித்து அழைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஐந்து மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான் அவர்களை உயிருடன் மீட்டேன். திமுகவும், காங்கிரசும் மீனவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, தேசத்தின் குற்றவாளிகள்” எனப் பேசினார். 

Next Story

'சீரோடும் சிறப்போடும் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' - தமிழக அரசு அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Second World Tamil Classical Conference with Uniformity and Excellence'-Tamil Government Announcement

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றிருந்த நிலையில், சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் கணித்தமிழும் இணைந்து நற்றமிழாகச் சிறப்புடன் திகழ்கிறது. திமுக பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தனிப்பெரும் நிலையில் தகுதி வாய்ந்த தமிழர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்குவதோடு, தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது, பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்கால தமிழர்களின் எழுத்தறிவு, வாழ்வியல் முறைகளைப் பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்தது.

அதன் தொடர்ச்சியாக 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் நமது பண்பாட்டின் மணிமகுடங்களாகும். வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டைத் தொடர்ந்து இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.