Skip to main content

கடுகிலும் ஓவியம் வரையலாம்... பாராட்டப்படும் சாதனைத் தமிழன்!

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

கடுகு சிறுத்தது தான். ஆனால் அதன் காரம் உள் நாக்கையும் உரைக்க வைத்து விடும். அப்படிப்பட்ட கடுகையும் அதில் வரையப்பட்ட தலைவர்களின் ஓவியங்களையும் கண்டு… இது எப்படி சாத்தியமாகும், என்று ஓவியர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் தலைவர் முதல் உலகத் தலைவர்கள் வரை அதிர்ச்சியில் மிரண்டு போய்ப் பார்க்கிறார்கள். அந்தப் பெருமையை சாதனையாக்கியவர் ஒரு தமிழன் என்பது பெருமிதத்துடன் காலரைத் தூக்கிக் கொள்ள வேண்டிய விஷயம்.

painting in  mustard... Acclaimed Adventure Tamilan


கேரளாவில் கொல்லம் நகரில் நடக்கும் பொருட்காட்சி உலகப் பிரசித்தம். கடந்த வாரம் அது முடிவடையக் கூடிய கடைசி மூன்று நாட்களுக்கு முன்பாக, உணவுக்குப் பயன்படுத்தப்படுகிற கடுகு, ஒவ்வொன்றிலும், கலைஞர், கேரள முதல்வர் பினராய் விஜயன், திருவள்ளுவர், சபரிமலை ஐயப்பன், மகாத்மாகாந்தி ஆகியோர்களின் உருவங்களை வரைந்து காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் பேசவும் வைத்திருக்கிறது.

 

painting in  mustard... Acclaimed Adventure Tamilan


கடுகில் ஓவியமாகத் தீட்டிய அருகில் நின்றிருந்த அந்த ஓவியரையும் பாராட்டத்தவறவில்லை பார்வையாளர்கள். மேலோட்டமாகப் பார்க்கையில் ஏதோ கடுகு வைக்கப்பட்டிருக்கிறது என்று கடந்து சென்றவர்களிடம் அதன் பக்கம் நின்று கொண்டிருந்தவர், கொடுத்த லென்சில் மூலமாகப் பார்வையாளர்கள் பார்த்த பிறகு தான் வரையப்பட்ட ஓவியம் அவர்களைப் பிரம்மிப்படைய வைத்திருக்கிறது.

painting in  mustard... Acclaimed Adventure Tamilan


தகவல் சேனல் நிருபர் ஒருவருக்குத் தெரியவர அவர் செய்தியாக வெளியிட்டது. கேரள முதல்வர் பினராய் விஜயன் வரை போயிருக்கிறது. தனது படைப்பின் பக்கம் நின்றிருந்த தமிழ்நாட்டின் சேலம் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற அந்த ஓவியரை, முதல்வரின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தனது மனைவி சக்திதேவி, மகள் ஹரிசித்தாவுடன் சென்ற ஓவியர் வெங்கடேஷை வரவேற்ற முதல்வர் பினராய் விஜயனிடம், கடுகில்தான் வரைந்திருந்த ஓவியங்களையும், அவரது உருவம் தீட்டப்பட்டதையும் கடுகுகளைக் கொடுத்திருக்கிறார்.

painting in  mustard... Acclaimed Adventure Tamilan


இந்த ஓவியத்தை சாதாரணமாகப் பார்க்க முடியாது என்பதால், அதனைப் பார்க்க உதவுகிற லென்சையும் கொடுத்திருக்கிறார் வெங்கடேஷ் அதன் மூலம் கடுகில் வரையப்பட்ட தனது உருவம், சபரிமலை ஐயப்பன் மகாத்மாகாந்தி உள்ளிட்டவர்களின் ஓவியங்களையும் பார்த்து வியந்திருக்கிறார் பினராய் விஜயன். ஆச்சர்யமான ஒன்று என பாராட்டிய பினராய், ஓவியர் வெங்கடேஷ், அவரது மனைவி குழந்தையையும் கௌரவித்திருக்கிறார். தமிழகம் திரும்பிய கடுகு ஓவியர் வெங்கடேஷைத் தொடர்பு கொண்டு பேசியதில்.

painting in  mustard... Acclaimed Adventure Tamilan


சேலம் பக்கமுள்ள, தம்மம்பட்டிக் கிராமத்தைச் சோந்தவர் வெங்கடேஷ். தந்தை காலமாகிவிட்ட நிலையில், தாய் மற்றும் உடன் பிறந்த சகோதரர் இருவர் செட்டிலாகி விட்டனர். ஓவியத்தில் ஆர்வமிருந்ததால் ஏழு வயதிலிருந்தே ஓவியம் வரையக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அப்போது முட்டை ஒடுகளில் திருவள்ளுவர் உள்ளிட்டவர்களின் ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன். பின்பு ஒரே போஸ்ட் கார்டில் 1330 திருக்குறள்களையும் எழுதி முடித்தேன். இது போன்று சின்னச் சின்னப் பொருட்களில் ஓவியம் வரைவதைத் தொடர்ந்து சீர்திருத்தினேன்

painting in  mustard... Acclaimed Adventure Tamilan


1992ன் போது, ஒரு போஸ்ட் கார்டில் ஹிஸ்டாரிக்கல் தலைவர்கள் பலரது உருவங்களையும் வரைந்து என்னை நானே விரிவாக்கிக் கொண்ட நான், 1997ல் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை அமரவைத்து கடுகில் அவரது உருவத்தை வரைந்தேன். லென்ஸ் மூலம் அதைப் பார்த்து வியந்த கலைஞரய்யா, நாட்டின் முதல்வரைக் கடுகாக்கிய சிறுவன், என்று அவர் என்னைப் பாராட்டியது, முதன் முதலாகக் எனக்குக் கிடைத்த மிகப் பெரியபேறு. மறக்க முடியாத அங்கீகாரம். இதுபோல கடுகில் வரையப்பட்ட ஓவியங்களை லென்ஸ் மற்றும் கைக் கடிகாரங்களைப் பழுது நீக்குபவர்கள் அதைக் கையாள்வதற்காக லென்சுடன் கூடிய குமிழ் ஒன்றைக் கண்ணில் வைத்துப் பார்க்கிற லென்ஸ் மூலம் தெளிவாகப் பார்க்கலாம்.

painting in  mustard... Acclaimed Adventure Tamilan


எனது இந்த கடுகு ஓவியங்களை மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர், கனடா போன்ற நாட்டினரும் வாங்கிச் சென்றுள்ளனர். லண்டனின் உள்ள ஜேம்ஸ் கல்லூரியின் மியூசியத்திலும் எனது ஓவியம் காட்சிக்காகவும் வைக்கப்பட்டிருக்கிறது. 1999ன் போது, எனது இந்த ஓவியத்தைப் பார்த்துப் பாராட்டிய அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து அதிபர் கிளிண்டன் பாராட்டுப் பத்திரமும் அனுப்பியது எனக்குக் கிடைத்த உலக அங்கீகாரமாகவே நினைக்கிறேன். தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் பார்த்து விட்டு, இது எப்படி சாத்தியமாகும் என்று ஆச்சியப்பட்டார். என்கிற அடக்கமான குரலே வெளிப்படுகிறது வெங்கடேஷிடமிருந்து.

painting in  mustard... Acclaimed Adventure Tamilan


தற்போது, மாணவர்கள் பயனடைகிற வகையில் மரபு வழிக்கல்வி பயிற்சி, மற்றும், ஓவியப் பயிற்சிக்காகவும், ப்ரீலான்சர் விரிவரையாளராக ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் சென்று வருகிறார் கடுகு ஓவிய மன்னன். ஜே.வெங்கடேஷ்

அற்புதச் சாதனைகள், எளிதில் வரக்கூடியவைகளல்ல. ஆசீர்வதிக்கப்பட்ட வரமின்றி அவைகள் சாத்தியமுமில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.