Skip to main content

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும் ப.சிதம்பரம் கைதும் – இத்தனை அவசரம் அவசியமா?

Published on 22/08/2019 | Edited on 23/08/2019

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி ஜிஎஸ்டி எனப்படும் நாடு முழுவதும் ஒரே விதிப்புக்கு வகைசெய்யும் அரசியல் சட்டத் திருத்தத்தை மாநிலங்களவை ஏற்றது. இதையடுத்து அந்த வரிவித்திப்பு உறுதியாக அமலுக்கு வரும் நிலை உருவாகியது. ஆனால், அந்த வரிவிதிப்பு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு விமர்சனம் செய்தவர் ப.சிதம்பரம்.

amit chidambaram

 

 

அதைத்தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு இந்தியாவில் அதுவரை புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய், 500 ரூபாய் ஆகியவற்றை செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டிற்குள்ளும் தீவிரவாதிகள் மத்தியிலும் புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் என்றும், தீவிரவாதிகளின் நடவடிக்கை ஒழிக்கப்படும் என்றும் மோடி கூறினார்.

ஆனால், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் மோடி அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாடு முழுவதும் சாமானிய மக்களை மூன்று மாதங்களுக்கு மேலாக கடுமையாக அலைக்கழித்தது. நூற்றுக்கணக்கானோர் பணத்துக்காக ஏடிஎம் வாசலில் காத்திருந்த நிலையில் உயிரிழந்தனர்.

மோடியின் இந்த நடவடிக்கையை முட்டாள்தனமானது என்று முதன்முதலில் ஆதாரங்களுடன் கூறியவர் ப.சிதம்பரம்தான். பணமதிப்பிழப்பு சம்பந்தமாகவும், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் தொடர்ந்து ப.சிதம்பரம் விமர்சனம் செய்து வந்தார்.

ப.சிதம்பரத்தின் இந்த பொருளாதார அறிவு மோடி அரசுக்கு எதிராக, பதில் சொல்ல முடியாத கேள்விகளை தொடர்ந்து எழுப்பிவந்தது. அவருடைய விமர்சனமும் கேள்விகளும் மோடி அரசுக்கு கடுமையான குடைச்சலாக இருந்தன. இந்நிலையில்தான் ப.சிதம்பரத்தை ஏதேனும் வழக்கு வலையில் சிக்க வைத்துவிட்டால் அவரை வாயை மூடச்செய்யலாம் என்று மோடி அரசு திட்டமிட்டது. அதற்கு ஏற்றாற்போல சிக்கியதுதான் ஐஎன்எக்ஸ் மீடியா பணப்பரிமாற்றம்.

இந்த ஐஎன்எக்ஸ் மீடியா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்டார் தொலைக்காட்சியின் முன்னாள் சிஇஓவும் இந்திய தொலைக்காட்சித் துறையில் புகழ் பெற்றிருந்தவருமான பீட்டர் முகர்ஜி என்பவருடன் இணைந்து, மத்திய மனிதவளத்துறை ஆலோசகரும், ஊடகத்துறையில் செயலாக்கருமாக பொறுப்பு வகித்த இந்திராணி முகர்ஜி என்பவர் இந்த மீடியாவை தொடங்கினார்.
 

indira muherji


இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 26 சதவீத பங்குகளை விற்க அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி அணுகியதாகவும், அவர் 4.6 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்க அனுமதி கொடுத்ததாகவும் இந்திராணி கூறியதாக கூறப்படுகிறது.

இந்த பரிமாற்றத்திற்கு பிறகு நடந்த வருமான வரிச் சோதனையில் ஐஎன்எக்ஸ் மீடியா 305 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை ஈர்த்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை சரிக்கட்ட ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தின் கணக்கில் மூன்றரைக் கோடி ரூபாயை செலுத்தியதாக இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரிமாற்றங்களை அடிப்படையாக வைத்தே ப.சிதம்பரம் மீதும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் பாஜக அரசு வழக்குப் பதிவு செய்தது.

அதாவது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக 305 கோடி ரூபாய் நிதி பெற்றதாகவும் இதற்கு கார்த்தி சிதம்பரமும், ப.சிதம்பரமும் உடந்தையாக இருந்ததாகவும் சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

அப்போதிருந்து இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தையும், ப.சிதம்பரத்தை சிபிஐ நெருக்கி வருகிறது. இதற்காக கார்த்தி சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டுகளையெல்லாம் முடக்கியது சிபிஐ. ஆனாலும், இந்த வழக்கு விசாரணைக்காக சிபிஐயும் அமலாக்கத்துறையும் அழைத்தபோதெல்லாம் ஆஜர் ஆகி பதில் அளித்தார் கார்த்தி சிதம்பரம்.

சுமார் ஒரு ஆண்டு விசாரணைக்கு பின்னரும் இந்த வழக்கில் ஆதாரம் சிக்காத நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு உள்நாட்டு கணக்கு வழக்குகளை கவனித்து வந்த பாஸ்கரராமன் என்ற ஆடிட்டரை சிபிஐ கைது செய்தது.

இதையடுத்து தனது மகளைப் பார்க்க உச்சநீதிமன்ற அனுமதியுடன் பிரிட்டன் செல்ல விமானநிலையம் வந்த கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. 23 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.

அதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டது. எனவே, தனக்கு முன்ஜாமீன் கோரியும், தன்னை கைதுசெய்ய தடைகோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்செய்தார். ஆனால், 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி ப.சிதம்பரத்தை கைதுசெய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. முன்ஜாமீன் கோரிய இந்த வழக்கின் விசாரணையில் தீர்ப்பை 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர் ஒத்திவைத்தார்.

தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. பெரும்பான்மை பலத்துடன் தான் விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் நிலையில் மோடி தலைமையில் அரசு அமைந்தது. அதில் அமித் ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் இந்திராணி முகர்ஜி, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியிடம் இந்த வழக்கில் அப்ரூவராக மாறுவதாக 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அதாவது, முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்த 2018 ஜூன் மாதத்திலிருந்து, 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு இடையில் சுமார் ஒரு ஆண்டு முடியும் நிலையில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற ஒப்புதல் அளித்துள்ளார்.

அவர் ஒப்புதல் அளித்தபிறகு, சுமார் 40 நாட்களுக்கு பின்னர், டெல்லி உயர்நீதிமன்றம், ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மூன்று நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி கவுர் கூறினார்.

மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் பெற்றுவிடுவார் என்று நினைத்த பாஜக அரசு அவரை எப்படியும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளை முடுக்கி விட்டது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான உடன் ப.சிதம்பரம் வீட்டுக்கு மட்டும் 4 முறை அதிகாரிகள் படையெடுத்தனர். மிகப்பெரிய பொருளாதார குற்றங்களில் சிக்கிய எத்தனையோ வழக்குகளை நாடு பார்த்திருக்கிறது. அந்தக் குற்றவாளிகள் அனைவரும் அரசு உதவியுடனே வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதாக அவர்களே கூறியும் இருக்கிறார்கள்.
 

chidambaram arrest

 

 

ஆனால், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களிலு ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், நாட்டின் மிக முக்கிய அமைச்சர்களில் ஒருவராக இருந்தவருமான ப.சிதம்பரத்தை கைது செய்வதில் காட்டிய வேகத்தையும், அந்த நடவடிக்கையை மீடியாக்களில் பரப்பி அவர் எங்கோ தலைமறைவாகிவிட்டதைப் போல ஒரு சித்திரத்தை உருவாக்கியதையும் மூத்த அரசியல்வாதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

 

 

 

Next Story

'அபாண்டமாக பொய் பேசுகிறார் மோடி;-ப.சிதம்பரம் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
 'Modi speaks a lot of lies;- P. Chidambaram condemns

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மோடி பேசிய ஒவ்வொரு வாக்கியமும் பொய்க்கு மேல் பொய் நிரம்பியதாக இருந்தது. மக்களின் நகை, சொத்துக்களைப் பறித்து இஸ்லாமியர்களிடம் தந்து விடுவோம் என்று காங்கிரஸ் எப்போது பேசியது என்று பாஜகவினால் கூற முடியுமா? தனிநபரின் சொத்துக்களையும் பெண்களிடம் இருக்கும் தங்கத்தையும் மதிப்பீடு செய்வோம் என எப்போது காங்கிரஸ் அறிவித்தது என பாஜக கூற முடியுமா? பழங்குடி மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி எவ்வளவு என்பதை கணக்கெடுப்போம் எனக் காங்கிரஸ் எப்போது கூறியது? அரசு ஊழியர்களின் நிலமும் பணமும் கைப்பற்றப்பட்டு பிரித்தளிக்கப்படும் எனக் காங்கிரஸ் எப்போது பேசியது? நரேந்திர மோடிக்கு ஏற்கெனவே பதவி வகித்த பிரதமர்களை கொஞ்சமாவது மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தானில் நடந்த பாஜக பொதுக் கூட்டங்களில் மோடி அபாண்டமாக பொய் பேசி உள்ளார். இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியை போல் அடாவடியாக பேசியது இல்லை''எனக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Next Story

“குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்” - ப.சிதம்பரம் திட்டவட்டம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
The Citizenship Amendment Act will be repealed says p Chidambaram

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வேலையின்மை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால் ஆகும். சில பிரிவினர் இந்த பிரச்சனையை குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் இது மிகப்பெரிய பிரச்சனை. எனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய வேலையின்மை விகிதம் இருந்ததில்லை.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது, உழைக்கும் மக்கள் தொகை குறைந்துள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் பட்டதாரிகளிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது. அதாவது வேலையின்மை 42% ஆக உள்ளது. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களின் அவமானகரமான நிகழ்வு இதுவாகும்.

பல்வேறு சட்டங்களின் தொகுப்புகளை நாங்கள் ரத்து செய்வோம், திருத்துவோம் மற்றும் மதிப்பாய்வு செய்வோம். அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிச் சட்டம் 2020,  இந்திய தண்டணைச சட்டத்திற்கு (IPC) இணையான பாரதிய நியாய சன்ஹிதா,  கிரிமினல் தண்டனைச் சட்டம் (CrPC) என்ற பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் ஆதாரச் சட்டமான பாரதிய சாக்ஷ்யா சட்டம்.

இந்த ஐந்து சட்டங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். பின்னர் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். அப்போது 25 சட்டங்கள் திருத்தப்பட்டு அரசியலமைப்புக்கு இணையாக கொண்டு வரப்படும். எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.