Skip to main content

நீங்களே மந்திரியாகுங்கள், என் மகனுக்கு பதவி வேண்டாம் - ஓபிஎஸ் அதிரடி முடிவு! 

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

தமிழகத்திற்கு அடுத்த டி.ஜி.பி.யாக ஜாபர் சேட்டை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறீர்கள். முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அவர் தி.மு.க.வுக்கு நெருக்கமானவர் என ரிப்போர்ட்டுகள் வருகிறது' என எகிறினார். 'அவர் வந்தால்தான் தி.மு.க.வை சமாளித்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற முடியும்' என்று சமாளித்த வேலுமணி, ஜாபர் சேட் தமிழகத்தைச் சேர்ந்தவர். எங்களால் அவரிடம் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். அவர் தான் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைத்தார். முதல்வர் எடப்பாடி அவரை விரும்புகிறார் என்று சொல்லியும் அமித்ஷா சமாதானமாகவில்லை. "சட்டமன்ற இடைத் தேர்தல்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சூலூர் தேர்தல் முடிவுகளிலேயே தெரிந்துவிட்டதே' என்ற அமித்ஷா, "தலைமைச் செயலாளர்- டி.ஜி.பி. இரண்டு பதவிகளிலும் மத்திய அரசு சொல்வதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும்' என எச்சரித்து அனுப்பிவிட்டார்.

 

velumani



அதற்காகத்தான் கவர்னரை எடப்பாடி சந்தித்தார். இந்த சந்திப்பு கவர்னர் செயலாளர் ராஜகோபால் சம்பந்தப்பட்ட டிஸ்கஷனுக்காகத்தான் என்பதால் அவர் தனி அறையில் காக்க வைக்கப்பட்டார். டெல்லி சொல்லியிருந்ததை மனதில் வைத்திருந்த கவர்னரும் தன் பங்குக்கு, "எனது செயலாளராக உள்ள ராஜகோபாலை தலைமைச் செயலாளராக்கினால் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உங்களுக்கு கைகொடுக்கும்' என்றார்.

 

ops



"நான் ஜாபர்சேட்டை டி.ஜி.பி.யாக்க நினைக்கிறேன். பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஒரு உயர் அதிகாரி திரிபாதியை டி.ஜி.பி.யாக்க வேண்டு மென்கிறார். நான் என்னுடன் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றிய ராஜீவ் ரஞ்சனை தலைமைச் செயலாளராக்க நினைக்கிறேன். நீங்களும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் ராஜகோபாலை தலைமைச் செயலாளராக்க வேண்டும் என்கிறீர்கள். நான் என்ன செய்வது' என புலம்பியிருக்கிறார் எடப்பாடி.

 

ops



இதற்கிடையே சண்டைக்காரனாக இருக்கும் பா.ஜ.க. காலில் விழுவதை விட சாட்சிக்காரனாக இருக்கும் ஓ.பி.எஸ். காலில் விழலாம் என ஓ.பி.எஸ்.சை கூப்பிட்டு பேசியிருக்கிறார் எடப்பாடி. அதன்பின் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி ஆகியோர் வைத்திலிங்கத்திடம் பேசியிருக் கிறார்கள். "அமைச்சர் பதவி விவகாரம் முடிந்து போன விவகாரம். அடுத்த மத்திய அமைச்சரவை விரிவாக்கம் ஜூலை மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து ஆகஸ்டு மாதம்தான் நடக்கும். அப்பொழுது பேசிக் கொள்ளலாம். அ.தி.மு.க.விற்கென ஒரு கேபினெட் அந்தஸ்தும் ஒரு ராஜாங்க மந்திரியும் கேட்டோம். கேபினெட் தந்தார்களென்றால் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ராஜாங்க மந்திரி பதவியை எனது மகன் எடுத்துக் கொள்ளட்டும்' என ஓ.பி.எஸ். பேசியிருக்கிறார். உடனே வைத்திலிங்கம் "ஒரு பதவி என பா.ஜ.க. சொன்னால் என்ன செய்வது' என கேட்டிருக்கிறார். "அப்படியென்றால் நீங்கள் மந்திரியாகுங்கள். என் மகனுக்கு பதவி வேண்டாம்' என ஓ.பி.எஸ். சொல்ல குளிர்ந்திருக்கிறார் வைத்திலிங்கம்.

 

ops



கோபத்தில் கொந்தளிக்கும் பா.ஜ.க.வை சமாளிக்க ஜூலை 12-ம் தேதி காலியாகும் மாநிலங்களவை இடத்தில் ஒன்றை பா.ஜ.க.வுக்கு கொடுத்து அதில் அமித்ஷாவின் அன்பைப் பெற்ற கோவை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நிறுத்தி வெற்றி பெற வைக்கலாமா என ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலையில், ஓ.பி.எஸ்., பா.ஜ.க.விடம் மட்டும் தனது ஆதரவை அதிகரித்துக் கொள்ளவில்லை. சசிகலா தரப்பிலும் தனது ஆதரவு நிலையை அதிகரித்துள்ளார். சிறை யில் இருந்து சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக டெல்லித் தொடர்புடன் இருப்பதாக, பரப்பன அக்ரகாரத்திற்கு ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து தகவல் போயிருப்பதாக சசிகலா சொந்தங்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

ஓ.பி.எஸ்., எடப்பாடி, சசிகலா இவர்களுடன் தற்பொழுது பா.ஜ.க. என இன்னும் எத்தனை சோதனைகளோ என அ.தி.மு.க. அடிமட்டத் தொண்டர்கள் நொந்து போயுள்ளனர்.. இதெல்லாம் போதாதென்று அ.தி.மு.க.வில் ஆக்டிவ்வாக இல்லாமல் ஓரங்கட்டப்பட்டிருக்கும் ஒரு குரூப், "அ.தி.மு.க. தலைவராக ரஜினி வர வேண்டும் என்று பேசுங்கள்' என தொலைக்காட்சி பேச்சாளர்களை கிளறிவிட, "யாரும் எதைப்பற்றியும் பேசக்கூடாது' என சேனல் விவாதங்களில் பங்கேற்க மொத்தமாக தடைவிதித்து விட்டது அ.தி.மு.க. தலைமை.
 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.