Skip to main content

எடப்பாடி பேச்சை நம்பாத ஓபிஎஸ்!கோபத்தில் அமைச்சர்கள்!

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

மத்திய அரசில் தனது மகனுக்கு கிடைக்க வேண்டிய மந்திரி பதவியை வைத்தியலிங்கத்தைத் தூண்டிவிட்டு தடுத்துவிட்டதாக எடப்பாடி மீது ஏகத்துக்கும் கோபத்தில் இருந்தார் ஓ.பி.எஸ். இதுகுறித்து எடப்பாடியிடமே தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்திய போது, "தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே வாரணாசியில் அமித்ஷாவை சந்தித்து அமைச்சரவையில் இடம்கேட்டு கோரிக்கை வைத்தீர்கள். ஆனால், பாசிட்டிவ் சிக்னல் கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வந்ததற்குப் பிறகு, "கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு அமைச்சர் பதவி தான்' என உறுதி தந்த பா.ஜ.க. தலைமை, அ.தி.மு.க. வுக்கு அந்த வாய்ப்பையும் கூட தரவில்லை. உங்கள் மகனின் வாய்ப்பை நான் தடுத்துவிட்டேன் என சொல்வது அபாண்டம்'’ என ஓ.பி.எஸ்.சை சமாதானப்படுத்தினார் எடப்பாடி. அவரது பேச்சை ஓ.பி.எஸ். நம்பவில்லை. இருவருக்குமிடையே நீறுபூத்த நெருப்பாக பூசல் கனன்று கொண்டிருக்கிறது'' என்கிறார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.
 

ops



இதற்கிடையே, பல் வலிக் காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய எடப்பாடியை, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் கே.சி. வீரமணி, உதயகுமார் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் அங்கிருந்திருக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது வீரமணியும் உதயகுமாரும் எடப்பாடியிடம் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறார்கள்.


அ.தி.மு.க. மேல்மட்டத்தில் இந்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படும் நிலையில்... இது குறித்து விசாரித்தபோது, ""தன்னை சந்தித்த அமைச்சர்களிடம் இயல்பாக பேசிய எடப்பாடி ஒரு கட்டத்தில், "ஆட்சியையும் கட்சியையும் நான் மட்டுமே காப்பாத்த வேண்டியதிருக்கிறது. தேர்தலில் அமைச்சர்கள் யாருமே ஒழுங்கா வேலை பார்க்கலை. ஒவ்வொரு மாவட்டத்துலயும் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியும்' என வீரமணியையும் உதயகுமாரையும் பார்த்தவாறே கடிந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி.

  udhayakumar



அவரது பேச்சை ரசிக்காத வீரமணி, "தேனி தொகுதியில் கட்சியை ஓ.பி.எஸ். ஜெயிக்கவெச்ச நிலையில் சேலத்துல ஏன் உங்க ளால ஜெயிக்க வைக்க முடியல? ஏகப்பட்ட கோடிகளை கொட்டியும் உங்க சொந்த ஊரிலே யே தி.மு.க. அதிக வாக்கு வாங்கியிருக்கு. ஆனா உங்க அளவுக்கு நாங்களும் செலவு செஞ்சிருந்தா, நாங்க ஜெயிச்சிக் காட்டியிருப்போம்' என எகிற, "எவ்வளவு செலவு செய்யணும்னு லிஸ்ட் கொடுத்தோமே' என எடப்பாடி சொல்ல, "பணம் கொட்டுற இலாகாக் களை நீங்களே வெச்சிருக்கீங்க. இலாகாவை மாத்தி கொடுங்க. கட்சியையும் ஆட்சியையும் நாங்க காப்பாத்துறோம்' என கடுமையாக எகிறியிருக்கிறார் வீரமணி. இடையிடையே உதயகுமாரும் எடப்பாடியிடம் கோபம் காட்டியிருக்கிறார். ஆனால் எடப்பாடியால் எந்த பதிலையும் பேசமுடியவில்லை'' என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள். கட்சியும் ஆட்சியும் கல கலத்துப் போயிருப்பதால் கவலையில் வீழ்ந்திருக்கிறார் எடப்பாடி.
 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.