Skip to main content

கேள்விநேரம் ஸ்வாஹா! கிழித்து தொங்கவிடும் எதிர்க்கட்சிகள்! கிடுகிடு வேகத்தில் பா.ஜ.க.!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020
dddd

 

 

இந்தியாவில் கரோனாவின் பரவலையடுத்து மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், மழைக்காலக் கூட்டத்தொடருக்காக செப்டம்பர் 14-ஆம் தேதி கூடியது. கரோனா முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்பவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு கரோனா தொற்றுள்ள 30 எம்.பி.க்கள் கலந்துகொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 

மாஸ்க் அணிதல், ஒரு இருக்கை விட்டுவிட்டு உறுப்பினர்களை அமரவைத்தல், கண்ணாடித் தடுப்பு என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூட்டத் தொடரில் கடைப்பிடிக்கப்பட்டன. அதேபோல எம்.பி.க்களின் வருகையும் பிரத்யேக ஆப் மூலம் பதிவுசெய்யப்பட்டது. பொருளாதார வீழ்ச்சி, நீட் விவகாரம், கேள்வி நேரம் தவிர்க்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கிடுக்கிப்பிடி போட்டன.

 

நீட் அட்டாக்

தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறையால் 12 மாணவர்கள் இறந்துள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு நீட் தேர்வை ரத்துசெய்யவேண்டும் எனப் பேசினார். திருச்சி சிவாவோ, பொதுக்கல்வி இல்லாத நாட்டில் பொதுத்தேர்வு மட்டும் எப்படி நடத்த முடியும். பணம்கொடுத்து படிப்பவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர் என குற்றம் சாட்டினார்.

 

கேள்விநேரம் ஸ்வாஹா

கேள்விநேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து கேள்வியெழுப்பிய காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர்ரஞ்சன் சௌத்ரி, மக்களின் பிரச்சனைகளை எழுப்புவதற்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்பு கேள்வி நேரம். அதனை ரத்துசெய்வதன் மூலமாக ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க அரசு முயற்சிக்கிறது என்றார். எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பயந்து கேள்வி நேரம் ரத்துசெய்யப்படவில்லையெனவும், கேள்விகளை எழுதி தந்தால் பொருத்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும் என அமைச்சர் பிரகலாத் விளக்கமளித்தார்.

 

எல்லையைக் கோட்டைவிடும் இந்தியா

பல மாதங்களாக இந்திய எல்லைப்பகுதி பத்திரமாக இருக்கிறது எனக் கூறிவந்தது பா.ஜ.க. மாறாக, எல்லையில் சீனா படையைக் குவித்துவருவதாகவும், ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாதெனவும் மக்களவையிலேயே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். 1100 கிலோமீட்டர் ஆக்கிரமிப்பு பற்றி விவாதம் நடத்தவேண்டுமென எதிர்க்கட்சிகள் கூற, பா.ஜ. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில் நீங்கள் பேசலாம் எனக் கூறினார்..

 

செத்துப் போனாங்களா...

கரோனா குறித்த புள்ளி விவரங்களைப் பகிர்ந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இதுவரை கிட்டத்தட்ட 36 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இது நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 77.65 சதவிகிதமாகும். அரசின் ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக 38,000 பேர் உயிரிழப்பது தவிர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் கரோனா சாதனைகளைத் தெரிவித்தார்.

 

இதையடுத்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கரோனா ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர், அவர்களுக்கு அரசு என்னென்ன உதவிகளை வழங்கியதென கேள்வியெழுப்பப்பட்டது.

 

இதற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், "ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் இறந்தனர் என்ற புள்ளிவிவரம் மத்திய அரசிடம் இல்லை. எனவே நிவாரணம் குறித்த கேள்விக்கு இடமில்லை'' என பதிலளித்தார்.

 

யார் நலனுக்காக மசோதா?

சந்தைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலையில் மாநில அரசுகளைச் கலந்தாலோசிக்காமல், விவசாயத் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அவசரமாக மூன்று மசோதாக்களை தாக்கல் செய்ததற்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கண்டனங்கள் கிளம்பின. விவசாயிகளுக்கான உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிக மேம்பாடு, விவசாய விளைபொருள்களுக்கான விலை உறுதிப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்தம் குறித்த இந்த அவசர சட்டத்திருத்தங்களுக்கு இடதுசாரி, காங்கிரஸ், திரிணமுல் காங்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். விவசாயிகளின் பேரைச் சொல்லி பெருநிறுவனங்கள் பலனடையவே அவசரச் சட்டங்களை ஆளுங்கட்சி கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

 

கடன் நல்லது

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக்சிங் தாக்குர், மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீடு வழங்க மத்திய அரசிடம் போதிய நிதியில்லை. மாநிலங்கள் கடன் வாங்கிச் சமாளிக்கும்படி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். இதற்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

 

வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டத்துக்கெதிராக விமர்சனம் வைக்கும்போது, நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாகக்கூறி திரிணமுல் காங்கிரஸின் சௌகதாராய் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென பாராளுமன்ற அலுவல் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டார்.

 

தொகுதி மேம்பாட்டு நிதிக்கு செக்

கரோனா சூழலால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையில் நிதிநெருக்கடியைச் சமாளிக்க எம்.பி.க்கள் ஊதியத்தை 30 சதவீதம் குறைக்க முடிவெடுத்ததுடன், இரண்டாண்டுகளுக்கான எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் மத்திய அரசு கைவத்துள்ளது.

 

மொத்தத்தில் நாடாளுமன்றத்தின் முதல் நாளிலேயே சரமாரியாக விமர்சனங்களை வைக்கும் எதிர்க்கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு அவசர சட்டங்களை நிறைவேற்றுவதில் வேகம்காட்டுகிறது பா.ஜ.க.

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.