Skip to main content

ஞாபகம் வருதே!!! ஞாபகம் வருதே!!! பழைய சோறு... பச்சை மிளகாய்... ஞாபகம் வருதே!!!

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்பது பழமொழி. என்னதான் ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்துக்கு மனிதன் மாறிவிட்டாலும் கரோனா போன்ற பேரழிவுநோய் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் போது, ஒவ்வொருவருக்கும் தம் பழைய கலாச்சாரமும் அதன் நன்மைகளும் நினைவுக்கு வந்துவிடுகின்றன. மஞ்சள், வேப்பிலை வரிசையில் தற்போது பழைய சோறுக்கும் மவுசு அதிகரித்துள்ளது.  

 

 

Old rice ... green chilli

பச்சை மிளகாயினை நடுப்பக்கத்தில் சரியாக வகுந்து... அதாவது கத்தியால் கீறி கல் உப்பை வைத்து விளக்கெண்ணெயில வறுத்து பழைய சோறுக்குத் தொட்டுக்கிட்டா…அந்த சுவைக்கு நிகருண்டா... அதுவல்லவோ அமிர்தம். சொல் லும்போதே… நாவில் எச்சில் ஊறுகிறதல்லவா!

 

Old rice ... green chilli


கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அரிசிச் சோறு கிடைப்பதே அரிது. கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் தான் உணவு. கூழும் கஞ்சியும்தான் ஆகாரம். இன்றைய தலைமுறை "பாஸ்ட் புட்'ங்கிற பெயர்ல கண்டத எல்லாம் வாங்கித் தின்று பல நோய்களை வரவைத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அரிசிக்கு மாற்றாய் எதற்கெடுத்தாலும் கோதுமையைப் பயன்படுத்துகிறார்கள். முந்தின தலைமுறை கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, தினைனு விதவிதமாகச் சாப்பிட்டாங்க. இதெல்லாம் தண்ணீர் அதிகம் தேவைப்படாத பயிர்கள்.
 

http://onelink.to/nknapp

 

பழச மறக்காதனு முன்னோர்கள் சொன்னது பழைய சோத்துக்கும் சேர்த்துதான்யா.... பழையசோறு சாப்பிட்டால் என்ன நன்மைனு இப்ப உள்ள புள்ளைங்க நினைக்கலாம். மூலாதாரத்தில் சூடு அதிகமாக இருந்தால் அதனைத் தணிக்கும் மாமருந்து பழைய சோறு. பழைய சோறில் வைட்டமின் பி உள்ளது. சுடுசோறில் உள்ளதைவிடவும் பழைய சோறில் இரும்புச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. வயிற்றுப் புண் சீராக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்… இப்படிப் பழைய சோறின் நன்மைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
 

இத்தனை நன்மைகள் செய்யும் உணவை அமிர்தம் என்றே சொல்லலாம். இந்த அமிர்தத்தின் பயன்பாட்டை இந்தக் கரோனா விடுப்பில் பெற்றோர்களும் குழந்தைகளும் திரும்பக் கண்டடைந்திருக்கிறார்கள்.
 

உணவே மருந்துன்னு நம் முன்னோர்கள் சொன்னது இப்போதாவது ஞாபகத்துக்கு வந்திருப்பது நல்ல விஷயமல்லவா! ஆற்று நீர் வாதம் போக்கும். அருவி நீர் பித்தம் போக்கும். ஊற்று நீர் கபம் போக்கும். இது நம்ம முன்னோர் வாக்கு. இவை யனைத்தையும் ஒருசேரப் (வாதம் பித்தம் கபம்) போக்கும் மகிமையுடையது பழைய சோறு.
 

பழைய சோறு எப்படிப் பண்றதுனு யூடியூப் போய்த் தேடவேண்டாம். ரொம்ப ஈஸி. வடித்த சாதம் மிஞ்சியவுடன் இரவு மண்பானையில் தண்ணீர் விட்டு ஊறவிடவேண்டும். அதிகாலையில் பழைய சோறு தயார். அதில் கொஞ்சம் மோர் அல்லது தயிருடன் உப்புக் கலந்து தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், வறுத்த மிளகாய், கொத்தவரங்காய் ஆகியவை பயன்படுத்தலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் பளபளக்கும். நீண்டநாள் பாஃஸ்ட்புட் துரிதஉணவு சாப்பிட்டு உடல்கூறு பழுதடைந்த நிலையை மாற்றும்.
 

“பழைய காலங்களில் கிராமங்களில் காலையில் எழுந்ததும் பச்சை மிளகாய் கடித்துக்கொண்டு பழைய சோறு சாப்பிடுவார்கள். சாப்பிட்ட பிறகு அதிலுள்ள நீராகாரத்தைக் குடிக்கும்போது நமது வயிறு ஜில்லென்று குளிர்ந்து போகும்’’ அந்தச் சுகமே சுகம் என பழைய சோறுக்கு பரணி பாடுகிறார் எம்.குச்சிபாளையம் ஜெயலட்சுமி. அவரது ஊர் மக்கள் இப்போது அதை விரும்பிச் சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.
 

Old rice ... green chilli



அதேபோல், "கிராமங்களில் கிடைக்கும் முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, பிரண்டை, வேப்பம்பூ, வாதநாராயண தழை ஆகியவற்றை பழைய காலங்களில் வாழ்ந்த நமது பாட்டன் பூட்டன் காலத்து பாட்டிமார்கள் சமைத்துக் கொடுத்தார்கள். அதனால் அப்போதைய ஆண்கள் எல்லோரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் திடகாத்திரமாகவும் இருந்தார்கள். இப்போதான் எல்லாம் போச்சு'' என்கிறார் ஓய்வுபெற்ற ஆசிரியர் பெண்ணாடம் தங்கவீரப்பன்.
 

தமிழகத்தில் சில பெரிய ஹோட்டல் களி மண்பானையில் மோர் கலந்த பழைய சோறு விற்பனை சக்கைப் போடு போடுகிறது. அமெரிக்காவிலும்கூட சில பிரத்யேக ஹோட்டல்களில் பழைய சோறு விற்கப்படுகிறது. என்ன பில் மட்டும் டாலர்களில் வரும்.
 

Old rice ... green chilli


நம்ம பழைய சோறு பெருமையை அமெரிக்கர்கள் சொல்லித்தான் புரிய வேண்டுமா? அடிக்கும் வெயிலுக்கு யாரும் சொல்லாமலே காலை உணவில் பழைய சோறுக்கு முதலிடம் கொடுத்தால் ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமும் ஆச்சு. உச்சந்தலை சூடும் உடனே இறங்கிப் போகும்.
 

http://onelink.to/nknapp

 

"அந்த கஞ்சிக் கலயத்தை வஞ்சி சுமக்கையிலே...'னு’ பொண்டாட்டி முன்னால ரெண்டொரு முறை பாடுங்க... புரிஞ்சுகிட்டு மறுநாள் காலையில கஞ்சிக் கலயத்தை கொண்டுவந்து வைக்கிறாங்களா… இல்லையானு மட்டும் பாருங்க!
 

 

 

 

Next Story

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
District Collectors Chief Minister M.K. Stalin's main order

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாகப் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 ஆயிரத்து 40 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'விண்ணை முட்டும் அரிசி விலை'-ராமதாஸ் கண்டனம்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
'Skyrocketing rice prices' - Ramadoss condemned

'விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை' என பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் சாப்பாட்டுக்கான சன்னரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ. 6 வரை உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.12 வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரிசி விலை வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகரிக்கும். சம்பா/தாளடி அறுவடைப் பருவமான ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை பெருமளவில் குறையும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, இப்போது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை அதிகரித்து உள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை ரூ.1450 லிருந்து ரூ1600 ஆகவும், 62 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை 1350 ரூபாயிலிருந்து ரூ.1720 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் கிலோவுக்கு குறைந்தபட்சம் 6 ரூபாயிலிருந்து 8 ரூபாய்  வரை அரிசி விலை அதிகரித்திருக்கிறது. இந்த விலை உயர்வு இன்னும் தொடரும் என்று தெரிகிறது.

மிக்ஜம் புயல் காலத்தில் பெய்த மழையால் காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் நெற்பயிர்கள் சேதமடைந்தது, காவிரி பாசன மாவட்டங்களில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால்  2 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் முழுமையாகவும், ஒன்றரை லட்சம் ஏக்கரில் பகுதியாகவும்  கருகியதால் விளைச்சல் குறைந்தது ஆகியவை தான் முதன்மைக் காரணங்களாக கூறப்படுகின்றன.

தென்னிந்தியாவில் அதிக அளவில் நெல் விளையும் மாநிலங்களான ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் கூட போதிய அளவில் நெல் விளைச்சல் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், அம்மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லை ரூ.3,000 வரை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இதுவும் அரிசி விலை உயர்வுக்கு காரணம். இவை தவிர  அரிசி ஆலைகளுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது மூன்றாவது காரணமாக கூறப்படுகிறது.

நெல் மூட்டைகளின் விலை கணிசமாக அதிகரித்து வருவதால், அடுத்த சில நாட்களில் அரிசியின்  விலை கிலோவுக்கு ரூ.12 வரை அதிகரிக்கக்கூடும் என்றும், ஒரு கிலோ பொன்னி, பாபட்லா ரக அரிசியின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த வகை அரிசி கிலோ ரூ.48 முதல் ரூ.50க்கு தான் விற்கப்பட்டது. இவற்றின் விலை 50% வரை அதிகரித்து 75 ரூபாயை எட்டும் என்பது நியாயப்படுத்த முடியாததாகும்.

ஒருபுறம் அரிசி விலை உயர்ந்தால் இன்னொருபுறம் பருப்பு விலைகளும், பிற மளிகை சாமான்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. அதனால், தமிழ்நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் போது, அதைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. இதற்காகத் தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சரின் தலைமையில் விலைக் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை அதிகரித்திருப்பது இந்தக் குழுவுக்கு தெரியுமா? என்பது கூட தெரியவில்லை. அரிசி விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு  இதுவரை தும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது.

அரிசி விலை உயர்வுக்கான காரணம் அதன் பற்றாக்குறை தான் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரிசி அதிகமாக விளையும் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழக சந்தைக்கு அரிசியை கொண்டு வருவதன் மூலம் விலையை குறைக்கச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய வேண்டும். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அரிசி விலை குறைவாக இல்லை என்றால், சன்னரக அரிசியை நியாய விலைக்கடைகள் மூலம் மானிய விலையில் விற்க  அரசு முன்வர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.