Skip to main content

"உங்க பொண்ணு மாடியில இருந்து குதிச்சுட்டா... உடனே வாங்க...'' - அப்பல்லோ சம்பவம்

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

டாக்டர் ஆகவேண்டும் என்பது சங்கீதாவின் ஆசை. நீட் எழுதினார், தேர்ச்சி பெறவில்லை.

மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு உரிய செவிலியர் கல்லூரி, எலியார்பத்தியில் இயங்குகிறது. அதற்கு அருகில்தான் சங்கீதாவின் வீடு.

apollo-studentஅந்தக் கல்லூரியில் நர்ஸிங் படிப்பிற்காக விண்ணப்பித்தார். முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றதால் உடனே வாய்ப்பு கிடைத்தது. ஒரு லட்சத்து 60 ஆயிரம் கட்டச் சொன்னார்கள். தையல் தொழிலாளியான அய்யனார்-சேதுரத்தி மகளான சங்கீதாவிடம் அவ்வளவு பணம் ஏது? சொந்த பந்தங்களிடம் கடன் வாங்கி கட்டினார்.

27-8-19 அன்று அப்பல்லோ நர்ஸிங் கல்லூரியில் இருந்து சங்கீதாவின் அம்மாவுக்கு போன். ""உங்க பொண்ணு மாடியில இருந்து குதித்துவிட்டாள். உடனே வாங்க...''

அப்பல்லோ தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் சங்கீதா. முதுகுத்தண்டுவடமும், கால்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன; சிகிச்சை தொடர்ந்தது.

""கல்லூரி முதல்வரும் வகுப்பு ஆசிரியை கல்பனாவும் கொடுத்த டார்ச்சரால்தான் சங்கீதா தற்கொலைக்குத் துணிந்திருக்கிறாள். அப்பல்லோ கொடுத்து வந்த சிகிச்சையை நிறுத்தப்போவதாகச் சொல்கிறார்கள். சங்கீதா படுத்த படுக்கையாக இருக்கிறாள். அவளைத் தற்கொலைக்குத் தூண்டியவர்களைத் தண்டிக்க வேண்டும்'' என்று சங்கீதாவின் பெற்றோரும் உறவினர்களும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்கள்.

சங்கீதாவின் தாயாரை நாம் சந்தித்தோம்...

apollohospital


""வகுப்பு ஆசிரியை என் மகளுக்கு மட்டும் அதிக வேலை கொடுத்திருக்கிறார். அசைன்மென்ட் மார்க்கும் ஒழுங்கா போடல. என் மகளுக்கு அம்மை போட்டிருந்தது. ஒரு மாதம் லீவு போட்டிருந்தாள். இதையே காரணமா காட்டி டார்ச்சர் பண்ணீருக்காங்க. டிரைனிங் sangeethaஃபீஸ் கட்டலைனு திட்டியிருக்காங்க. கூடப்படிக்கிற பையன் ஒருத்தன் லவ் லெட்டர் எழுதி சங்கீதா பேக்ல சங்கீதாவுக்குத் தெரியாமலே வச்சிருக்கான். இதனால ஒழுக்கம்கெட்ட பொண்ணுனு பழி சுமத்தியிருக்காங்க'' கண்ணீருடன் சொன்னார் தாய் சேதுரத்தி.

அம்மா சொன்ன காரணங்களையே அப்பல்லோ தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற சங்கீதாவும் சொன்னார்.

ஆனால் அப்பல்லோ நர்ஸிங் கல்லூரி முதல்வர் ஹெலன்பிரிட்டோ நம்மிடம், ""சங்கீதாவுக்கு எங்க ஹாஸ்டல் கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை போலும். வீட்டில் என்ன பிரச்சினையோ? இந்த லட்சணத்தில் காதல் வேறு. முழு சிகிச்சையும் கொடுத்திருக்கிறோம். இப்ப வீட்டுக்குக் கூட்டிச் செல்லுங்கள் என்றால் நஷ்டஈடு வேண்டுமாம்... மனிதாபிமானத்திற்கும் அளவுண்டு'' சங்கடப்பட்டார்; சலித்துக்கொண்டார். அப்பல்லோ என்றாலே "அம்மா'டியோவ்!
 

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

ஜெயிலர் வெற்றி; 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

jailer success sun pictures helped 100 under privileged children for heart surgery

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசை பலராலும் பாராட்டப்பட்டது.

 

வசூலிலும் உலகம் முழுவதும் ரூ. 600 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை படைத்துள்ளதையடுத்து சமீபத்தில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து காசோலை அளித்து பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும் பரிசாக இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை ரஜினிகாந்த்திடம் காட்டி ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளுமாறு சொல்ல, பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 மாடல் காரை தேர்வு செய்தார் ரஜினி.

 

ரஜினியைத் தொடர்ந்து நெல்சனை சந்தித்த கலாநிதி மாறன், அவருக்கும் காசோலை வழங்கி போர்ச் (Porsche) கார் ஒன்றை பரிசளித்திருந்தார். இதையடுத்து இசையமைப்பாளர் அனிருத்தை நேரில் சந்தித்த கலாநிதி மாறன், அவருக்கும் காசோலை வழங்கி போர்ச் காரை பரிசாக வழங்கினார். இப்படித் தொடர்ந்து பரிசுகளை வழங்கி வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது குழந்தைகளுக்கு பண உதவி செய்துள்ளது.100 ஆதரவற்ற குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக ரூ.1 கோடி வழங்கியுள்ளது. இதன் காசோலையை அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியிடம் சன் பிக்சர்ஸ் சார்பில் காவேரி கலாநிதி வழங்கினார்.