Skip to main content

எங்களுக்கு என்ன நடக்கும்னு தெரியாது... நித்தி யாரையும் விட்டு வைக்க மாட்டார்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

நித்தியின் ஆசிரமத்தில் கற்பழிப்புகள் மட்டுமல்ல, கொலைகளும் சகஜமாக நடக்கும். நித்தியை எதிர்ப்பவர்களை உயிருடன் நித்தி விட்டு வைக்க மாட்டார் என்பதுதான் ஒரு காலத்தில் நித்திக்கு நெருக்கமாக இருந்தவர்கள் வெளியே வந்தவுடன் சொல்லும் அதிர்ச்சிகரமான தகவல். அந்த வகையில் நித்தியின் மீது கொலைவழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் பார்வையில் இருக்கிறது. அந்த வரிசையில், "என்னுடைய உயிருக்கு ஆபத்து' என ஒரு புது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

 

nithy



அந்த வீடியோவில் பேசியிருப்பவர் மா நித்திய தத்வ பிரியானந்தா என்கிற பெண். "என் பெண்களை நித்தி கடத்திவிட்டார்' என குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ள ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகள்தான் இவர்.

 

nithy



"நித்தியானந்தம்... என் பேர் மா நித்திய தத்வ பிரியானந்தா. நிறைய பேர் வந்து எனக்கு என்ன, ஏ அழற, என்ன ஆச்சு... அப்படின்னு சொல்லிட்டு தமிழ்ல மெசேஜ் போட்டு இருந்தீங்க... (இடையில் வீடியோவில் அழுகிறார்) நா இப்ப என்ன சிச்சுவேஷன்ல மாட்டிண்டுருக்கேன் என்னென்ன நடந்துண்டுருக்கு அப்படிங்கறது உங்களுக்கு சொல்றதுக்காக வந்தேன்.

ஒண்ணே ஒண்ணு சொல்லணும் பர்ஸ்ட்... (அழுகிறார் வீடியோ கட்டாகிறது... திரும்ப பேசுகிறார்) லிட்ரலாவே லைஃப் திரட்டனிங்கான ஒரு சிட்சுவேஷன்ல இருக்கோம். அப்படின்னா (மேலே வெறித்துப் பார்க்கிறார்) எப்ப எங்களுக்கு ஆபத்து வரும் அப்படின்றது தெரியாது? அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல மாட்டிண்டு இருக்கோம்''. (இதையே ஆங்கிலத்தில் மீண்டும் பேசுகிறார்).

I will tell simultaneously in English also. I am struck in a life threatening situation. I don't know whether I am going to be alive to make the next video...

(தொடர்ந்து தமிழில் பேசுகிறார்...)

எனக்கு கண்டிப்பாகத் தெரியாது அடுத்த வீடியோ பண்றவரைக்கும் இருப்பேனான்ட்டு... எனக்கு அந்தளவுக்கு பயமா இருக்கு...'' இவர் தனது முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிடவில்லை. வேறொரு நண்பருக்கு அனுப்பி இந்த வீடியோவை வெளியிட வைத்திருக்கிறார். வீடியோவின் துவக்கத்தில் வழக்கமாக சொல்வது போல் "நித்தியானந்தம்' என சொல்லி ஆரம்பிக்கிறார். இவர் பேசிய வீடியோ நித்திக்கு தொடர்பேயில்லாத பலரது பக்கங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.

 

nithy



இந்த வீடியோவை பார்த்து அந்த பெண்ணின் அப்பாவான ஜனார்த்தன சர்மா கதறிவிட்டார். அவர் நித்திக்கு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்த பலருக்கு இந்த வீடியோவை அனுப்பி அவர்களது கருத்துகளை கேட்டார். ஏற்கனவே சங்கீதா என்கிற பெண்ணை பிடதி ஆசிரமத்திலேயே கொலை செய்து அவரது மரணம் இயற்கையான மரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையும் பெற்றவர் நித்தி.

 

nithy



சங்கீதாவின் தாயார் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவு வாங்கி பிரேத பரிசோதனை செய்யும் போது, சங்கீதாவின் மூளை இருந்த இடத்திலும்; இதயம், நுரையீரல் இருந்த இடத்திலும் கந்தை துணிகள் இருந்ததை பார்த்த சங்கீதாவின் தாயார் மயக்கமடைந்து விட்டார். அது நடந்தது பெங்களூரில். இன்று நித்தி இருப்பது வெளிநாட்டில். இந்திய சட்டம் என்னை ஒன்றும் செய்யாது' என சவால் விடும் நித்தி மா நித்திய தத்துவ பிரியானந்தாவையும் அவரது சகோதரியையும் அவர்களை நித்தி கடத்திக் கொண்டு போய்விட்டார் என வழக்கு போட்டார் என்பதற்காக கொலை செய்தால் என்ன ஆவது? எதற்காக இந்த வீடியோ இப்பொழுது வருகிறது. இது புதிய வீடியோவா? பழைய வீடியோவா? என கேட்டு வருத்தத்துடன் இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதுபற்றி ஜனார்த்தன சர்மாவின் கருத்தை அறிய அவரை தொடர்பு கொண்டோம். சோகமாக இருக்கும் அவர் நம்மிடம் பேச மறுத்துவிட்டார்.

ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் அடிக்கடி வீடியோக்களில் பேசக் கூடியவர்கள். ஜனார்த்தன சர்மா "எனது மகள்களை நித்தி கடத்தி விட்டார்' என புகார் கொடுத்தபோது...

"எனது தந்தையின் புகார் அடிப்படை ஆதாரமற்ற புகார். எங்களை கடத்தி புஷ்பக் நகர் என்ற இடத்தில் இரண்டு வாரம் அடைத்து வைத்தார் நித்தி என புகார் தரப்பட்டது. புஷ்பக் நகரில் உள்ள வீட் டுக்கு நாங்கள் விடு முறையில் சென்றோம். அங்கு எங்களை சந்திக்க வருவதாக சொன்ன ஜனார்த்தன சர்மா வரவில்லை. நாங்கள் அங்கிருந்தவர்களிடம் சகஜமாக பேசிவிட்டு வந்தோம். அதன்பிறகு நாங்கள் கடத்தப்பட்டதாக என் தந்தை பொய் புகார் கொடுத்திருக்கிறார்'' என வீடியோ பேட்டி ஒன்றில் கூறினார்கள்.


ஜனார்த்தன சர்மா தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்த குஜராத் உயர்நீதி மன்றத்தில், நாங்கள் மேற்கத்திய தீவுகளில் இருக்கிறோம் என்றார்கள். அதன்பின் "அமெரிக்கா பக்கத்தில் உள்ள ஒரு நாட்டில் இருக்கிறோம்' என கூற "அந்த நாட்டு தூதரகத்தில் ஆஜராகுங்கள்' என கோர்ட்டு உத்தரவிட்டது. "நித்தியும் குற்றவாளியாகியுள்ள இந்த வழக்கை வாபஸ் பெற வைக்க நித்தி அவரது கட்டுப்பாட்டில் உள்ள ஜனார்த்தன சர்மாவின் மகளை இப்படி பேச வைத்துள்ளாரா? என்கிற சந்தேகம் இருக்கிறது' என்கிறார்கள் கர்நாடக போலீசார்.


இந்த பெண் 14 வயது மைனராக இருக்கும் போதே நித்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்பதால் போக்சோ சட்டத்தில் நித்தியை கைது செய்ய வேண்டும் என ஜனார்த்தன சர்மா புகார் கொடுத்துள்ளார். வழக்கு, விசாரணை, சாட்சியம், வாக்குமூலம் எனத் தொடர்ந்தால் மேலும் மேலும் சிக்கலாகும் என்பதால், இந்த பெண்ணைக் கொலை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள். நித்தி ஆசிரமத்தின் மர்மங்கள் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த புதிய வீடியோ மேலும் பல சர்ச்சைகளுக்கு வழி வகுத்திருக்கிறது. நித்தி வழக்கு அதிபயங்கரமான கிளைமேக்ஸை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

 

 

Next Story

மனைவி கண்முன்னே பாலியல் வன்கொடுமை; திருமணமான பெண்ணின் பரபரப்பு புகார்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
A married woman's sensational complaint on Incident happened in front of wife

கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், 28 வயது திருமணமான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், ‘ரஃபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும்’ புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெலகாவி போலீசார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டின் போது, ரஃபீக் என்பவர், அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் ரஃபீக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரியவர, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்க தொடங்கியுள்ளார். ஆனால், அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு முன்னால் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பர்தா அணியுமாறும், ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறும் அந்த தம்பதியினர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவரை விவாகரத்து செய்து, இஸ்லாம் மதத்துக்கு மாறி அவர்களுடன் வாழவில்லை என்றால், தனது அந்தரங்க புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரப்பி விடுவதாகவும் ரஃபீக் மிரட்டியுள்ளார்’ எனத் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376, 503, கர்நாடகா மத சுதந்திர உரிமைச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.