Advertisment

நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ம்தேதி காலை 6 மணிக்கு தூக்கு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் இம்மாதம் 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றம் என்று முடிவாகி இருந்த நிலையில், முகேஷ் சிங்கின் கருணை மனு விவகாரத்தினால் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி காலை 6 மணிகு மாற்றப்பட்டுள்ளது.

Advertisment

n

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இம்மாதம் 22ம் தேதி அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை திஹார் சிறை நிர்வாகம் செய்து வந்தது. இந்நிலையில், குற்றவாளிகளின் ஒருவனான முகேஷ் சிங், தூக்கு தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்.

Advertisment

அதே நேரத்தில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்குமாறு டெல்லி மாநில அரசு, துணை நிலை ஆளுநருக்கு கடிதம் அனுப்பியது. துணைநிலை ஆளுநரும் இக்கடிதத்தை பரிசீலித்து, கருணை மனுவை நிராகரிக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு பின்னர் இந்த மனு நேற்று முன் தினம் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின்னர், குடியரசுத்தலைவர் கருணை மனுவை நிராகரித்தார்.

கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி, நோட்டீஸ் அனுப்பிய நாளில் இருந்து 14 நாட்களுக்கு பின்னர்தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற விதி இருப்பதால், முகேஷ் சிங்கிற்கு கருணை மனு நிராகரிக்கப்பட்தற்கான நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 14 நாட்களை கணக்கில் வைத்து பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் திஹார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், தூக்கு மேடைக்கு அருகில் இருக்கும் 4ம் எண் சிறைக்கு நால்வரும் மாற்றப்பட்டு அங்கே தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Nirbhaya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe