Skip to main content

ஸ்டாலினின் அறிவிப்பு தேர்தலுக்கானதல்ல... அடுத்த தலைமுறைக்கானது! மு.ஞானமூர்த்தி

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

 


அரியலூர் மாவட்டம், செந்துறை திமுக ஒன்றியச் செயலாளர் மு.ஞானமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

இரண்டு பிரதான கோரிக்கையை முன்னிருத்தி 20-7-1980ல் வன்னியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1. மாநிலத்தில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 2. மத்தியில் வன்னியர்களுக்கு 2% இடஒதுக்கீடு வழங்கவேண்டும். 

 

mkstalin



இந்த கோரிக்கைகளால் கவரப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வன்னியர் சங்கத்தில் இணைந்தனர். 
 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் சாலைமறியல், ஒருநாள் இரயில் மறியல், ஒருவாரம் சாலைமறியல், தேர்தல் புறக்கணிப்பு என பல்வேறு களப்போட்டங்களை வன்னியர் சங்கம் நடத்தியது. போராட்ட காலகட்டத்தில் லட்சக்கணக்கான வன்னியர்கள் கைது செய்யப்பட்டனர். ஒருலட்சம் பேருக்குமேல் வழக்கு போடப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு போராட்டத் தலைவர்களை அழைத்துப்பேச மறுத்தது. 
 

கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தபோதுதான் சேலம் வீரபாண்டியார் மூலமாக போராட்ட தலைவர்களை அழைத்து வரச்சொல்லி அவர்கள் கோரிக்கையை கேட்டு நிறைவேற்றுவதற்க்கான முயற்சியை எடுக்கிறேன் என்று பேசி அனுப்பி வைத்தார்கள். வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிந்தங்கிய நிலையில் உள்ள சாதிகளை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என அறிவித்து 20% இட ஒதுக்கீடு  அறிவித்தார் கலைஞர்.  


 

 

கலைஞர் அறிவித்த அன்று அந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு வெடிவெடித்து கொண்டாடினோம்.  மறுநாள் வன்னியர் சங்கத் தலைவர்கள் கூடி இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டால் கலைஞருக்கு வன்னியர்களின் ஆதரவு கூடிவிடும். நமது இயக்கம் வளர்ச்சி அடையாது என கூறி இந்த இட ஒதுக்கீட்டை ஏற்க முடியாது. எங்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரவேண்டும், கலைஞர் எங்களை ஏமாற்றிவிட்டார், வன்னிய இளைஞர்கள் களத்தில் இறங்கி போராடுங்கள் என அறிக்கை விட்டார்கள். 
 

ஒரு கனியை கொடுத்திருக்கிறேன் சுவைத்துப் பாருங்கள். ருசி இல்லை என்றால் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிக்கை விட்டார்கள். 
 

பிறகு அந்தப்போராட்டம் கடுமையாக இல்லாமல் மாற்றிக்கொள்ளப் பட்டது. 
 

இப்போது ஸ்டாலின் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்திருப்பது வன்னியர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. 
 

மேலும் சாலைமறியலில் உயிரிழந்த போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்திருக்கிறார். 
 

அதிமுக ஆட்சியில் இருந்த போது வன்னியர்களை மரம்வெட்டிகள் என ஜெயலலிதா பேசினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் இட ஒதுக்கீட்டு போராளிகள் என சட்டமன்றத்திலேயே அறிவித்து போராடியவர்களை போராளிகள் என கௌரவப்படுத்தினார்.
 

 சாலைமறியலில் உயிரிழந்த குடும்பதுக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதியும், மாதம் ரூ. 3 ஆயிரம் இழப்பீட்டு நிதியும் வழங்குவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார் கலைஞர். அதை வழங்கினார். ஸ்டாலின் திமுக தலைவராக வந்த பிறகு வன்னியர்களுக்கான முதல் அறிவிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இட ஒதுக்கீட்டில் உயிர்தியாகம் செய்தவர்களின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளார். 
 

இந்த அறிவிப்பால் வன்னிய இளைஞர்கள் ஸ்டாலின், செய்வதைத்தான் சொல்வார், சொல்வதைத்தான் செய்வார் என்று தங்களின் நிலைப்பாட்டை திமுக தலைவருக்கு ஆதரவாக திசை திரும்பி இருக்கிறார்கள். 
 

முன்னாள் அமைச்சர் விக்கிரவாண்டி ஏ. கோவிந்தசாமி திமுகவின் வளர்ச்சியிலும், வன்னியர்களின் பிரதிநிதியாகவும் இருந்தார். அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 

ஸ்டாலினின் இந்த அறிவிப்பு மூத்த தலைவர்களை திமுக என்றைக்கும் புறக்கணிக்காது என்பதற்கான ஒரு நற்சான்று. 


 

 

வன்னியர்களுக்கு தொடர்ந்து பல சலுகைகளை செய்துவரும் திமுகவை வசைபாடுவதிலேயே சில வன்னியர் தலைவர்கள் முனைப்பாக உள்ளனர். 

 

mg

வன்னியர்களுக்கு இதுவரை எதுவுமே செய்யாத அதிமுகவை தூக்கிப்பிடித்து கொண்டாடும் சில வன்னியர் சங்க தலைவர்கள் தங்கள் சுயலாபத்திற்க்காகவே என்பதை இட ஒதுக்கீட்டுப் போராளிகள் உணர்ந்துள்ளனர். 
 

இவர்கள் 10 ஆண்டுகாலம் மத்திய அரசில் நாடாளுமன்ற உருப்பினர்களாகவும், மத்திய அமைச்சர்களகவும் இருந்தார்களே என்றைக்காவது மத்திய அரசில் வன்னியர்களுக்கு 2% தனி இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று பேசியதுண்டா? மத்திய அமைச்சர்களுக்கு வருமானம் வரும் இலாக்காவை கெஞ்சி, கேட்டுப் பெற்றார்களே, இடஒதுக்கீடு தருவதற்கு அதிகாரம் படைத்த இலாக்காவை பெற்றிருந்தால் இவர்களே வன்னியர்களுக்கு மத்தியில் 2% இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாமே ஏன் செய்யவில்லை?
 

  ஸ்டாலினின் வன்னியர்களுக்கான இந்த அறிவிப்பு அடுத்த தேர்தலுக்கானதல்ல! அடுத்த தலைமுறைக்கானது! நன்றி.  


 

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.

Next Story

''உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது''- உறுதியளித்த உதயநிதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 ``What is your mind voice asking?''-Udhayanithi assured

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பேசுவையில், ''நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய திட்டம் காலை உணவு திட்டம். காலையில் எழுந்து நீங்கள் சீக்கிரம் வேலைக்கு போய் விடுவீர்கள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட நேரம் இருக்காது. மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டுக்கொள் எனச் சொல்லி அனுப்பிவிடுவீர்கள். ஆனால் உங்களுக்கு நினைவெல்லாம் குழந்தையைப் பசியோடு அனுப்பி வைத்தோமே சாப்பிட்டார்களோ இல்லையோ, பசி மயக்கத்தில் இருப்பார்களே, பள்ளிக்கூடத்திற்கு போனார்களா, தூங்கி விட்டார்களா? என்றெல்லாம் நினைப்பீர்கள். ஆனால் முதல்வர் அதற்காக கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சருடைய காலை உணவு திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 31 லட்சம் மாணவர்கள் தினமும் காலை முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். இந்த மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் முதல்வர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை நிம்மதியாக அனுப்புகிறீர்கள் 'என் பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதும் அவனுக்கு காலையில் தரமான உணவு கொடுத்து கல்வியைக் கொடுப்பார்கள். திராவிட மாடல் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்' எனத் தைரியமாக அனுப்புகிறீர்கள். இதற்குப் பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டத்தையும் சிறப்பான திட்டம் என்று சொல்லி தெலுங்கானா, கர்நாடக மாநில அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுடைய மாநிலத்தில் விரிவுபடுத்துவதற்கு. இங்க மட்டும் அல்ல கனடா நாடு தெரியுமா... அமெரிக்கா பக்கத்தில் இருக்கின்ற கனடா நாடு, பணக்கார நாடு. அந்த நாட்டின் பிரதம மந்திரி பெயர் ஜஸ்டின். அவர்  ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் 'உலகத்திலே மிகச் சிறந்த திட்டம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தான். பள்ளி குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு வர வைப்பதற்கு இதை விட சிறப்பான திட்டம் எங்குமே இல்லை' என்று சொல்லி கனடா நாட்டில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். இதற்கு பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு.

அடுத்து நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும். மகளிர் எல்லாம் வந்திருக்கிறீர்கள் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது. அதுதான் இன்று தேதி 16. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தேர்தல் 2021 தேர்தலில் முதல்வர் வாக்குறுதி அளித்தார். தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னோம். கடும் நிதி நெருக்கடி. ஒன்றிய அரசு நமக்கு காசு தரவே மாட்டேன் என்கிறார்கள். இருந்தாலும் தமிழக முதல்வர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க சொன்னார். விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரு கோடியே அறுபது லட்சம் பேர். அதில் சரி பார்த்து வெரிஃபிகேஷன் செய்து ஒரு கோடியே 18 லட்சம் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இப்பொழுது வரை போய்க்கொண்டிருக்கிறது. சில இடங்களில் குறை இருக்கிறது. எனக்கு வரவில்லை, பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வந்துவிட்டது. எதிர் வீட்டு பெண்ணுக்கு வந்து விட்டது எனக் குறைகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும். தேர்தல் நேரம் நானும் நிதியமைச்சரும் தான் அதற்கு பொறுப்பு. கண்டிப்பாக இன்னும் 5 மாதங்களில் நிச்சயம் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் கொடுப்பார். ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு மகளிர் உதவி தொகைத்கொடுக்க மனசுள்ள முதலமைச்சர் இன்னும் ஒரு 40 லட்சம் மகளிருக்கு கொடுக்க மாட்டாரா?'' என்றார்.