Skip to main content

தமிழகத்தில் புதிதாக அகழாய்வு; பழங்காலத் தமிழர்களின் வலுவான சான்றுகள் வெளிப்படும் என நம்பிக்கை

Published on 27/11/2022 | Edited on 28/11/2022

 

New Excavation in Tamil Nadu; It is hoped that strong evidence of ancient Tamils ​​will emerge

 

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு பண்பாட்டு சின்னங்களும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் மிகுதியாகக் காணப்படுகிறது. இது தொண்டைமான்கள் காலத்திலும் அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மூலமும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆய்வாளர்கள் மூலமும் தொல்லிடங்களாகவும் கல்வெட்டுக்களாகவும் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகிறது.

 

குறிப்பாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேலாய்வுகளை மேற்கொண்டு இதுவரை கண்டறியப்படாத தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன், துணைச்செயலாளர் பீர்முகமது ஆகியோர் விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் புத்தக வெளியீட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.

 

தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சரிடம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு கோரிக்கை குறித்து பேசினர் . அதனைத் தொடர்ந்து தலைமையுரை ஆற்றிய அமைப்பின் நிறுவனரும் தொல்லியல் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்வதற்கான கருத்துருக்களை நடுவண் அரசுக்கு தமிழ்நாடு தொல்லியல் துறை அனுப்பவுள்ளது குறித்து தகவல் வெளியிட்டு பேசினார்.

 

அப்போது அகழாய்வு பணிக்கு பொற்பனைக்கோட்டையை தேர்வு செய்துள்ளதாகவும், விரைவில் பொற்பனைக்கோட்டையை தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் இதுகுறித்து முறைப்படி அறிவிப்பார் என்றும் தகவல் தெரிவித்தார்.

 

இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தலைவர் கரு.ராசேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன் ஆகியோர், தமிழகத்தின் பண்பாட்டு சின்னங்களில் மிக முக்கியமானதும் சங்க கால கோட்டை அமைப்பு முழுவதுமாக சிதையாத நிலையிலுள்ள ஒரே சங்க கால கட்டுமானமாக பொற்பனைக்கோட்டை இருக்கிறது.

 

பொற்பனைக்கோட்டை அகழாய்வை மேற்கொள்வது குறித்து தற்போது அறிவிப்பு வெளியிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தும் செய்தியாகும். பழங்கால உலோக தொழில்நுட்பம், கட்டுமான அமைப்புகள், மொழி வளர்ச்சி , கலை, பண்பாடு, வெளிநாட்டு தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை பொற்பனைக்கோட்டை மேலாய்வுகள் மூலம் தொடர்ச்சியாக வெளிப்பட்டு வருகிறது. அகழாய்வுப்பணியை தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொள்ளும் பட்சத்தில் வலுவான ஆதாரங்கள் வெளிப்படும். தமிழக தொல்லியல் ஆய்வுகளில் பொற்பனைக்கோட்டை முக்கிய இடத்தை பிடிக்கும். இத்தகைய சிறப்பான அறிவிப்பை வெளியிட்ட தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு அவர்களுக்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.