Skip to main content

ரஜினியின் புது பிஸ்னெஸ் - சத்யராஜ்

Published on 05/06/2018 | Edited on 05/06/2018

திமுக தலைவர் கலைஞர் அவர்களின் 95வது பிறந்தநாள் நிகழ்ச்சி வெப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் அரசியல்துறை சார்ந்தவர்கள், பல திரைத்துறை நடிகர்கள் கலந்துகொண்டனர். சத்யராஜ், ராஜேஷ், மயில்சாமி, மற்றும் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜின் பேச்சு மிகவும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. அவர் எப்போதும் தன்னை எம்ஜிஆர் ரசிகர், பெரியார் கொள்கையுடையவர் என்று காட்டிகொள்ளுபவர் என்ற கருத்து அனைவரிடமும் இருந்துவந்த நிலையில் கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசியது அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது. அப்போது பேசுகையில், 
 

sathyaraj

 

 

 

அரசியல் என்பது ஒரு சமூக சேவைதான். அரசியல் என்பது ஒரு சமூக சேவை என்பதை கலைஞர் அவர்கள் வாழ்க்கையில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். இப்போதான் படித்தே தெரிந்துகொண்டேன் அவர் அரசியலில் காலடி எடுத்து வைத்தது 14வது வயதில் என்று. அந்த 14 வயது பையனுக்கு தான்கொண்ட லட்சியத்தின் மீதும் தன் கொள்கையின் மீதும், அய்யா பெரியார் அவர்களின் சுயமரியாதை கருத்துகள் மீதும் நம்பிக்கை வந்ததன் விளைவாக, தான் நம்பிய கொள்கையை காப்பதற்காக எந்த ஒரு சுயநலமும் பாராமல் களத்தில் இறங்கினாரே அதுதான் அரசியல். சமூக சேவைதான் அரசியல். 14 வயது பையன் இந்திக்கு எதிராக குரல் கொடுக்கும்போது வருங்காலத்தில் நாம் முதல்வராக வருவோம் என்ற எண்ணம் அவர் மனதில் ஒரு துளியும் இருந்ததிருக்க வாய்ப்புண்டா? 14 வயது பையனுக்கு மனதில் என்ன இருக்கும். இப்படி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வாழ்க்கையே அர்ப்பணித்து தான் நம்பிய கொள்கைக்காக, தன் சுயமரியாதை கொள்கைக்காக, அப்படியே களத்தில் இறங்கி நம்ம எதிர்காலம் என்ன ஆகும், நம்ம தொழில் என்ன ஆகும்? நாம சிறைக்கு போவோமா? மாட்டோமா? அதை பற்றி எல்லாம் கவலைபடமால் வருவதற்கு பெயர்தான் அரசியல். அதுதான் சமூகசேவை. திட்டம்போட்டு கணக்குப்போட்டு வருவதற்கு பெயர் அரசியல் அல்ல. அதற்கு பெயர் வியாபாரம் பிசினெஸ். பிசினஸ் என்றால் என்ன? சிம்பிளா சொல்லப்போனால் இப்ப வேப்பேரியில் ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம்'னு வெச்சுக்கோங்க என்ன திட்டம் போடுவோம். இங்க சைவம் ஹோட்டல் நல்லா போகுமா இல்ல அசைவம் ஹோட்டல் நல்லா போகுமா? ஏற்கனவே சைவம், அசைவம் இருக்கிறது ? இல்ல சைனீஸ் போடலாமா? இங்க என்ன மாதிரி வியாபாரம் ஆரம்பித்தால் வியாபாரம் நடக்கும். இங்க ஏதாவது ஹோட்டல் மூடி வெற்றிடம் இருக்குதா? அப்படி என்று கணக்குப்போட்டு வருவதற்கு பெயர்தான் பிசினெஸ். அது அரசியல் அல்ல எனவே அந்த பிசினெஸ்க்கு நாம் ஏதோ ஒரு பெயர் வைக்ககூடாது. அது பிசினெஸ் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.

 

 

 

அரசியல் என்றால் அப்படியே களத்தில் குதிக்க வேண்டும். ஒரு அநீதி நடக்கிறது என்றால் அப்படியே உள்ளே இறங்குவதற்கு பெயர்தான் அரசியல். நீங்க பிசினெஸ்க்கு உள்ளே வந்துவிட்டு அதற்கு ஏதோ ஒரு பெயர் வைக்ககூடாது. அந்த பிசினெஸ்க்கு பெயர் ‘ஆன்மீக அரசியல்’. நான் நினைத்த வரைக்கும் ஆன்மீகம் அப்படி'னா எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ‘இரும்புக்கரம் கொண்டு அடக்குவது அல்ல ஆன்மீக அரசியல் அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதுதான் ஆன்மீக அரசியல் இதுதான் ஏதோ எனக்கு தெரிந்தது. நாம் என்ன நிம்மதியை தேடி மலைக்கெல்லாமா போறோம். நம்மளுக்கு தெளிவா இருக்கு நாம் பெரியார் திடலில் படித்தவார்கள். நான் இப்பவே நிம்மதியாகதான் இருக்கேன். காலையில் பல் விளக்கும்பொழுது நிம்மதியாக விளக்குவேன். டிபன் சாப்பிடும்போது நிம்மதியாக சாப்பிடுவேன். எல்லாம் அய்யா கொடுத்த அறிவு, தந்தை பெரியார் கொடுத்த அறிவு. ஒரு பஞ்ச் டயலாக் கூட அய்யா பெரியாரை வைத்துதான் பேசுவேன். அது என்னவென்றால் தலையில் முடி இல்லை ‘'நாங்கள் எல்லாம் தலைக்கு மேலே இருக்கிறத நம்பி வாழ்றவாங்க அல்ல தலைக்கு உள்ள இருக்கிறத நம்பி வாழ்றவாங்க’' ஏனென்றால் தலைக்கு மேலே இருப்பது ஜெனிடிக்ஸ். எங்க தாய்மாமனுக்கு முடி இல்லை, அப்பாவுக்கும் முடி இல்லை அப்ப எனக்கும் முடி இருக்காதுதில்ல. ஆனால் உள்ள இருப்பது அய்யா கொடுத்தது. ''அது கொட்டாது வளர்ந்து கொண்டுதான் இருக்கும்'' என கூறினார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.