Skip to main content

நேசமணியின் சுத்தியல்...!!

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

சமூக வலைத்தளத்தில் மோடியின் பிரதமர் பதவியேற்பு விழா, ஆந்திராவில் ஜென்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழா என எல்லாவற்றையும் ஓரம் கட்டிவிட்டது "பிரே பார் நேசமணி".

 

hammer ... !!

 

நம்ம சுப்பிரமணிக்கு என்னாச்சு, ஆஸ்பத்திரிக்கு போனாரா? டாக்டர் என்ன சொன்னாராம் என கேட்பது மாதிரி ஆளாளுக்கு நேசமணிக்கு என்ன ஆச்சு? உயிருக்கு ஒன்னும் இல்லியே? நேசமணி உடல்நிலை காரணமாக பதவியேற்பு விழா தள்ளிபோகாதுல்ல என்பது மாதிரியான போஸ்ட்டுகள் சமூக வலைத் தளங்களில் பறக்கின்றன. உலகளவில் டிரெண்டு ஆன இந்த நேசமணி போஸ்டுக்கு மூலப் புள்ளி வைத்தவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் புதூரை சேர்ந்த விக்னேஷ் பிரபாகர்.

 

hammer ... !!

 

தற்போது துபாயில் பொறியாளராக வேலை பார்க்கும் இவர், "சிவில் என்ஜினியரிங் லேனர்ஸ்" என்ற  பேஸ்புக் பக்கத்தில் சுத்தியல் படத்தை பதிவிட்டு, இதன் பெயர் 'சுத்தியல்' உங்க ஊரில் இதற்கு என்ன பெயர்? இதை வைத்து எதையாவது அடித்தால் டங் டங் என சத்தம் வரும், கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில் பட்டு இது காயம் ஏற்படுத்தியது (பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் நேசமணி அவரது தலையில் சுத்தியல் விழுந்ததை) என குறிப்பிட்டிருந்தார்.

 

hammer ... !!

 

அதற்கு பின்னூட்டமாக அவரது நண்பர்கள், "இப்போது கான்ட்ராக்டர் நேசமணிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு நலமாக இருக்கிறார்.  இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்'' என பதிவிட, இப்போது நேசமணி குணமடைய இந்தியா முழுவதும் கூட்டுப்பிரார்த்தனை நடத்துகிற அளவுக்கு ட்ரெண்ட் மாறி இருக்கிறது.

 

nesamani

 

இதுதொடர்பாக விக்னேஷ் பிரபாகரை தொடர்பு கொண்டு பேசினோம். "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சுத்தியலால் அடித்தால் டங்..டங்.. சத்தம் வரும்னு போட்டது பிரபலமாகும்னு எதிர்பார்த்தேன். ஆனால், நேசமணி கேரக்டர் அதை ஓவர்டேக் பண்ணியிருக்கிறது.  நினைச்சுக்கூட பார்க்கலை, விளையாட்டுக்காக பதிவிட்ட கமெண்ட் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. இதை வச்சு மீம் கிரியேட்டர்கள் செம்மையா கிரியேட்டிவ் பண்ணி பதிவுகளை வெளியிட்டிருக்காங்க. நான் போட்ட பதிவில நேசமணி பத்தி நலம் விசாரிப்பவரும் என் நண்பர்தான். அவருக்கு நக்கலுக்காக சீரியஸாக கேட்க, நானும் அதே டோன்ல ரிப்ளெ பண்ணினேன். இது இப்படி டிரென்ட் ஆகும்னு எதிர்பார்க்கல" என்றார். 

 

நாமும் பிரார்த்திப்போம் நேசமணி(?) குணமடைய.!

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

''டக்குனு நீங்களும் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க'' - நடிகர் வடிவேலு பேட்டி 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
vadivelu

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் மோட்ச தீபம் ஏற்ற வந்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிறது. அம்மாவின் திதிக்கு இங்கு மோட்ச விளக்கு போடுவதற்காக நான் வந்திருக்கிறேன். என்னுடைய தெய்வம் அவர்கள். அவர் இறந்த துக்கம் என்னை விட்டு இன்னும் போகவில்லை. அம்மா இறந்த ஆறு மாசத்தில் தம்பி இறந்துட்டாரு. அந்த இரண்டு துக்கமும் இன்னும் குடும்பத்தை போட்டு வாட்டுது. இன்னும் அதில் இருந்து நாங்கள் மீளவில்லை. இப்பதான் அம்மாவிற்கு முடிந்திருக்கிறது. இன்னும் ஆறு மாதம் கழித்து தம்பிக்காக இங்க வந்து மோட்ச தீபம் ஏத்தணும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''எல்லாருமே வரலாமே (செய்தியாளர்களை நோக்கி) நீங்களும் கூட வரலாம். வீடியோ கேமரா எடுத்துக் கொண்டிருக்காமல் நீங்களும் வரலாம். வேலை இருக்கிறதா? வர வேண்டியதுதானே. இப்படியே கேமராவை பிடித்துக் கொண்டு எத்தனை நாள் வேலை பார்ப்பீர்கள். டக்குனு நீங்கள் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க. வாங்க எல்லாரும் அரசியல் கட்சி ஆரம்பிங்க. மக்களுக்கு நல்லது செய்வதற்கு யாராக இருந்தாலும் வரலாம். யாரும் வரக்கூடாது என்று சொல்லக்கூடாது. எல்லாரும் வந்தார்கள். டி.ராஜேந்தர் வந்தாரு, ராமராஜன் வந்தாரு, பாக்யராஜ் வந்தாரு எல்லாரும் நல்லது செய்யத்தான் வந்தாங்க. அது மாதிரி நல்லது செய்ய வருகிறார்கள். வருபவர்களை வரவேற்கிறோம். வரட்டும் வந்து மக்களுக்கு நல்லது செய்வது தப்பில்லையே வரட்டும்'' என்றார்.