Skip to main content

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...இசைக்கு உயிரூட்டும் பெனிட்டா!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
  மழலைச்சொல் கேளா தவர்” 

என்கின்ற வள்ளுவரின் குறளின்- குழலுக்கு உயிரூட்டுகின்றார் பெனிட்டா பிரேம்குமார். பரபரப்பான திருநெல்வேலி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையினூடே இருக்கின்றது மூங்கிலை சீர் செய்து, இசைக்கு உயிர் கொடுக்கும் பெண் சக்தியின் வீடு.! கணவரின் ஆதரவில் பெண் தொழில் முனைவோராக, தனித்துவமிக்க புல்லாங்குழல் தயாரிப்பாளராக, உலகளவில் புல்லாங்குழல் வணிகத்தை கொண்டு சென்றவராக அடையாளம் காணப்பட்ட பெனிட்டா பிரேம்குமாரின் கதையோ சுவாரசியமானது.


"2010- ம் ஆண்டு அது.! என்னுடைய இரண்டாவது குழந்தை பேறுகால நேரம்.! காதல் கணவனுக்கு ஒத்தாசையாகத் தான், எதேச்சையாகத் தான் பொறுப்பாக பார்த்துக்கொள்ள ஆள் வேண்டுமே..? அதனால் தான் அவருக்குத் துணையாக இத்தொழிலுக்கு வர வேண்டியாதாயிற்று. தொடக்கத்தில் புல்லாங்குழலுக்குத் தேவைக்காக கொள்முதல் செய்து வந்த மூங்கில்களை தரம் பிரிக்கின்றது, அளவெடுத்து வெட்டிக்கொள்வது, கரி அடுப்பில் தீ மூட்டி கம்பியை காய வைச்சு மூங்கில்களில் துளையிடுவது, வார்னிஷ் அடிப்பது இப்படித்தான் சின்ன சின்ன வேலையாக, ஒவ்வொன்றாக அவரோட துணையுடன் கத்துக்கிட்டேன்.


வெயில்காலம் என்றால் இரவு நேரத்தில் வேலை செய்வோம். எதுவுமே கஷ்டமாக தெரியவில்லை. நாளடைவில் அவர் வியாபாரத்தைக் கவனிப்பதற்காக வெளியூர் பயணம் செல்ல, நான் முழுவதுமாகவே தயாரிப்பு வேலைகளில் இறங்க வேண்டியதாயிற்று. மூங்கில் கழிகள் புல்லாங்குழலாய் முழுவடிவம் பெற்று ஒலியாய்- இசையாய் வெளிவரும் அத்தருணம் மகிழ்வின் உச்சக்கட்டம்" என்கின்றார் பெனிட்டா பிரேம்குமார்.

 

கேரள அரசிடமிருந்து பெறப்படும் கல்மூங்கில், மைக்கலி மற்றும் ஒலைக்கலி வகை மூங்கில்களை பெற்று கர்னாட்டிக் இசை தரும் புல்லாங்குழல் 24 வகைகளாகவும்,  ஹிந்துஸ்தானி இசை படைக்கும் புல்லாங்குழல்கள் 24 வகைகளாகவும் பிரிக்கப்பட்டு இரண்டு இசை வடிவத்திலும் புல்லாங்குழலை உருவாக்குகின்றனர். இதில், அளவில் பருமனாக இருக்கும் கட்டி தன்மையோடு உள்ள மூங்கில் கழிகள் எட்டுத்துளைகள் இடப்பட்டு கர்னாட்டிக் இசைக்கான புல்லாங்குழல்களாக உருவெடுக்க, மெலிதான, கனம் குறைவான மூங்கில் கழிகள் ஆறு துளைகள் இடப்பட்டு ஹிந்துஸ்தானி ரக இசைக்கான புல்லாங்குழலாக மாறுகின்றது.

 


ஏறக்குறைய ஐந்து நபர்களைக் கொண்டு இயங்கும் புல்லாங்குழல் தயாரிப்புக்கூடம் காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை என 10.00 மணி நேரம் இயங்கி வருகின்றது. இங்கு புல்லாங்குழல் தயாரிப்பது இன்றல்ல, நேற்றல்ல.! ஏறக்குறைய 57 வருட பாரம்பரியம் கொண்டது. 1964ம் ஆண்டு பெனிட்டாவின் கணவரின் தந்தையால் துவக்கப்பட்ட புல்லாங்குழல் தயாரிப்பு 1980ம் ஆண்டில் அவரின் மறைவிற்கு பின்னரும் அவருடைய மகன்களால் முன்னெடுத்து செல்லப்பட்டு, தற்பொழுது பெனிட்டாவால் நிர்வகிக்கப்படுகின்றது.


இசைக்கு உயிரூட்டும் பெனிட்டா பிரேம்குமாருக்கு வாழ்த்துகள்.!!!!


 

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.